ETV Bharat / state

பிரியாணி கடையில் மது விற்பனை - ரூ.80,000 மதிப்புள்ள மதுபாட்டில்கள் பறிமுதல்! - namakkal latest news

நாமக்கல்: பரமத்தி வேலூர் அருகே பிரியாணிக் கடையில் சட்டத்திற்கு புறம்பாக விற்பனை செய்யப்பட்டு வந்த ரூ.80 ஆயிரம் மதிப்பிலான மதுபாட்டில்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

namakkal
author img

By

Published : Oct 7, 2019, 9:44 PM IST

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் அருகேயுள்ள பிரியாணி கடை ஒன்றில் சட்டத்திற்கு புறம்பாக மது விற்பனை செய்யப்பட்டு வருவதாக மாவட்ட காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, பரமத்தி வேலூர் காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையில் காவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று பிரியாணி கடையில் சோதனையிட்டனர். சோதனையில், ரூ.80 ஆயிரம் மதிப்புள்ள 470 அரசு மதுபாட்டில்கள் சிக்கியது.

இதையடுத்து கடை உரிமையாளர் பத்மநாபனை கைது செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அவரிடமிருந்த மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

பிரியாணி கடையில் மது விற்பனை

இதையும் படிங்க:

நடமாடும் பார் ஆன ஆட்டோ - வைரல் வீடியோ

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் அருகேயுள்ள பிரியாணி கடை ஒன்றில் சட்டத்திற்கு புறம்பாக மது விற்பனை செய்யப்பட்டு வருவதாக மாவட்ட காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, பரமத்தி வேலூர் காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையில் காவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று பிரியாணி கடையில் சோதனையிட்டனர். சோதனையில், ரூ.80 ஆயிரம் மதிப்புள்ள 470 அரசு மதுபாட்டில்கள் சிக்கியது.

இதையடுத்து கடை உரிமையாளர் பத்மநாபனை கைது செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அவரிடமிருந்த மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

பிரியாணி கடையில் மது விற்பனை

இதையும் படிங்க:

நடமாடும் பார் ஆன ஆட்டோ - வைரல் வீடியோ

Intro:பிரியாணி கடையில் மது விற்பனை... கடையின் உரிமையாளரை கைது செய்த காவல்துறையினர்.Body:

பரமத்தி வேலூரில் பிரியாணிக்கடையில் முறைக்கேடாக பதுக்கி வைத்து விற்பனை செய்த ரூ.80 ஆயிரம் மதிப்பிலான மதுபாட்டில்கள் பறிமுதல். பிரியாணி கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் 4 ரோட்டில் உள்ள பிரியாணி கடையில் முறைக்கேடாக அதிகாலை முதல் மது விற்பனை செய்வதாக வந்த தகவலின் அடிப்படையில் பரமத்தி வேலூர் காவல் துணைக்கண்காணிப்பாளர் பழனிச்சாமி தலைமையில் போலீசாருடன் கடைக்கு சென்று தீவிர சோதனை மேற்கொண்டார். அப்போது கடையில் சுமார் 200 அரசு மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

பின்னர் கடை உரிமையாளர் பத்மநாபனை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் கார் செட்டில் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருப்பதாக கூறியதையடுத்து அங்கு சென்ற போலீசார் சுமார் 270 அரசு மதுபாட்டில்கள் என சுமார் ரூ.80 ஆயிரம் மதிப்பிலான  470 அரசு மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து கடையின் உரிமையாளர் பத்மநாபனை காவல்நிலையத்திற்கு அழைத்து வந்து வழக்கு பதிவு செய்து பரமத்தி வேலூர் போலீசார் தொடர் விசாணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த ஆண்டு இதேப்போல முறைக்கேடாக மதுப்பாட்டில்களை கடையில் பதுக்கி வைத்து விற்பனை செய்த குற்றத்திற்காக சிறைக்கு சென்றவந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.