ETV Bharat / state

அடிப்படை வசதியின்றி தவிக்கும் கிராம மக்கள்: நடவடிக்கை எடுக்கக்கோரி ஆட்சியரிடம் மனு - அடிப்படை வசதியின்றி தவிக்கும் குண்டுனிநாடு கிராம மக்கள்

நாமக்கல்: கொல்லிமலை குண்டுனிநாடு பகுதியில் வசிக்கும் கிராம மக்கள் அடிப்படை வசதி செய்து தரக்கோரி 30-க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

மனு அளிக்க வந்த கிராம மக்கள்
மனு அளிக்க வந்த கிராம மக்கள்
author img

By

Published : Jan 28, 2020, 10:45 AM IST

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அடுத்துள்ள குண்டுனிநாடு கிராமத்தில் சுமார் 60-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்துவருகின்றனர். இப்பகுதியில் பல ஆண்டுகாலமாக மக்களின் அடிப்படை வசதிகளான சாலை வசதி, குடிநீர் வசதி, பேருந்து வசதி, மருத்துவமனை வசதி என எவ்வித வசதிகளும் இல்லை, இது குறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் இன்று புகார் அளித்துள்ளனர்.

இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த சந்திரகலா கூறுகையில், “பல ஆண்டுகளாக குண்டுனிநாடு பகுதியில் எவ்வித அடிப்படை வசதியும் செய்து தரவில்லை. நோயாளிகளையும் கர்ப்பிணி பெண்களையும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டுசெல்ல டோலி கட்டி சுமார் ஐந்து கிலோமீட்டர் தொலைவிற்கு மலைப்பகுதியிலிருந்து இறங்கிவர வேண்டிய நிலை உள்ளது.

மனு அளிக்கவந்த கிராம மக்கள்

இதனால் மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர். இது குறித்து அலுவலர்களிடம் பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதன் காரணமாக தற்போது மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளோம்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஆட்சியர் அலுவலகத்தில் தீ குளிக்க முயன்ற மூதாட்டி

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அடுத்துள்ள குண்டுனிநாடு கிராமத்தில் சுமார் 60-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்துவருகின்றனர். இப்பகுதியில் பல ஆண்டுகாலமாக மக்களின் அடிப்படை வசதிகளான சாலை வசதி, குடிநீர் வசதி, பேருந்து வசதி, மருத்துவமனை வசதி என எவ்வித வசதிகளும் இல்லை, இது குறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் இன்று புகார் அளித்துள்ளனர்.

இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த சந்திரகலா கூறுகையில், “பல ஆண்டுகளாக குண்டுனிநாடு பகுதியில் எவ்வித அடிப்படை வசதியும் செய்து தரவில்லை. நோயாளிகளையும் கர்ப்பிணி பெண்களையும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டுசெல்ல டோலி கட்டி சுமார் ஐந்து கிலோமீட்டர் தொலைவிற்கு மலைப்பகுதியிலிருந்து இறங்கிவர வேண்டிய நிலை உள்ளது.

மனு அளிக்கவந்த கிராம மக்கள்

இதனால் மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர். இது குறித்து அலுவலர்களிடம் பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதன் காரணமாக தற்போது மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளோம்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஆட்சியர் அலுவலகத்தில் தீ குளிக்க முயன்ற மூதாட்டி

Intro:கொல்லிமலை குண்டுனிநாடு பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி 30க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியரிடம் மனுBody:நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அடுத்துள்ள குண்டுனிநாடு கிராமத்தில் சுமார் 60க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் பல ஆண்டுகாலமாக மக்களின் அடிப்படை வசதிகளான சாலை வசதி, குடிநீர் வசதி, பேருந்து வசதி மற்றும் மருத்துவமனை வசதி என எவ்வித வசதிகளும் இல்லை எனக்கூறி மாவட்ட ஆட்சியரிடம் இன்று புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த சந்திரகலா கூறுகையில் பல ஆண்டுகளாக குண்டுனிநாடு பகுதியில் எவ்வித அடிப்படை வசதியும் செய்து தரவில்லை எனவும் நோயாளிகளையும் கர்ப்பிணி பெண்களையும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்ல டோலி கட்டி சுமார் 5 கிலோமீட்டர் தொலைவிற்கு மலைப்பகுதியில் இருந்து இறங்கி வர வேண்டிய நிலை உள்ளதாகவும் இதனால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளதாகவும் இதுகுறித்து அதிகாரிகளிடம் பல முறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் தெரிவித்தனர். அதன்காரணமாக தற்போது மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதாகவும் தெரிவித்தனர்.Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.