ETV Bharat / state

இறந்த குழந்தையை ஆம்புலன்ஸில் கொண்டுசெல்ல வசதி இல்லாத ஏழைத் தாய்

author img

By

Published : Nov 21, 2020, 7:26 PM IST

Updated : Nov 21, 2020, 7:35 PM IST

நாமக்கல்: இறந்த குழந்தையை ஆம்புலன்ஸில் கொண்டுசெல்ல வசதி இல்லாததால் பேருந்து நிலையத்தில் இளம் தாய் கதறி அழுத சம்பவம் அங்கிருந்தவர்களை பெரும் வருத்தமடையச் செய்தது.

death
death

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த மின்னக்கல் பகுதியைச் சேர்ந்தவர் மேகநாதன் (25). இவர் ஒரு கட்டட தொழிலாளி. இவருடைய மனைவி அபிராமி (19) இவர்களுக்கு ஆறு மாதமே ஆன ஆண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் கடந்த சில தினங்களாக குழந்தையின் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தது. குழந்தையின் உடல்நிலை மிகவும் மோசமானதால் வெண்ணந்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் மேல்சிகிச்சைக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

death
கதறி அழும் ஏழைத் தாய்

அங்கு குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். இறந்த குழந்தையை ஆம்புலன்ஸில் கொண்டுசெல்ல வசதியில்லாததால் அந்த ஏழைப்பெண் பேருந்தில் கொண்டுசெல்ல முயற்சித்தார். ஆனால் பேருந்து நடத்துநர்கள் அப்பெண்ணை பேருந்தில் ஏற்ற சம்மதிக்கவில்லை.

இதனால் செய்வதறியாது அந்த இளம் தாய் பேருந்து நிலையத்திலேயே கதறி அழுதார். இதுகுறித்து அருகிலிருந்த கிராம நிர்வாக அலுவலருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அவர் ஒரு ஆட்டோவில் இறந்த குழந்தையையும் தாயையும் அனுப்பிவைத்தார்.

வறுமையின் காரணமாக பேருந்து நிலையத்தில் இறந்த ஆறு மாத குழந்தையை கொண்டுசெல்ல வழியில்லாமல் பரிதவித்த தாயை பார்த்தவர்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்தனர்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த மின்னக்கல் பகுதியைச் சேர்ந்தவர் மேகநாதன் (25). இவர் ஒரு கட்டட தொழிலாளி. இவருடைய மனைவி அபிராமி (19) இவர்களுக்கு ஆறு மாதமே ஆன ஆண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் கடந்த சில தினங்களாக குழந்தையின் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தது. குழந்தையின் உடல்நிலை மிகவும் மோசமானதால் வெண்ணந்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் மேல்சிகிச்சைக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

death
கதறி அழும் ஏழைத் தாய்

அங்கு குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். இறந்த குழந்தையை ஆம்புலன்ஸில் கொண்டுசெல்ல வசதியில்லாததால் அந்த ஏழைப்பெண் பேருந்தில் கொண்டுசெல்ல முயற்சித்தார். ஆனால் பேருந்து நடத்துநர்கள் அப்பெண்ணை பேருந்தில் ஏற்ற சம்மதிக்கவில்லை.

இதனால் செய்வதறியாது அந்த இளம் தாய் பேருந்து நிலையத்திலேயே கதறி அழுதார். இதுகுறித்து அருகிலிருந்த கிராம நிர்வாக அலுவலருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அவர் ஒரு ஆட்டோவில் இறந்த குழந்தையையும் தாயையும் அனுப்பிவைத்தார்.

வறுமையின் காரணமாக பேருந்து நிலையத்தில் இறந்த ஆறு மாத குழந்தையை கொண்டுசெல்ல வழியில்லாமல் பரிதவித்த தாயை பார்த்தவர்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்தனர்.

Last Updated : Nov 21, 2020, 7:35 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.