ETV Bharat / state

ரசாயனம் கலந்த விநாயகர் சிலைகளை ஆற்றில் கரைக்கத் தடை!

author img

By

Published : Sep 1, 2019, 4:50 PM IST

நாமக்கல்: "ரசாயனம் கலந்த விநாயகர் சிலைகளை ஆற்றில் கரைக்கக் கூடாது" என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசு தெரிவித்தார்.

ரசாயனம் கலந்த விநாயகர் சிலைகளை ஆற்றில் கரைக்க தடை

நாடு முழுவதும் நாளை விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் இந்து முன்னணி, விஸ்வ ஹிந்த் பரிஷத் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர், விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு செய்வதற்கு 664 பேர் விண்ணப்பம் அளித்திருந்ததாகவும் அவர்களில் 650 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசு தெரிவித்தார்.

நாளை விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்
மேலும் அவர் நாமக்கல், ராசிபுரம், பரமத்திவேலூர், திருச்செங்கோடு உள்ளிட்ட 4 காவல் உட்கோட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் தனித்தனியாக விநாயகர் சிலை ஊர்வலம் நடத்தி கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், அதேபோல் காவிரி ஆற்றில் சிலை கரைக்கும் போது, குறிப்பாக அதிகளவு சிலை கரைக்கும் இடங்களில் கிரேன் இயந்திரம் அமைக்கப்பட்டு அதன் மூலம் சிலைகள் கரைக்க ஏற்பாடு செய்து வருவதாகவும் தெரிவித்தார்.

அதே நேரத்தில் நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரசாயனம் கலந்த விநாயகர் சிலைகளை ஆற்றில் கரைக்கக் கூடாது எனவும் எச்சரித்துள்ளார்.

நாடு முழுவதும் நாளை விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் இந்து முன்னணி, விஸ்வ ஹிந்த் பரிஷத் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர், விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு செய்வதற்கு 664 பேர் விண்ணப்பம் அளித்திருந்ததாகவும் அவர்களில் 650 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசு தெரிவித்தார்.

நாளை விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்
மேலும் அவர் நாமக்கல், ராசிபுரம், பரமத்திவேலூர், திருச்செங்கோடு உள்ளிட்ட 4 காவல் உட்கோட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் தனித்தனியாக விநாயகர் சிலை ஊர்வலம் நடத்தி கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், அதேபோல் காவிரி ஆற்றில் சிலை கரைக்கும் போது, குறிப்பாக அதிகளவு சிலை கரைக்கும் இடங்களில் கிரேன் இயந்திரம் அமைக்கப்பட்டு அதன் மூலம் சிலைகள் கரைக்க ஏற்பாடு செய்து வருவதாகவும் தெரிவித்தார்.

அதே நேரத்தில் நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரசாயனம் கலந்த விநாயகர் சிலைகளை ஆற்றில் கரைக்கக் கூடாது எனவும் எச்சரித்துள்ளார்.

Intro:நாமக்கல் மாவட்டத்தில் 650 இடங்களில் விநாயகர் சிலை வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தகவல். காவிரி ஆற்றில் அதிகளவு சிலை கரைக்கும் இடங்களில் கிரேன் மூலம் ஆற்றில் விட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக நாமக்கல் எஸ்.பி.தகவல்Body:நாளை விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் இந்து முண்ணனி, விஸ்வ ஹிந்த் பரிசத் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள், மற்றும் பொதுமக்கள் சார்பில் பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு செய்ய 664 பேர் விண்ணப்பம் அளித்திருந்ததாகவும் அவர்களில் 650 பேருக்கு விநாயகர் சிலை வைத்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசு அவர்கள் தெரிவித்தார்.

மேலும் நாமக்கல், இராசிபுரம், பரமத்தி வேலூர், திருச்செங்கோடு உள்ளிட்ட 4 காவல் உட்கோட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் தனித்தனியாக விநாயகர் சிலை ஊர்வலம் நடத்தி கொள்ள அனுமதி வழங்கப் பட்டுள்ளதாகவும், அதே போல் காவிரி ஆற்றில் சிலை கரைக்கும் போது குறிப்பாக அதிகளவு சிலை கரைக்கும் இடங்களில் கிரேன் இயந்திரம் அமைக்கப்பட்டு அதன் மூலம் சிலைகள் கரைக்க ஏற்பாடு செய்து வருவதாகவும், இதன் மூலம் பொதுமக்கள் சிலைகளை கரைக்க ஆற்றில் இறங்குவது தவிர்க்கப்படுவதோடு அச்சமயங்களில் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார். அதே சமயம் ரசாயனம் கலந்த விநாயகர் சிலைகளை ஆற்றில் கரைக்க கூடாது எனவும் எச்சரித்துள்ளார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.