ETV Bharat / state

பத்தாயிரம் குழந்தை திருமணங்கள் தடுப்பு - சரோஜா - Minister of Social Welfare Dr. Saroja

நாமக்கல்: தமிழ்நாட்டில் கடந்தாண்டு 10 ஆயிரத்து 120 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக சமூக நலத்துறை அமைச்சர் மருத்துவர் சரோஜா தெரிவித்துள்ளார்.

Minister of Social Welfare Dr. Saroja
Minister of Social Welfare Dr. Saroja
author img

By

Published : Feb 22, 2020, 2:39 AM IST

நாமக்கல் மாவட்ட சமூக நலத்துறை, மக்கள் நல்வாழ்வு, பொது சுகாதாரத்துறைகளின் சார்பில் மாவட்ட சமூக நலத்திட்டங்கள், பெண் குழந்தைகள் பாதுகாப்பு, பெண் பாலினத்தை அதிகரித்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட சமூகநல, சத்துணவுத் துறை அமைச்சர் மருத்துவர். சரோஜா சமூக நலத்துறை சார்பில் செயல்படுத்தப்படும் அரசின் திட்டங்கள், மக்கள் நல்வாழ்வுத்துறை, பொது சுகாதாரத்துறைகளின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.

அதன்பின் அவர், பெண் குழந்தைகளை கருவிலே அழிப்பதை தொடர்ந்து கண்காணித்து முற்றிலும் அதை தடுத்து பெண் பாலின விகிதத்தை அதிகரிக்க வேண்டும் என அலுவலர்களுக்கும், மருத்துவர்களுக்கும் அறிவுறுத்தினார்.

அமைச்சர் மருத்துவர் சரோஜா
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "தமிழ்நாட்டில் கடந்தாண்டு 10 ஆயிரத்து 120 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. தமிழ்நாடு குழந்தை திருமணங்களை தடுத்து நிறுத்துவதில் இந்தியாவில் முதன்மையான மாநிலமாக விளங்கிவருகிறது. தமிழ்நாட்டில் பெண் குழந்தைகள் விகிதம் ஆயிரத்துக்கு 930ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதனை மேலும் உயர்த்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகிறன என்றார். இக்கூட்டத்தில் அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களைச் சேர்ந்த மருத்துவ அலுவலர்கள், அரசு அலுவலர்கள் என 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.


இதையும் படிங்க: தாயாரின் திதிக்காக தாழ்த்தப்பட்ட பெண்ணுடன் திருமணம்: ஒரே மாதத்தில் பிரிந்த கணவன்

நாமக்கல் மாவட்ட சமூக நலத்துறை, மக்கள் நல்வாழ்வு, பொது சுகாதாரத்துறைகளின் சார்பில் மாவட்ட சமூக நலத்திட்டங்கள், பெண் குழந்தைகள் பாதுகாப்பு, பெண் பாலினத்தை அதிகரித்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட சமூகநல, சத்துணவுத் துறை அமைச்சர் மருத்துவர். சரோஜா சமூக நலத்துறை சார்பில் செயல்படுத்தப்படும் அரசின் திட்டங்கள், மக்கள் நல்வாழ்வுத்துறை, பொது சுகாதாரத்துறைகளின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.

அதன்பின் அவர், பெண் குழந்தைகளை கருவிலே அழிப்பதை தொடர்ந்து கண்காணித்து முற்றிலும் அதை தடுத்து பெண் பாலின விகிதத்தை அதிகரிக்க வேண்டும் என அலுவலர்களுக்கும், மருத்துவர்களுக்கும் அறிவுறுத்தினார்.

அமைச்சர் மருத்துவர் சரோஜா
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "தமிழ்நாட்டில் கடந்தாண்டு 10 ஆயிரத்து 120 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. தமிழ்நாடு குழந்தை திருமணங்களை தடுத்து நிறுத்துவதில் இந்தியாவில் முதன்மையான மாநிலமாக விளங்கிவருகிறது. தமிழ்நாட்டில் பெண் குழந்தைகள் விகிதம் ஆயிரத்துக்கு 930ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதனை மேலும் உயர்த்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகிறன என்றார். இக்கூட்டத்தில் அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களைச் சேர்ந்த மருத்துவ அலுவலர்கள், அரசு அலுவலர்கள் என 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.


இதையும் படிங்க: தாயாரின் திதிக்காக தாழ்த்தப்பட்ட பெண்ணுடன் திருமணம்: ஒரே மாதத்தில் பிரிந்த கணவன்

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.