ETV Bharat / state

நாமக்கல் அருகே சட்டவிரோதமாக மது விற்ற மூவர் கைது!

author img

By

Published : Mar 26, 2020, 4:44 PM IST

நாமக்கல்: பரமத்திவேலூர் அருகே சட்டவிரோதமாக மது விற்பனை செய்த மூவரை காவல் துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான 262 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

மது விற்றவர்களை கைது செய்த காவல் துறையினர்
மது விற்றவர்களை கைது செய்த காவல் துறையினர்

கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கையாக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் மருந்து, காய்கறிகள், மளிகை கடைகள், இறைச்சி கடைகள் மட்டுமே இயங்க தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இந்நிலையில், நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்துள்ள பாலப்பட்டி பகுதியில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்யப்பட்டு வருவதாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில், பரமத்திவேலூர் துணை காவல் கண்காணிப்பாளர் பழனிசாமி தலைமையிலான குழுவினர், மட்டைபாறை பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, கனகராஜ் என்பவருக்குச் சொந்தமான தென்னை தோப்பில் ராஜலிங்கம், பன்னீர் செல்வம் ஆகியோர் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.

மது விற்றவர்களை கைது செய்த காவல் துறையினர்

இதையடுத்து, மது விற்பனையில் ஈடுபட்ட ராஜலிங்கம், பன்னீர் செல்வம் , தென்னை தோப்பு உரிமையாளர் கனகராஜ் ஆகியோரை கைது செய்த காவல் துறையினர், அவர்களிடம் இருந்த 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 262 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

இதையும் படிங்க: கள்ளத்தனமாக மது விற்றவர்கள் கைது

கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கையாக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் மருந்து, காய்கறிகள், மளிகை கடைகள், இறைச்சி கடைகள் மட்டுமே இயங்க தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இந்நிலையில், நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்துள்ள பாலப்பட்டி பகுதியில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்யப்பட்டு வருவதாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில், பரமத்திவேலூர் துணை காவல் கண்காணிப்பாளர் பழனிசாமி தலைமையிலான குழுவினர், மட்டைபாறை பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, கனகராஜ் என்பவருக்குச் சொந்தமான தென்னை தோப்பில் ராஜலிங்கம், பன்னீர் செல்வம் ஆகியோர் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.

மது விற்றவர்களை கைது செய்த காவல் துறையினர்

இதையடுத்து, மது விற்பனையில் ஈடுபட்ட ராஜலிங்கம், பன்னீர் செல்வம் , தென்னை தோப்பு உரிமையாளர் கனகராஜ் ஆகியோரை கைது செய்த காவல் துறையினர், அவர்களிடம் இருந்த 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 262 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

இதையும் படிங்க: கள்ளத்தனமாக மது விற்றவர்கள் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.