நாமக்கல்: ஆஞ்சநேயர் கோயிலில் சசிகலா இன்று(ஏப்.11) சாமி தரிசனம் செய்தார். சாமி தரிசனத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அதில், அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கியது செல்லும் என சென்னை உரிமையியல் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு ''உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளோம்” என்ற ஒற்றை வரி பதிலை மட்டுமே தெரிவித்தார்.
முன்னதாக ஆஞ்சநேயர் கோயிலில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டு, சிறப்புப் பூஜைகள் நடைபெற்று, அவருக்கு ரோஜா பூ மாலை அணிவித்து கோயில் நிர்வாகத்தின் சார்பில் மரியாதை செய்யப்பட்டது.
இதையும் படிங்க: 'பீஸ்ட்' படக்குழுவினரை தன் 'ரோல்ஸ் ராய்ஸ்' காரில் அழைத்துச்சென்ற நடிகர் விஜய்!