ETV Bharat / state

நாப்கின் தயாரிக்கும் பெண்ணின் நம்பிக்கை! - organic napkins produced by Namakkal women

நாமக்கல்: பெண்களின் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் பிரச்னைகளை எதிர்கொள்ள முயற்சி எடுத்துள்ள நாமக்கல் பெண்.

நாப்கின் தயாரிக்கும் பெண்ணின் நம்பிக்கை!
நாப்கின் தயாரிக்கும் பெண்ணின் நம்பிக்கை!
author img

By

Published : Feb 2, 2020, 11:59 AM IST

பெண்கள் உடல் ரீதியாக சந்திக்கும் முக்கிய பிரச்னைகளில் ஒன்று மாதவிடாய் சுழற்சி. இயற்கையாக நடைபெறும் உடல் ரீதியான மாற்றம் என்றபோதிலும், இவற்றுக்கு சமூக ரீதியாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கால மாற்றத்தால் கட்டுப்பாடுகள் தளர்ந்தாலும், இப்பிரச்னை வேறு விதமாக உருவெடுத்துள்ளது. மாதவிடாய் காலத்தில் பெண்கள் பயன்படுத்தும் நாப்கின்கள் தான் இப்பிரச்சினையின் ஆணிவேர்.

சுகாதார மற்ற நாப்கின், மண்ணில் மக்காத வேதிப்பொருட்கள் மூலம் தயாரிக்கப்படும் நாப்கின்களால் பல்வேறு உடல் சார்ந்த நோய்களுக்கும் பெண்கள் ஆளாக வாய்ப்புள்ளது. இந்த பாதிப்பே, வேதிப்பொருள் கலப்படமில்லாமல், முற்றிலும் இயற்கையான முறையில் கிடைக்கும் பஞ்சுகளை கொண்டு நாப்கின் தயார் செய்யும் தொழில் நோக்கி என்னை தள்ளியது என்கிறார், நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே உள்ள பொத்தனூரைச் சேர்ந்த டி. சுமதி.

நாப்கின் தயாரிப்பிற்காக மாவட்ட தொழில் மையம் மூலம் வங்கிக் கடன் ரூ.2லட்சம் பெற்றதாகவும், பல்வேறு இடர்பாடுகளுக்கிடையே 2011ஆம் ஆண்டு இத்தொழிலைத் தொடங்கினேன். நாப்கின் தயாரிப்பில் பல்வேறு முன்னனி நிறுவனங்கள் உள்ள சூழலில் தங்களது தயாரிப்பை எந்த வகையில் முன்னிலைப்படுத்துவது என்று யோசித்தபோதுதான், எவ்வித வேதிப்பொருள் கலப்பிடாமலும், இயற்கை முறையில் கிடைக்கும் பஞ்சுகளைக் கொண்டும் நாப்கின் தயாரிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது என தெரிவிக்கிறார். நாப்கின் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் சுமதி.

நாப்கின் தயாரிக்கும் பெண்ணின் நம்பிக்கை!

வேதிப்பொருள் மூலம் தயாரிக்கப்படும் நாப்கின் பயன்படுத்தும்போது தோல் சம்மந்தப்பட்ட பிரச்னைகள் வரவாய்ப்புள்ளது. இயற்கையாக கிடைக்கும் பஞ்சு மூலம் தயாரிக்கப்படும் நாப்பின்களால் பாதிப்பு எதுவும் இல்லை. இவை மண்ணில் மக்கும் தன்மையும் கொண்டது. இத்தொழில் மூலம் மாதம் ரூ. 40 ஆயிரம் வருவாய் ஈட்டமுடிகிறது என்றும், இந்நிறுவனத்தில் ஐந்து பெண்கள் பணிபுரிகின்றனர் எனவும் சுமதி தெரிவிக்கிறார். தற்போது தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகம், கேரளா, தெலங்கானா ஆகிய மாநிலங்களிலும் சுமதியின் நாப்கின் விற்பனையாகிறது.

