ETV Bharat / state

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வாழைத்தாரின் விலை அதிகரிப்பு

author img

By

Published : Jan 13, 2020, 1:23 PM IST

நாமக்கல்: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பரமத்தி வேலூர் சந்தையில் வாழைத்தாரின் விலை அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வாழைத்தாரின் விலை அதிகரிப்பு
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வாழைத்தாரின் விலை அதிகரிப்பு

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் காவிரி கரையோர பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் வாழை பயிரிடப்பட்டு கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும், சேலம், கோவை, ஈரோடு, கரூர், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் தினம்தோறும் லாரிகள் மூலம் அனுப்பப்பட்டு வருகின்றன.

மேலும், பரமத்தி வேலூர் வாழைத்தார் சந்தையிலும் விவசாயிகள் தங்களது வாழைத்தார்களை நேரடியாக கொண்டுவந்து விற்பனை செய்கின்றனர்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வாழைத்தாரின் விலை அதிகரிப்பு

இந்நிலையில், இன்று நடைபெற்ற வாழைத்தார் சந்தையில் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட வாழைத்தார்கள் கொண்டு வரப்பட்டிருந்தன. இதில் பூவன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ. 550 வரை விற்பனையானது. ரஸ்தாலி அதிகபட்சமாக ரூ. 400க்கும், தேன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ. 350க்கும், கற்பூரவள்ளி ரூ. 450க்கும் ஏலம் போனது. மொந்தன் வாழைக்காய் ஒன்று ரூ. 6 முதல் ரூ. 7வரை விற்பனையானது.

இதுகுறித்து வாழை விவசாயிகள் கூறுகையில், "சென்ற ஆண்டை ஒப்பிடுகையில் இன்று நடைபெற்ற ஏலத்தில் வாழைத்தார் விலை அதிகரித்துள்ளது. பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதால் வாழைத்தார் விலை உயர்ந்துள்ளது" என்றார்.

மேலும், வரும் காலங்களில் வாழைத்தார் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும், இதனால் விவசாயிகள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: கரும்பு விலை சரிவு: வேதனையில் விவசாயிகள்

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் காவிரி கரையோர பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் வாழை பயிரிடப்பட்டு கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும், சேலம், கோவை, ஈரோடு, கரூர், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் தினம்தோறும் லாரிகள் மூலம் அனுப்பப்பட்டு வருகின்றன.

மேலும், பரமத்தி வேலூர் வாழைத்தார் சந்தையிலும் விவசாயிகள் தங்களது வாழைத்தார்களை நேரடியாக கொண்டுவந்து விற்பனை செய்கின்றனர்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வாழைத்தாரின் விலை அதிகரிப்பு

இந்நிலையில், இன்று நடைபெற்ற வாழைத்தார் சந்தையில் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட வாழைத்தார்கள் கொண்டு வரப்பட்டிருந்தன. இதில் பூவன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ. 550 வரை விற்பனையானது. ரஸ்தாலி அதிகபட்சமாக ரூ. 400க்கும், தேன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ. 350க்கும், கற்பூரவள்ளி ரூ. 450க்கும் ஏலம் போனது. மொந்தன் வாழைக்காய் ஒன்று ரூ. 6 முதல் ரூ. 7வரை விற்பனையானது.

இதுகுறித்து வாழை விவசாயிகள் கூறுகையில், "சென்ற ஆண்டை ஒப்பிடுகையில் இன்று நடைபெற்ற ஏலத்தில் வாழைத்தார் விலை அதிகரித்துள்ளது. பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதால் வாழைத்தார் விலை உயர்ந்துள்ளது" என்றார்.

மேலும், வரும் காலங்களில் வாழைத்தார் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும், இதனால் விவசாயிகள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: கரும்பு விலை சரிவு: வேதனையில் விவசாயிகள்

Intro:பரமத்தி வேலூரில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வாழைத்தார் சந்தையில் வாழைத்தாரின் விலை அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி

Body:நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் காவிரி கரையோர பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் வாழை பயிர் செய்யப்பட்டுள்ளல்.இங்கு விளையும் வாழைத்தார்கள் கேரளா,கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும், சேலம்,கோவை, ஈரோடு,கரூர்,திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும் தினந்தோறும் லாரிகள் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது. மேலும் பரமத்தி வேலூர் மட்டுமின்றி சுற்றுவட்டார விவசாயிகள் வாழைத்தார் சந்தைக்கு தங்களது வாழைத்தார்களை
நேரடியாக கொண்டு வந்து விற்பனை செய்வது பரமத்திவேலூர் வாழைசந்ததையின் சிறப்பம்சம் ஆகும். இந்நிலையில் இன்று நடைபெற்ற ஏலத்திற்கு ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட வாழைத்தார்கள் கொண்டு வரப்பட்டிருந்தது. இதில் பூவன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.550 வரை விற்பனையானது. ரஸ்தாலி வாழைத்தார் அதிகபட்சமாக
ரூ.400–க்கும், தேன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.350–க்கும்,
கற்பூரவள்ளி வாழைத்தார் ரூ.450–க்கும் ஏலம் போனது.மொந்தன் வாழைக்காய்
ஒன்று ரூ.6 முதல் ரூ.7–க்கு விற்பனையானது. இதுகுறித்து வாழை விவசாயி கூறுகையில் சென்ற ஆண்டை ஒப்பிடுகையில் இன்று நடைபெற்ற ஏலத்தில் விலை அதிகரித்துள்ளதாகவும் பொங்கல் பண்டிகை நெருங்கிக்கொண்டிருப்பதால் பண்டிகை வாழை தார்களின் விலை அதிகரித்துள்ளதாகவும் வரும் காலங்களில் மேலும் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் இதன்காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளதாக தெரிவித்தனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.