ETV Bharat / state

நிலப்பிரச்னை: புகார் அளித்தவரை தாக்கிய காவல் ஆய்வாளர்! - land problem case namakkal

நாமக்கல்: நிலப்பிரச்சனை தொடர்பாகப் புகார் அளிக்கச் சென்றவரை காவல் ஆய்வாளர் தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

namakkal
author img

By

Published : Nov 9, 2019, 7:36 PM IST

நாமக்கல் அடுத்துள்ள திருமலைப்பட்டியைச் சேர்ந்தவர் சரவணன். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த செங்கோடன் என்பவருக்கும் நிலப்பிரச்னை இருந்துள்ளதாகத் தெரிகிறது. இது சம்பந்தமாக நாமக்கல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றுவருகிறது.

வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் நிலையில் செங்கோடன் சரவணனின் நிலத்தில் சாலைபோட்டதாகக் கூறப்படுகிறது. இது குறித்து சரவணன் புதுச்சத்திரம் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர் கணேசனிடம் புகார் அளித்துள்ளார். ஆனால் புகார் தொடர்பாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் சரவணன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசுவிடம் புகார் மனு அளித்தார்.

சரவணன் அளித்த புகார் மனுவை மீண்டும் புதுச்சத்திரம் காவல் ஆய்வாளர் கணேசனே விசாரிக்க பரிந்துரை செய்து காவல் கண்காணிப்பாளர் சரவணனை அனுப்பியுள்ளார். பின்னர் மனுவை விசாரித்த புதுச்சத்திரம் காவல் ஆய்வாளர் கணேசன் புகார் அளித்த சரவணனை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த சரவணன் சேந்தமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

காவல் ஆய்வாளர் தாக்கியதாக சரவணன் குற்றச்சாட்டு

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சரவணன், காவல் ஆய்வாளர் கம்பி, கட்டை உள்ளிட்டவற்றால் தன்னை தாக்கியதாகவும் நிலத்தினை செங்கோடனுக்கு விட்டுத் தருமாறு கூறியதாகத் தெரிவித்தார். வழக்கினை திரும்பப்பெறாவிட்டால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும் சரவணன் கூறினார்.

காவல் ஆய்வாளர் தாக்கியதால் கால், கைகள், மார்பு பகுதியில் பலத்தக் காயம் ஏற்பட்டதாகவும் தனது உயிருக்கு ஏதேனும் என்றால் காவல் ஆய்வாளர் கணேசன்தான் காரணம் என்றும் சரவணன் தெரிவித்தார்.

காவல் கண்காணிப்பாளர் விளக்கம்

இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசுவிடம் கேட்டபோது, ஆய்வாளர் தாக்கவில்லை என்று தெரிவித்தார். சரவணனை ஆய்வாளர் கைது செய்துவிடுவார் என்ற அச்சத்தில்தான் மருத்துவமனையில் சரவணன் சேர்ந்துள்ளார் என்றும் இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுப்பதாகவும் கூறினார்.

இதையும் படிங்க: காவலரின் மனிதநேயமிக்க செயலுக்கு குவியும் பாராட்டுகள்!

நாமக்கல் அடுத்துள்ள திருமலைப்பட்டியைச் சேர்ந்தவர் சரவணன். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த செங்கோடன் என்பவருக்கும் நிலப்பிரச்னை இருந்துள்ளதாகத் தெரிகிறது. இது சம்பந்தமாக நாமக்கல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றுவருகிறது.

வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் நிலையில் செங்கோடன் சரவணனின் நிலத்தில் சாலைபோட்டதாகக் கூறப்படுகிறது. இது குறித்து சரவணன் புதுச்சத்திரம் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர் கணேசனிடம் புகார் அளித்துள்ளார். ஆனால் புகார் தொடர்பாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் சரவணன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசுவிடம் புகார் மனு அளித்தார்.

சரவணன் அளித்த புகார் மனுவை மீண்டும் புதுச்சத்திரம் காவல் ஆய்வாளர் கணேசனே விசாரிக்க பரிந்துரை செய்து காவல் கண்காணிப்பாளர் சரவணனை அனுப்பியுள்ளார். பின்னர் மனுவை விசாரித்த புதுச்சத்திரம் காவல் ஆய்வாளர் கணேசன் புகார் அளித்த சரவணனை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த சரவணன் சேந்தமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

காவல் ஆய்வாளர் தாக்கியதாக சரவணன் குற்றச்சாட்டு

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சரவணன், காவல் ஆய்வாளர் கம்பி, கட்டை உள்ளிட்டவற்றால் தன்னை தாக்கியதாகவும் நிலத்தினை செங்கோடனுக்கு விட்டுத் தருமாறு கூறியதாகத் தெரிவித்தார். வழக்கினை திரும்பப்பெறாவிட்டால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும் சரவணன் கூறினார்.