சுயதொழில் தொடங்க வேண்டுமென்றால் எத்தனையோ தொழில்கள் தொடங்கலாம். ஆனால், பெண்கள் அன்றாடம் சந்திக்கும் முதற்பிரச்னை மாதவிடாய். அதற்கு பயனுள்ளதாக இருக்க நாப்கின் தயாரிப்பில் ஈடுபட்டே ஆக வேண்டும் என்ற சுமதியின் உறுதியான மனநிலை அனைத்து பெண்களுக்கும் வர வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

இதையும் படிங்க...பட்ஜெட் குறித்து தலைவர்கள் கருத்து

பெண்கள் உடல் ரீதியாக சந்திக்கும் முக்கிய பிரச்னைகளில் ஒன்று மாதவிடாய் சுழற்சி. இயற்கையாக நடைபெறும் உடல் ரீதியான மாற்றம் என்றபோதிலும், இவற்றுக்கு சமூக ரீதியாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கால மாற்றத்தால் கட்டுப்பாடுகள் தளர்ந்தாலும், இப்பிரச்னை வேறு விதமாக உருவெடுத்துள்ளது. மாதவிடாய் காலத்தில் பெண்கள் பயன்படுத்தும் நாப்கின்கள் தான் இப்பிரச்சினையின் ஆணிவேர்.

சுகாதார மற்ற நாப்கின், மண்ணில் மக்காத வேதிப்பொருட்கள் மூலம் தயாரிக்கப்படும் நாப்கின்களால் பல்வேறு உடல் சார்ந்த நோய்களுக்கும் பெண்கள் ஆளாக வாய்ப்புள்ளது. இந்த பாதிப்பே, வேதிப்பொருள் கலப்படமில்லாமல், முற்றிலும் இயற்கையான முறையில் கிடைக்கும் பஞ்சுகளை கொண்டு நாப்கின் தயார் செய்யும் தொழில் நோக்கி என்னை தள்ளியது என்கிறார், நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே உள்ள பொத்தனூரைச் சேர்ந்த டி. சுமதி.

நாப்கின் தயாரிப்பிற்காக மாவட்ட தொழில் மையம் மூலம் வங்கிக் கடன் ரூ.2லட்சம் பெற்றதாகவும், பல்வேறு இடர்பாடுகளுக்கிடையே 2011ஆம் ஆண்டு இத்தொழிலைத் தொடங்கினேன். நாப்கின் தயாரிப்பில் பல்வேறு முன்னனி நிறுவனங்கள் உள்ள சூழலில் தங்களது தயாரிப்பை எந்த வகையில் முன்னிலைப்படுத்துவது என்று யோசித்தபோதுதான், எவ்வித வேதிப்பொருள் கலப்பிடாமலும், இயற்கை முறையில் கிடைக்கும் பஞ்சுகளைக் கொண்டும் நாப்கின் தயாரிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது என தெரிவிக்கிறார். நாப்கின் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் சுமதி.

நாப்கின் தயாரிக்கும் பெண்ணின் நம்பிக்கை!

வேதிப்பொருள் மூலம் தயாரிக்கப்படும் நாப்கின் பயன்படுத்தும்போது தோல் சம்மந்தப்பட்ட பிரச்னைகள் வரவாய்ப்புள்ளது. இயற்கையாக கிடைக்கும் பஞ்சு மூலம் தயாரிக்கப்படும் நாப்பின்களால் பாதிப்பு எதுவும் இல்லை. இவை மண்ணில் மக்கும் தன்மையும் கொண்டது. இத்தொழில் மூலம் மாதம் ரூ. 40 ஆயிரம் வருவாய் ஈட்டமுடிகிறது என்றும், இந்நிறுவனத்தில் ஐந்து பெண்கள் பணிபுரிகின்றனர் எனவும் சுமதி தெரிவிக்கிறார். தற்போது தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகம், கேரளா, தெலங்கானா ஆகிய மாநிலங்களிலும் சுமதியின் நாப்கின் விற்பனையாகிறது.

சுயதொழில் தொடங்க வேண்டுமென்றால் எத்தனையோ தொழில்கள் தொடங்கலாம். ஆனால், பெண்கள் அன்றாடம் சந்திக்கும் முதற்பிரச்னை மாதவிடாய். அதற்கு பயனுள்ளதாக இருக்க நாப்கின் தயாரிப்பில் ஈடுபட்டே ஆக வேண்டும் என்ற சுமதியின் உறுதியான மனநிலை அனைத்து பெண்களுக்கும் வர வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

இதையும் படிங்க...பட்ஜெட் குறித்து தலைவர்கள் கருத்து

Intro:முயன்றால் முடியாதது எதுவும் உலகில் இல்லை,நாப்கின் தயாரிக்கும் பெண்ணின் நம்பிக்கை..



