ETV Bharat / state

கொல்லிமலை பகுதியில் இடி தாக்கி விவசாயி படுகாயம்

நாமக்கல்: கொல்லிமலை பகுதியில் இடி தாக்கியதில் விவசாயி ஒருவர் படுகாயமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

author img

By

Published : May 19, 2019, 11:10 AM IST

படுகாயமடைந்த பழனிசாமி

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை அடுத்த பைல்நாடு‌ பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. விவசாயியான இவர் நேற்று தனக்கு சொந்தமான கால்நடைகளை அதே பகுதியில் உள்ள வயல்வெளிக்கு மேய்ச்சலுக்காக அழைத்துச் சென்றார். அங்கு திடீரென பலத்த இடி மின்னலுடன் மழை பெய்தபோது, இடி தாக்கியதில் பழனிச்சாமி படுகாயமடைந்தார். இந்த சம்பவத்தில் மேய்ச்சலில் ஈடுபட்டிருந்த பழனிச்சாமியின் கால்நடைகள் அனைத்தும் பரிதாபமாக உயிரிழந்தன.

thunder-1
இடிதாக்கியதில் இறந்த கால்நடை

பின்னர் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஒடிவந்து காயமடைந்த பழனிச்சாமியை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இதனைத் தொடர்ந்து இடியுடன் கூடிய கனமழை பெய்யும் போது பொதுமக்கள் யாரும் வெளியிலோ அல்லது மரத்தின் அடியிலோ ஒதுங்கக் கூடாது என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை அடுத்த பைல்நாடு‌ பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. விவசாயியான இவர் நேற்று தனக்கு சொந்தமான கால்நடைகளை அதே பகுதியில் உள்ள வயல்வெளிக்கு மேய்ச்சலுக்காக அழைத்துச் சென்றார். அங்கு திடீரென பலத்த இடி மின்னலுடன் மழை பெய்தபோது, இடி தாக்கியதில் பழனிச்சாமி படுகாயமடைந்தார். இந்த சம்பவத்தில் மேய்ச்சலில் ஈடுபட்டிருந்த பழனிச்சாமியின் கால்நடைகள் அனைத்தும் பரிதாபமாக உயிரிழந்தன.

thunder-1
இடிதாக்கியதில் இறந்த கால்நடை

பின்னர் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஒடிவந்து காயமடைந்த பழனிச்சாமியை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இதனைத் தொடர்ந்து இடியுடன் கூடிய கனமழை பெய்யும் போது பொதுமக்கள் யாரும் வெளியிலோ அல்லது மரத்தின் அடியிலோ ஒதுங்கக் கூடாது என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தீ.பரத்குமார்
நாமக்கல்

மே 18

நாமக்கல்லில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது.சிலசமயங்களில் பலத்த சத்தத்துடன்  இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் நாமக்கல் கொல்லிமலை பைல்நாடு‌ பகுதியைச்சேர்ந்த பழனிச்சாமி என்பவர் தனது கால்நடைகளுடன் மேய்த்தலுக்கு சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக பலத்த சத்தத்துடன் கூடிய இடி அவரின் மீதும் அவரது கால்நடைகள் மீதும் விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த பழனிச்சாமியை அருகில் இருந்தவர்கள் மீட்டு  நாமக்கல் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவத்தில்‌ இடி விழுந்ததால்‌ அவரின் கால்நடைகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. 

 மழை பெய்துக்கொண்டிருக்கும் பொழுது மக்கள் எக்காரணத்தைக் கொண்டும் வெளியில் வராமல் இருக்கவேண்டும். கனமழையோ அல்லது பலத்த சத்தத்துடன் கூடிய இடி இடிக்கும் போது மரத்தின் கீழ் அல்லது திறந்த வெளியில் நிற்பதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு விதிமுறைகளை பின்பற்றினால் மட்டுமே உயிர்ச்சேதம் மற்றும் பொருட்சேதத்தை தவிர்க்க முடியும்.

Script in mail
Visual in ftp

File name : TN_NMK_02_18_THUNDER_VIS_7205944  

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.