ETV Bharat / state

ஊர் முழுவதும் புகை மூட்டம்.. மூச்சுத்திணறலால் பொதுமக்கள் பாதிப்பு...

author img

By

Published : Dec 3, 2019, 11:37 PM IST

நாமக்கல்: சத்தியநாயக்கன்பாளையம் ஏரியில் பிளாஸ்டிக் மற்றும் ரசாயன கழிவுகளை கொட்டி எரித்ததால் புகைமூட்டம் ஏற்பட்டு பொது மக்களுக்கு மூச்சுத் திணறல் உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டன.

சத்தியநாயக்கன்பாளையம் ஏரியில் பிளாஸ்டிக் கழிவுகள் எரிப்பு
சத்தியநாயக்கன்பாளையம் ஏரியில் பிளாஸ்டிக் கழிவுகள் எரிப்பு


நாமக்கல் மாவட்டம் சத்தியநாயக்கன்பாளையம் கிராமத்தில் உள்ள ஏரியானது தற்போது வறண்டு தண்ணீர் இல்லாமல் காணப்படுகிறது. இதனால் சிலர் ரசாயன கழிவுகளையும் குப்பை கழிவுகளையும் இந்த ஏரியில் கொண்டு வந்து கொட்டி வருகின்றனர். இது குறித்து பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று இரவு சமூக விரோதிகள் சிலர் இந்த பிளாஸ்டிக் கழிவுகளுக்கு தீ வைத்துவிட்டனர். இதனால் பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து புகை ஏற்பட்டு ஊருக்குள் பரவத் தொடங்கி உள்ளது. முதலில் பனிமூட்டம் என்று கருதிய பொதுமக்கள் புகையின் தாக்கத்தால் மூச்சுத்திணறல், நெஞ்சு எரிச்சல், இருமல் போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு ஆளாகினர்.

சத்தியநாயக்கன்பாளையம் ஏரியில் பிளாஸ்டிக் கழிவுகள் எரிப்பு

மேலும் பிளாஸ்டிக் கழிவுகள் தீ பிடித்து எரிவதை உடனடியாக தடுக்க வேண்டும் என்றும், ஏரியில் குப்பை கொட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதியினர் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:

தீண்டாமை சுவர்: "தந்தையின் மனிதத்தால் மரணிக்காத பிள்ளைகள்"


நாமக்கல் மாவட்டம் சத்தியநாயக்கன்பாளையம் கிராமத்தில் உள்ள ஏரியானது தற்போது வறண்டு தண்ணீர் இல்லாமல் காணப்படுகிறது. இதனால் சிலர் ரசாயன கழிவுகளையும் குப்பை கழிவுகளையும் இந்த ஏரியில் கொண்டு வந்து கொட்டி வருகின்றனர். இது குறித்து பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று இரவு சமூக விரோதிகள் சிலர் இந்த பிளாஸ்டிக் கழிவுகளுக்கு தீ வைத்துவிட்டனர். இதனால் பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து புகை ஏற்பட்டு ஊருக்குள் பரவத் தொடங்கி உள்ளது. முதலில் பனிமூட்டம் என்று கருதிய பொதுமக்கள் புகையின் தாக்கத்தால் மூச்சுத்திணறல், நெஞ்சு எரிச்சல், இருமல் போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு ஆளாகினர்.

சத்தியநாயக்கன்பாளையம் ஏரியில் பிளாஸ்டிக் கழிவுகள் எரிப்பு

மேலும் பிளாஸ்டிக் கழிவுகள் தீ பிடித்து எரிவதை உடனடியாக தடுக்க வேண்டும் என்றும், ஏரியில் குப்பை கொட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதியினர் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:

தீண்டாமை சுவர்: "தந்தையின் மனிதத்தால் மரணிக்காத பிள்ளைகள்"

Intro:நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை அடுத்துள்ள சத்தியநாயக்கன்பாளையம் ஏரியில் பிளாஸ்டிக் மற்றும் ரசாயன கழிவுகளை கொட்டி எரித்ததால் புகைமூட்டம் பொது மக்களுக்கு மூச்சுத்திணறல் தக்க நடவடிக்கை எடுக்க அரசுக்கு கோரிக்கைBody:நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்துள்ள சத்தியநாயக்கன்பாளையம் கிராமத்தில் ஏரி உள்ளது. தற்போது இந்த ஏரி வறண்டு தண்ணீர் இல்லாமல் உள்ளது. இதனை பயன்படுத்தி சிலர் இந்த ஏரியில் ரசாயன கழிவுகளையும் பிளாஸ்டிக் பைகள் மற்றும் குப்பை கழிவுகளையும் ஏரியில் கொண்டு வந்து கொட்டி வருகின்றனர். இது குறித்து பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று இரவு யாரோ சமூக விரோதிகள் சிலர் இந்த பிளாஸ்டிக் கழிவுகளுக்கு தீ வைத்து விட்டனர். இதனால் பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து புகை ஏற்பட்டு ஊருக்குள் பரவத் தொடங்கி உள்ளது. முதலில் பனிமூட்டம் என்று கருதிய பொதுமக்கள் புகையின் நெடி தாங்காமல் மூச்சுத்திணறல் நெஞ்சு எரிச்சல், இருமல், போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு ஆளாகியதை அடுத்து இந்த புகை எங்கிருந்து வருகிறது என்று இன்று காலை பார்த்த போது ஏரியில் கொட்டப்பட்டிருந்த ரசாயன கழிவுகளும் பிளாஸ்டிக் கழிவுகளும் எரிந்து கொண்டிருப்பதால் அதிலிருந்து கிளம்பிய புகை தான் ஊர் முழுவதும் பரவி பலருக்கு பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தி உள்ளது என்பது தெரிய வந்தது.

பிளாஸ்டிக் கழிவுகள் தீ பிடித்து எரிவதை உடனடியாக தடுக்க வேண்டும் என்றும் ,ஏரியில் குப்பை கொட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த புகை மூட்டம் காரணமாக சத்தியநாயக்கன்பாளையத்தை சுற்றியுள்ள குமாரமங்கலம் உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்ட ஊர்கள் பாதிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.