ETV Bharat / state

ராசிபுரத்தில் கார் விபத்து: கொல்லிமலை வனக்காவலர் உட்பட 3 பேர் பலி!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 5, 2023, 3:22 PM IST

Rasipuram Car Accident: ராசிபுரம் அருகே அதிவேகமாக சென்ற கார் கட்டுபாட்டை இழந்து சாலையோர பேருந்து நிழல் கூடத்தின் மீது மோதியதில் கொல்லிமலை வனக்காவலர் உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

ராசிபுரம் கார் விபத்தில் வனக்காவலர் உட்பட மூவர் பலி
ராசிபுரம் கார் விபத்தில் வனக்காவலர் உட்பட மூவர் பலி

நாமக்கல்: ராசிபுரம் மோளப்பாளையம் அருகே அதிவேகமாக சென்ற பொலிரோ கார் கட்டுப்பாட்டை இழந்த நிலையில், சாலையோர பேருந்து நிழல் கூடத்தின் மீது மோதி விபத்துக்கு உள்ளானது. இதில் காரில் பயணம் செய்த வனக்காவலர் உட்பட 3 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

அந்தியூர் பகுதியைச் சேர்ந்த கொல்லிமலை வனக்காவலர் ரகுநாத், கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்த மர வியாபாரி ராஜன், கொல்லிமலையைச் சேர்ந்த மர வியாபாரி செல்வகுமார் உள்ளிட்டோர் கொல்லிமலையில் இருந்து ராசிபுரம் நோக்கி காரில் சென்று கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், மோளப்பாளையம் அருகே காரானது அதிவேகமாக சென்று கொண்டிருந்த போது, வளைவு பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோர பேருந்து நிழல் கூடத்தில் மீது மோதி விபத்துக்கு உள்ளானது. இந்த கார் விபத்தில், காரில் பயணம் செய்த 3 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.

பின்னர் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பேளுக்குறிச்சி காவல்துறையினர், மூவரது உடல்களையும் மீட்டு உடற்கூறு ஆய்விற்காக ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும், விபத்து குறித்து பேளுக்குறிச்சி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: நீட் தேர்வுக்கு பயிற்சி தருவதாகக் கூறி மாணவிக்கு பாலியல் தொல்லை...! நடந்தது என்ன?

நாமக்கல்: ராசிபுரம் மோளப்பாளையம் அருகே அதிவேகமாக சென்ற பொலிரோ கார் கட்டுப்பாட்டை இழந்த நிலையில், சாலையோர பேருந்து நிழல் கூடத்தின் மீது மோதி விபத்துக்கு உள்ளானது. இதில் காரில் பயணம் செய்த வனக்காவலர் உட்பட 3 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

அந்தியூர் பகுதியைச் சேர்ந்த கொல்லிமலை வனக்காவலர் ரகுநாத், கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்த மர வியாபாரி ராஜன், கொல்லிமலையைச் சேர்ந்த மர வியாபாரி செல்வகுமார் உள்ளிட்டோர் கொல்லிமலையில் இருந்து ராசிபுரம் நோக்கி காரில் சென்று கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், மோளப்பாளையம் அருகே காரானது அதிவேகமாக சென்று கொண்டிருந்த போது, வளைவு பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோர பேருந்து நிழல் கூடத்தில் மீது மோதி விபத்துக்கு உள்ளானது. இந்த கார் விபத்தில், காரில் பயணம் செய்த 3 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.

பின்னர் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பேளுக்குறிச்சி காவல்துறையினர், மூவரது உடல்களையும் மீட்டு உடற்கூறு ஆய்விற்காக ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும், விபத்து குறித்து பேளுக்குறிச்சி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: நீட் தேர்வுக்கு பயிற்சி தருவதாகக் கூறி மாணவிக்கு பாலியல் தொல்லை...! நடந்தது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.