Body:பெண்கள் உடல் ரீதியாக சந்திக்கும் முக்கிய பிரச்சினைகளில் ஒன்று மாதவிடாய் சுழற்சி. இயற்கையாக நடைபெறும் உடல் ரீதியான மாற்றம் என்றபோதிலும்,இவற்றுக்கு சமூக ரீதியாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கால மாற்றத்தால் கட்டுப்பாடுகள் தளர்ந்தாலும், இப்பிரச்சினை வேறு விதமாக உருவெடுத்துள்ளது. மாதவிடாய் காலத்தில் பெண்கள் பயன்படுத்தும் நாப்கின்கள் தான் இப்பிரச்சினையின் ஆணிவேர்.

சுகாதார மற்ற நாப்கின், மண்ணில் மக்காத வேதிப்பொருட்கள் மூலம் தயாரிக்கப்படும் நாப்கின்களால் பல்வேறு உடல் சார்ந்த நோய்களுக்கும் பெண்கள் ஆளாக வாய்ப்புள்ளது. இந்த பாதிப்பே, வேதிப்பொருள் கலப்பிடமில்லாமல், முற்றிலும் இயற்கையான முறையில் கிடைக்கும் பஞ்சுகளை கொண்டு நாப்கின் தயார் செய்யும் தொழில் நோக்கி என்னை தள்ளியது என்கிறார், நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே உள்ள பொத்தனூரைச் சேர்ந்த டி. சுமதி.


நாப்கின் தயாரிப்பிற்காக  மாவட்ட தொழில் மையம் மூலம் வங்கிக் கடன் ரூ. 2 லட்சம் பெற்றதாகவும் பல்வேறு இடர்பாடுகளுக்கிடையே 2011-ம் ஆண்டு இத்தொழில் துவங்கினேன். நாப்கின் தயாரிப்பில் பல்வேறு முன்னனி நிறுவனங்கள் உள்ள சூழலில் தங்களது தயாரிப்பை எந்த வகையில் முன்னிலைப்படுத்துவது என்ற யோசித்தபோதுதான், எவ்வித வேதிப்பொருள் கலப்பிடாமலும், இயற்கை முறையில் கிடைக்கும் பஞ்சுகளைக் கொண்டும் நாப்கின் தயாரிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது என தெரிவிக்கிறார் நாப்கின் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் சுமதி.

வேதிப்பொருள் மூலம் தயாரிக்கப்படும் நாப்கின் பயன்படுத்தும்போது தோல் சம்மந்தப்பட்ட பிரச்சினை  வரவாய்ப்புள்ளது. இயற்கையாக கிடைக்கும் பஞ்சு மூலம் தயாரிக்கப்படும் நாப்பின்களால் பாதிப்பு எதுவும் இல்லை. இவை மண்ணில் மக்கும் தன்மையும் கொண்டது. எனவே சுமதி இத்தொழிலை மேற்கொண்டு வருகிறார். இத்தொழில் மூலம் மாதம் ரூ. 40 ஆயிரம் வருவாய் ஈட்ட முடிகிறது.  நிறுவனத்தில் ஐந்து பெண்கள் பணிபுரிகின்றனர். தற்போது தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகம்,கேரளா மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களிலும் சுமதியின் நாப்கின் விற்பனையாகிறது .

மூன்று ஆண்டுகளாக நாப்கின் தயாரிப்பில் ஈடுபட்டு வருவதாகவும் தன்னுடன் சேர்ந்து மூன்று பெண்கள் பணி புரிவதாகவும் பெண்கள் மட்டுமே இங்கு பணியாற்றுவதாலும் ஒரு குடும்பம் போல் உள்ளதாகவும் நாப்கின் தயாரிப்பிலிருந்து கிடைக்கும் மாத வருமானம் மூலம் குடும்பத்தின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் உள்ளதாகவும் தெரிவிக்கிறார் சுமதியின் நாப்கின் தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரியும் லட்சுமி


சுய தொழில் தொடங்க வேண்டுமென்றால் எத்தனையோ தொழில்கள் தொடங்கலாம். ஆனால் பெண்கள் அன்றாடம் சந்திக்கும் முதற்பிரச்சினை மாதவிடாய். அதற்கு பயனுள்ளதாக இருக்க  நாப்கின் தயாரிப்பில் ஈடுபட்டே ஆக வேண்டும் என்ற சுமதியின் உறுதியான மனநிலை அனைத்து பெண்களுக்கும் வர வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.




Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.