ETV Bharat / state

குண்டும் குழியுமான ராசிபுரம் சாலை - மக்கள் வேதனை!

author img

By

Published : Nov 14, 2019, 7:19 PM IST

நாமக்கல்: ராசிபுரம் பகுதியில் குண்டும் குழியுமாக உள்ள சாலைகளை சீரமைக்கக் கோரியும், முறையாக குடிநீர் விநியோகிக்கக் கோரியும் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

dmk

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகராட்சியிலுள்ள பல்வேறு பகுதிகளில் சாலை குண்டும் குழியுமாக காட்சியாளிக்கிறது. தினமும் பல ஆயிரம் வாகன ஓட்டிகள் பயன்படுத்தும் இந்த முக்கிய சாலை முழுவதும் சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது.

மேலும் இந்த சாலையில் வரும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் ஊருக்குள் வராமல் புறவழிச்சாலை வழியாக புதிய பேருந்து நிலையம் செல்கிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். மேலும், இப்பகுதிக்கு 20 நாட்களுக்கு ஒரு முறை தான் தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது.

காலி குடங்களுடன் ஆர்ப்பார்ட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்
காலி குடங்களுடன் ஆர்ப்பார்ட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்

எனவே இதனைக் கண்டித்து பழைய பேருந்து நிலையம் முன்பு கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் முன்னாள் மத்திய இணை அமைச்சருமான காந்தி செல்வன் மற்றும் நகரச் செயலாளர் சங்கர் தலைமையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பியவாறு காலி குடங்களுடன் 500க்கும் மேற்பட்ட பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க: 'பள்ளிகளில் மாணவர்கள் குடிநீர் அருந்த 10 நிமிடங்கள் ஒதுக்கப்படும்' - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவிப்பு!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகராட்சியிலுள்ள பல்வேறு பகுதிகளில் சாலை குண்டும் குழியுமாக காட்சியாளிக்கிறது. தினமும் பல ஆயிரம் வாகன ஓட்டிகள் பயன்படுத்தும் இந்த முக்கிய சாலை முழுவதும் சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது.

மேலும் இந்த சாலையில் வரும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் ஊருக்குள் வராமல் புறவழிச்சாலை வழியாக புதிய பேருந்து நிலையம் செல்கிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். மேலும், இப்பகுதிக்கு 20 நாட்களுக்கு ஒரு முறை தான் தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது.

காலி குடங்களுடன் ஆர்ப்பார்ட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்
காலி குடங்களுடன் ஆர்ப்பார்ட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்

எனவே இதனைக் கண்டித்து பழைய பேருந்து நிலையம் முன்பு கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் முன்னாள் மத்திய இணை அமைச்சருமான காந்தி செல்வன் மற்றும் நகரச் செயலாளர் சங்கர் தலைமையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பியவாறு காலி குடங்களுடன் 500க்கும் மேற்பட்ட பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க: 'பள்ளிகளில் மாணவர்கள் குடிநீர் அருந்த 10 நிமிடங்கள் ஒதுக்கப்படும்' - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவிப்பு!

Intro:ராசிபுரத்தில் குண்டும் குழியுமாக உள்ள சாலைகளை சீரமைக்ககோரியும் முறையாக குடிநீர் வினியோகிக்க கோரியும் நகராட்சியின் சீர்கேட்டை கண்டித்து பழையபேருந்து நிலையத்தில் திமுக சார்பில் போராட்டத்தில் ஈடுபட்டனர்Body:நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகராட்சியில் உள்ள அனைத்து சாலைகளும் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் ஊருக்குள் வராமல் புறவழிச்சாலை வழியாக புதிய பேருந்து நிலையம் செல்கிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் எனவே போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும்,
ராசிபுரம் நகராட்சியில் கடந்த திமுக ஆட்சியின் போது, வறட்சி காலத்திலும் 4 நாட்களுக்கு ஒருமுறை -குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது.
ஆனால், தற்போது 20 நாட்களுக்கு ஒரு முறை தான் தண்ணீர் வருகிறது. அது மட்டுமின்றி தண்ணீர் கட்டணமும் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இதனை கண்டித்து, ராசிபுரம் பழைய பேருந்து நிலையம் முன்பு கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் முன்னாள் மத்திய இணை அமைச்சருமான திரு. காந்தி செல்வன் மற்றும் நகர செயலாளர் சங்கர் தலைமையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பிவாறு காலி குடங்களுடன் 500 க்கு மேற்பட்ட பெண்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.