ETV Bharat / state

பேருந்தை கடக்க முயன்ற பைக் - பதறவைக்கும் சிசிடிவி காட்சி!

author img

By

Published : Sep 3, 2019, 1:11 PM IST

நாமக்கல்: திருச்செங்கோடு அருகே பேருந்தை கடக்க முயன்றபோது, சாலை ஓரத்திலிருந்த புளியமரத்தின் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளாகும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

சிசிடிவி காட்சி

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா வெண்ணந்தூர் பாலிக்காடு அம்மன்கோவில் தெருவைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி சிவபிரகாசம். இவரது மகன் சந்துரு (19) டிப்ளமோ படித்துவிட்டு எலக்ட்ரீசியன் வேலை செய்துவருகிறார். இவர், நேற்று காலை 8.30 மணியளவில் திருச்செங்கோட்டில் உள்ள அவரது உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு தன்னுடைய யமஹா இருசக்கர வாகனத்தில் வீட்டிற்குச் சென்றுள்ளார்.

அப்போது, மோர்பாளையம் அடுத்துள்ள சின்னதம்பி பாளையம் அருகே சென்றபோது, முன்புறமாக சென்ற பேருந்தை அதிவேகமாகக் கடந்தபோது எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. மேலும், நிலை தடுமாறி சாலையின் ஓரத்தில் இருந்த புளியமரத்தின் மீதும் இருசக்கர வாகனம் மோதியது.

இதில் உடலில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே சந்துரு பலியானார். இது குறித்து, மல்லசமுத்திரம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். இந்நிலையில், சந்துருக்கு பின்னால் சென்ற தனியார் பேருந்தில் உள்ள சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது.

பதறவைக்கும் சிசிடிவி காட்சி

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா வெண்ணந்தூர் பாலிக்காடு அம்மன்கோவில் தெருவைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி சிவபிரகாசம். இவரது மகன் சந்துரு (19) டிப்ளமோ படித்துவிட்டு எலக்ட்ரீசியன் வேலை செய்துவருகிறார். இவர், நேற்று காலை 8.30 மணியளவில் திருச்செங்கோட்டில் உள்ள அவரது உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு தன்னுடைய யமஹா இருசக்கர வாகனத்தில் வீட்டிற்குச் சென்றுள்ளார்.

அப்போது, மோர்பாளையம் அடுத்துள்ள சின்னதம்பி பாளையம் அருகே சென்றபோது, முன்புறமாக சென்ற பேருந்தை அதிவேகமாகக் கடந்தபோது எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. மேலும், நிலை தடுமாறி சாலையின் ஓரத்தில் இருந்த புளியமரத்தின் மீதும் இருசக்கர வாகனம் மோதியது.

இதில் உடலில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே சந்துரு பலியானார். இது குறித்து, மல்லசமுத்திரம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். இந்நிலையில், சந்துருக்கு பின்னால் சென்ற தனியார் பேருந்தில் உள்ள சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது.

பதறவைக்கும் சிசிடிவி காட்சி
Intro:திருச்செங்கோடு அருகே பேருந்தை கடக்க முயன்ற போது, சாலை ஓரத்தில் இருந்த புளியமரத்தின் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளாகும் சி.சி.டி.வி காட்சிகள்.Body:நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா, வெண்ணந்தூர் பாலிக்காடு அம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் கூலிதொழிலாளி சிவபிரகாசம். இவரது மகன் சந்துரு(19) டிப்ளமோ படித்துவிட்டு எலக்ட்ரீசியன் வேலை செய்து வருகிறார். இவர், நேற்று நேற்று காலை 8.30 மணியளவில் திருச்செங்கோட்டில் உள்ள அவரது உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு தன்னுடைய யமாஹா இருசக்கர வாகனத்தில் வீட்டிற்க்கு சென்றுள்ளார். அப்போது, மோர்பாளையம் அருகே உள்ள சின்னதம்பிபாளையம் அருகே சென்ற போது, முன்புறமாக சென்ற பேருந்தை அதிவேகமாக கடந்து சென்று எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதி, நிலை தடுமாறி சாலையின் ஓரத்தில் இருந்த புளியமரத்தின் மீது வாகனம் மோதியது. இதில் உடலில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே சந்துரு பலியானார். இதுகுறித்து, மல்லசமுத்திரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த காட்சிகள் அனைத்தும் சந்துருக்கு பின்னால் சென்ற தனியார் பேருந்தில் உள்ள சி.சி.டி.வி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.