காவல் ஆய்வாளர் தாக்கியதால் கால், கைகள், மார்பு பகுதியில் பலத்தக் காயம் ஏற்பட்டதாகவும் தனது உயிருக்கு ஏதேனும் என்றால் காவல் ஆய்வாளர் கணேசன்தான் காரணம் என்றும் சரவணன் தெரிவித்தார்.

காவல் கண்காணிப்பாளர் விளக்கம்

இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசுவிடம் கேட்டபோது, ஆய்வாளர் தாக்கவில்லை என்று தெரிவித்தார். சரவணனை ஆய்வாளர் கைது செய்துவிடுவார் என்ற அச்சத்தில்தான் மருத்துவமனையில் சரவணன் சேர்ந்துள்ளார் என்றும் இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுப்பதாகவும் கூறினார்.

இதையும் படிங்க: காவலரின் மனிதநேயமிக்க செயலுக்கு குவியும் பாராட்டுகள்!

Intro:நாமக்கல் அருகே நிலப்பிரச்சனை தொடர்பாக புகார் அளித்தவரை காவல் ஆய்வாளர் தாக்கியதாக  சேந்தமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதி, ஆய்வாளர் கொலை மிரட்டல் விடுப்பதாக விவசாயி குற்றச்சாட்டு


Body:நாமக்கல் அடுத்துள்ள திருமலைப்பட்டியை சேர்ந்தவர் சரவணன். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மணி (எ) செங்கோடன் என்பவருக்கும் ஏற்கனவே நிலம் தொடர்பான பிரச்சினை இருந்துள்ளது. இது சம்பந்தமாக நாமக்கல் நீதிமன்றத்தில் கடந்த 2017 வழக்கு தொடரப்பட்டு வழக்கு விசாரணை நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில் செங்கோடன் சரவணனின் நிலத்தில் சாலை போட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சரவணன் புதுச்சத்திரம் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர் கணேசனிடம் புகார் அளித்துள்ளார். புகார் தொடர்பாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் சரவணன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசுவிடம் புகார் அளித்தார். அந்த  புகார் மனுவை மீண்டும் புதுச்சத்திரம் காவல் ஆய்வாளர் கணேசனே விசாரிக்க பரிந்துரை செய்து அனுப்பியுள்ளார். பின்னர் மனுவை விசாரித்த புதுச்சத்திரம் காவல் ஆய்வாளர் கணேசன் புகார் அளித்த சரவணனை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த சரவணன் சேந்தமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.


இதுகுறித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சரவணன் கூறுகையில் காவல் கண்பாளரிடம் புகார் அளித்த பிறகு புதுச்சத்திரம் காவல் ஆய்வாளர் கணேசன் விசாரணைக்கு காவல்நிலையத்திற்கு அழைத்ததாகவும் அங்கு சென்றபோது புகார் அளித்ததற்காக காவல் ஆய்வாளர் கணேசன் கம்பி,கட்டை உள்ளிட்ட பொருட்களால் தாக்கியதாகவும் நிலத்தினை செங்கோடனுக்கு விட்டு தருமாறும் வழக்கினை திரும்ப பெறுமாறும் இல்லையெனில் அடித்தே கொலை செய்து விடுவதாகவும் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் மேலும் காவல் ஆய்வாளர் கணேசன் தாக்கியதால் கால்,கைகள்,மார்பு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டதாகவும் தனது உயிருக்கு ஏதேனும் என்றால் காவல் ஆய்வாளர் கணேசன் தான் காரணம் என்றும் தெரிவித்தார்.


இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசுவிடம் கேட்ட போது ஆய்வாளர் தாக்கவில்லை எனேஉம், அவரை கைது செய்து விடுவார் என்ற பயத்தில் மருத்துவமனையில் சேர்ந்துள்ளதாக இது குறித்து விசாரிப்பதாகவும் தெரிவித்தார்.




Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.