ETV Bharat / state

பள்ளிவாசல் முன்பு வாக்கு சேகரித்த அதிமுகவினருக்கு எதிர்ப்பு

நாமக்கல்: அதிமுக வேட்பாளர் காளியப்பன், பேட்டை பள்ளிவாசலில் துண்டறிக்கை விநியோகித்தப் போது, ' பாஜக கூட்டணியான நீங்கள் இங்க ஒட்டு கேட்க வரக்கூடாது' என்று அப்பகுதி இஸ்லாமியர்கள் கூச்சலிட்டதால் பரப்பரப்பு ஏற்ப்பட்டது.

author img

By

Published : Apr 12, 2019, 7:05 PM IST

அதிமுக வேட்பாளரை திரும்ப போக சொல்லிய இஸ்லாமியர்கள்

நாமக்கல் நாடாளுமன்ற அதிமுக வேட்பாளரான காளியப்பன் தனது ஆதரவாளர்களுடன் பேட்டை பள்ளிவாசலில் வாக்கு சேகரிக்கும் பொருட்டு துண்டறிக்கை விநியோகம் செய்துக் கொண்டிருந்தப் போது, அங்கிருந்த இஸ்லாமிய இளைஞர்கள், அவரை நோக்கி ' பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள நீங்கள் இங்கு ஒட்டு சேகரிக்க வரக் கூடாது! வெளியே செல்லுங்கள்' என்று அவரிடம்
வலியுறுத்தினர்.

இதனால் அதிமுகவினருக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையே வாக்கு வாதம் முற்றியதால், நாமக்கல் காவல் ஆய்வாளர் பெரியசாமி சம்பவ இடத்துக்கு வந்து இருதரப்பினரையும் சமரசம் செய்து, அதிமுக வேட்பாளர் காளியப்பனை அந்த இடத்தைவிட்டு அனுப்பி வைத்தனர்.

இவர்களுக்கு பின்னர் அமமுக நகர செயலாளர் ஈஸ்வரன் தலைமையிலான ஆதரவாளர்கள் வாக்கு கேட்டு நோட்டீஸ்களை கொடுக்க முயன்றனர். அப்போழுது காவல்துறையினர் அவர்களையும் இடத்தைவிட்டு அப்புறப்படுத்தினர்.

அதிமுக வேட்பாளரை திரும்ப போக சொல்லிய இஸ்லாமியர்கள்

நாமக்கல் நாடாளுமன்ற அதிமுக வேட்பாளரான காளியப்பன் தனது ஆதரவாளர்களுடன் பேட்டை பள்ளிவாசலில் வாக்கு சேகரிக்கும் பொருட்டு துண்டறிக்கை விநியோகம் செய்துக் கொண்டிருந்தப் போது, அங்கிருந்த இஸ்லாமிய இளைஞர்கள், அவரை நோக்கி ' பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள நீங்கள் இங்கு ஒட்டு சேகரிக்க வரக் கூடாது! வெளியே செல்லுங்கள்' என்று அவரிடம்
வலியுறுத்தினர்.

இதனால் அதிமுகவினருக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையே வாக்கு வாதம் முற்றியதால், நாமக்கல் காவல் ஆய்வாளர் பெரியசாமி சம்பவ இடத்துக்கு வந்து இருதரப்பினரையும் சமரசம் செய்து, அதிமுக வேட்பாளர் காளியப்பனை அந்த இடத்தைவிட்டு அனுப்பி வைத்தனர்.

இவர்களுக்கு பின்னர் அமமுக நகர செயலாளர் ஈஸ்வரன் தலைமையிலான ஆதரவாளர்கள் வாக்கு கேட்டு நோட்டீஸ்களை கொடுக்க முயன்றனர். அப்போழுது காவல்துறையினர் அவர்களையும் இடத்தைவிட்டு அப்புறப்படுத்தினர்.

அதிமுக வேட்பாளரை திரும்ப போக சொல்லிய இஸ்லாமியர்கள்
தீ.பரத்குமார்
நாமக்கல்


ஏப்ரல் 12

"பாஜகவுடன் கூட்டணி வைத்தபிறகு இங்கு ஏன் வந்தாய்" என அதிமுக வேட்பாளரை  விரட்டி அடித்த இஸ்லாமியர்கள்

நாமக்கல் பாராளுமன்ற அதிமுக வேட்பாளர் காளியப்பன்  தனது ஆதரவாளர்களுடன் பேட்டை பள்ளிவாசலில் வாக்கு சேகரிக்க துண்டறிக்கை விநியோகம் செய்த போது அங்கிருந்த இஸ்லாமிய இளைஞர்கள் அவரை ஒட்டு கேட்க கூடாது. பாஜக உடன் கூட்டணி வைத்துள்ள நீங்கள் இங்கு ஒட்டு சேகரிக்க கூடாது என வெளியே போகச் சொல்லி வற்புறுத்தினர். 


இந்த நிலையில் ஓட்டு சேகரிக்க வந்த அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்த இஸ்லாமியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.  இதனால் அந்த பகுதி பரபரப்பு காணப்பட்டது. மேலும் அந்த இடத்துக்கு வந்த நாமக்கல் காவல் ஆய்வாளர் பெரியசாமி தலைமையில் போலீசார் வேட்பாளரை இவ்விடத்தை விட்டு செல்லுமாறு அறிவுறுத்தினர். மசூதி நுழைவாயிலில் சென்ற போலீசார் வெளியே செல் என கோஷங்களை முழங்கி  கொண்டிருந்த இஸ்லாமிய  இளைஞர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். அப்போது அமமுக  நகர செயலாளர் ஈஸ்வரன் தலைமையிலான ஆதரவாளர்கள் பரிசு சின்னத்துக்கு வாக்கு கேட்டு நோட்டீஸ்களை கொடுக்க முயன்றனர். போலீசார் அவர்களையும் அப்புறப்படுத்தி இப்பகுதிக்கு வாக்கு சேகரிக்க வேண்டாம் என கூறி  அங்கிருந்து அவர்களையும் அனுப்பி வைத்தனர். பின்னர் வேட்பாளர் மற்றும் அதிமுகவினர் அங்கிருந்து கிளம்பி வேறு இடத்திற்கு சென்றனர். அதனால் நாமக்கல் கோட்டை பள்ளிவாசலில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டு அனைவரும் கலைந்து சென்றனர். கடந்த வாரம் இதே பள்ளிவாசலில் திமுக வேட்பாளர் இல்லாத நிலையில் திமுக கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் காந்தி செல்வன் தலைமையில் கொண்ட திமுகவினர் இப்பகுதிக்கு வாக்கு சேகரித்தது குறிப்பிடத்தக்கது.

Script in mail

Visual in ftp


FILE NAME : TN_NMK_02_12_GO_BACK_ADMK_CANDIDATE_VIS_7205944   

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.