ETV Bharat / state

பாலியல் வழக்கில் சிக்கிய ஆசிரியர்: இடமாற்றத்தை கண்டித்து பெற்றோர் போராட்டம்

author img

By

Published : Sep 19, 2019, 1:43 PM IST

நாமக்கல்: பாலியல் வழக்கில் சிக்கிய ஆசிரியரை கூத்தமூக்கன்பட்டி என்ற கிராமத்துக்கு இடமாற்றம் செய்ததை கண்டித்து அக்கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

teacher-caught-in-a-sex-case-parents-protest-over-transfer-at-namakkal

நாமக்கல் மாவட்டம் புதன்சந்தை அடுத்துள்ள எஸ்.உடுப்பம் பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. அங்கு சரவணன் என்ற ஆசிரியர் பணியாற்றி வந்தார். இந்த நிலையில், கடந்த 10ஆம் தேதி அங்குள்ள பள்ளி குழந்தைகளுக்கு ஆசிரியர் சரவணன் பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக் கூறி அவரை பொதுமக்கள், பெற்றோர் சரமாரியாக தாக்கினர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதையடுத்து, ஆசிரியர் சரவணன் மீது பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு பின் அவர், விசாரணை வளையத்திற்குள் உள்ளார்.

இதனிடையே தற்போது மாவட்ட பள்ளிக்கல்வித்துறையினர் ஆசிரியர் சரவணனை பணியிட மாற்றம் செய்ய முடிவு செய்து புதுச்சத்திரம் அடுத்த கூத்தமூக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளனர். அதனைத்தொடர்ந்து ஆசிரியர் சரவணனுக்கு எதிர்ப்பு தெரிவித்து கூத்தமூக்கன்பட்டி பள்ளியில் படிக்கும் மாணவர்களை பள்ளிக்கு அனுப்பாமல் பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஆசிரியர் சரவணன் இடமாற்றத்தை கண்டித்து பெற்றோர் போராட்டம்

இதுகுறித்து அப்பகுதி பெற்றோர்கள் பேசியபோது, ஆசிரியர் சரவணன் பாலியல் வழக்கில் சிக்கியுள்ளார். அவரை பணி நீக்கம் செய்யாமல் மீண்டும் தங்களது பகுதியில் உள்ள பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது. இந்த முடிவை அரசு கைவிடவேண்டும். இல்லையென்றால் எங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பமாட்டோம் என்றனர்.

மேலும், ஆசிரியர் சரவணனை வேறு எந்த ஒரு பள்ளிக்கும் இடமாற்றம் செய்யாமல் அவரை பணி நீக்கம் செய்யவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க...

பள்ளியில் தகாத உறவில் ஈடுபட்ட ஆசிரியர்: நடவடிக்கை எடுக்க பெற்றோர்கள் போர்க்கொடி...!

பல குற்றவழக்குகளில் தொடர்புடைய 6 பேர் கைது...

நாமக்கல் மாவட்டம் புதன்சந்தை அடுத்துள்ள எஸ்.உடுப்பம் பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. அங்கு சரவணன் என்ற ஆசிரியர் பணியாற்றி வந்தார். இந்த நிலையில், கடந்த 10ஆம் தேதி அங்குள்ள பள்ளி குழந்தைகளுக்கு ஆசிரியர் சரவணன் பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக் கூறி அவரை பொதுமக்கள், பெற்றோர் சரமாரியாக தாக்கினர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதையடுத்து, ஆசிரியர் சரவணன் மீது பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு பின் அவர், விசாரணை வளையத்திற்குள் உள்ளார்.

இதனிடையே தற்போது மாவட்ட பள்ளிக்கல்வித்துறையினர் ஆசிரியர் சரவணனை பணியிட மாற்றம் செய்ய முடிவு செய்து புதுச்சத்திரம் அடுத்த கூத்தமூக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளனர். அதனைத்தொடர்ந்து ஆசிரியர் சரவணனுக்கு எதிர்ப்பு தெரிவித்து கூத்தமூக்கன்பட்டி பள்ளியில் படிக்கும் மாணவர்களை பள்ளிக்கு அனுப்பாமல் பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஆசிரியர் சரவணன் இடமாற்றத்தை கண்டித்து பெற்றோர் போராட்டம்

இதுகுறித்து அப்பகுதி பெற்றோர்கள் பேசியபோது, ஆசிரியர் சரவணன் பாலியல் வழக்கில் சிக்கியுள்ளார். அவரை பணி நீக்கம் செய்யாமல் மீண்டும் தங்களது பகுதியில் உள்ள பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது. இந்த முடிவை அரசு கைவிடவேண்டும். இல்லையென்றால் எங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பமாட்டோம் என்றனர்.

மேலும், ஆசிரியர் சரவணனை வேறு எந்த ஒரு பள்ளிக்கும் இடமாற்றம் செய்யாமல் அவரை பணி நீக்கம் செய்யவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க...

பள்ளியில் தகாத உறவில் ஈடுபட்ட ஆசிரியர்: நடவடிக்கை எடுக்க பெற்றோர்கள் போர்க்கொடி...!

பல குற்றவழக்குகளில் தொடர்புடைய 6 பேர் கைது...

Intro:தங்களது பள்ளிக்கு ஆசிரியர் சரவணனை இடமாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து கூத்தமூக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் போராட்டம்


Body:நாமக்கல் மாவட்டம் புதன்சந்தை அடுத்துள்ள எஸ்.உடுப்பம் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில்   கடந்த 10 ஆம் தேதி  பள்ளியில் ஆசிரியராக பணியாற்றிய சரவணன் என்பவரை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் அப்பள்ளியில் பயிலும் குழந்தைகளின் பெற்றோர்கள் உட்பட சரவணன் பள்ளி குழந்தைகளிடம் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக சரவணனை சரமாரியாக தாக்கியுள்ளனர்.  இதனைத்தொடர்ந்து அப்பள்ளி ஆசிரியர் சரவணன் மீது பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போஸ்கோ சட்டம் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  


தற்போது மாவட்ட பள்ளிக்கல்விதுறையினர்  ஆசிரியர் சரவணன்  பணியிடை மாற்றம் செய்து புதுச்சத்திரம் அடுத்த கூத்தமூக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ள பள்ளிக்கு இடமாற்றம் செய்து உத்திரவிட்டுள்ளனர். இந்நிலையில் இன்று அப்பள்ளியில் பயிலும் மாணவர்களை பெற்றோர்கள் ஆசிரியர் சரவணனுக்கு எதிர்ப்பு தெரிவித்து குழந்தைகளை இன்று பள்ளிக்கு அனுப்பாமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அப்பகுதி பெற்றோர்கள் கூறுகையில் " ஆசிரியர் சரவணன் கடந்த 10 ம் தேதி பள்ளியில் பாலியல் உறவில் ஈடுப்பட்டதாக கூறி பொதுமக்களால் தாக்கப்பட்டு போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரை பணி நீக்கம் செய்யாமல் மீண்டும் தங்களது பகுதி பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். எனவே அவரை தங்கள் பகுதியில் உள்ள பள்ளிக்கு வேண்டாம் என கூத்தமூக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு மாணவர்களை அனுப்பமாட்டோம் எனவும் ஆசிரியர் சரவணனை வேறு எந்த பள்ளிக்கும் இடமாற்றம் செய்யாமல் அவரை பணி நீக்கம் செய்யவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்".





Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.