ETV Bharat / state

லேப்டாப் வழங்காததைக் கண்டித்து மாணவிகள் போராட்டம்! - laptop issue in namakkal

நாமக்கல்: ராசிபுரம் அருகே உள்ள தேசிய பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு லேப்டாப் வழங்காததைக் கண்டித்து மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

லேப்டாப்
author img

By

Published : Aug 8, 2019, 6:37 PM IST

தமிழ்நாடு அரசு மூலம் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவ மாணவிகளுக்கு இலவசமாக மடிக்கணினி வழங்கும் திட்டத்தை ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது தொடங்கிவைத்தார்.

இந்தத் திட்டம் தொடர்ந்து நடைபெற்றுவந்த நிலையில், 2017-2018, 2018 - 2019ஆம் ஆண்டு மாணவ, மாணவிகளுக்கு இதுவரை மடிக்கணினி முறையாக தரப்படவில்லை எனவும், இந்தக் கல்வியாண்டில் கல்வி பயில்வோருக்கு மட்டும் மடிக்கணினி வழங்கப்பட்டுவருவதாகவும் முன்னாள் மாணவர்கள் பலர் புகார் தெரிவித்துவருகின்றனர்.

லேப்டாப் வழங்காததைக் கண்டித்து மாணவிகள் போராட்டம்
லேப்டாப் வழங்காததைக் கண்டித்து மாணவிகள் போராட்டம்

இந்நிலையில், ராசிபுரம் நாமக்கல் சாலையில் செயல்படும் தேசிய பெண்கள் அரசு நிதியுதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் தற்போது பிளஸ் 2 பயிலும் மாணவிகளுக்கு இலவச லேப்டாப் வழங்கப்பட்டது. அதில் பள்ளியில் பயிலும் 200 மாணவிகளில் 140 பேருக்கு மட்டுமே லேப்டாப் வழங்கப்பட்டது.

லேப்டாப் வழங்காததைக் கண்டித்து மாணவிகள் போராட்டம்

இதனால், ஆத்திரமடைந்த 50-க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்களுக்கும் லேப்டாப் வழங்கக்கோரி வகுப்பைப் புறக்கணித்து திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினரும் மாவட்ட கல்வி அலுவலர்களும் மாணவிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பின்னர் விடுபட்ட மாணவிகளுக்கு லேப்டாப் வழங்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததையடுத்து மாணவிகள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டனர்.

தமிழ்நாடு அரசு மூலம் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவ மாணவிகளுக்கு இலவசமாக மடிக்கணினி வழங்கும் திட்டத்தை ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது தொடங்கிவைத்தார்.

இந்தத் திட்டம் தொடர்ந்து நடைபெற்றுவந்த நிலையில், 2017-2018, 2018 - 2019ஆம் ஆண்டு மாணவ, மாணவிகளுக்கு இதுவரை மடிக்கணினி முறையாக தரப்படவில்லை எனவும், இந்தக் கல்வியாண்டில் கல்வி பயில்வோருக்கு மட்டும் மடிக்கணினி வழங்கப்பட்டுவருவதாகவும் முன்னாள் மாணவர்கள் பலர் புகார் தெரிவித்துவருகின்றனர்.

லேப்டாப் வழங்காததைக் கண்டித்து மாணவிகள் போராட்டம்
லேப்டாப் வழங்காததைக் கண்டித்து மாணவிகள் போராட்டம்

இந்நிலையில், ராசிபுரம் நாமக்கல் சாலையில் செயல்படும் தேசிய பெண்கள் அரசு நிதியுதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் தற்போது பிளஸ் 2 பயிலும் மாணவிகளுக்கு இலவச லேப்டாப் வழங்கப்பட்டது. அதில் பள்ளியில் பயிலும் 200 மாணவிகளில் 140 பேருக்கு மட்டுமே லேப்டாப் வழங்கப்பட்டது.

லேப்டாப் வழங்காததைக் கண்டித்து மாணவிகள் போராட்டம்

இதனால், ஆத்திரமடைந்த 50-க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்களுக்கும் லேப்டாப் வழங்கக்கோரி வகுப்பைப் புறக்கணித்து திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினரும் மாவட்ட கல்வி அலுவலர்களும் மாணவிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பின்னர் விடுபட்ட மாணவிகளுக்கு லேப்டாப் வழங்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததையடுத்து மாணவிகள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டனர்.

Intro:நாமக்கல் இராசிபுரம் அருகே லேப்டாப் வழங்காததை கண்டித்து மாணவிகள் வகுப்பறையை புறகணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.Body:இராசிபுரம் தேசிய பெண்கள் மேல்நிலை பள்ளியில் நடப்பாண்டில் கலை மற்றும் கணினி பாடப்பிரிவில் படிக்கும் மாணவிகளுக்கு அரசு லேப்டாப் வழங்கபடாததை கண்டித்து வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக அரசு மூலம் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவ மாணவிகளுக்கு இலவசமாக மடிக்கணினி வழங்கும் திட்டத்தை ஜெயலலிதா முதல்வராக இருந்த போது தொடங்கி வைத்தார். இந்த திட்டம் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் கடந்த 2017 - 2018 மற்றும் 2018 - 2019ம் ஆண்டு மாணவர்களுக்கு இதுவரை மடிக்கணினி முறையாக தரப்படவில்லை. இந்நிலையில், இந்த கல்வியாண்டில் படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் மடிக்கணினி வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இராசிபுரம் நாமக்கல் சாலையில் செயல்படும் தேசிய பெண்கள் அரசு நிதியுதவி பெறும் மேல்நிலைபள்ளியில் தற்போது பிளஸ் 2 பயிலும் மாணவிகளுக்கு இலவச லேப்டாப் வழங்கப்பட்டது.
பள்ளியில் பயிலும் 200 மாணவிகளுக்கு, வெறும் 140 லேப்டாப்கள் மட்டுமே அரசு வழங்கப்பட்டது. பல மாணவிகளுக்கு லேப்டாப் வழங்கப்படவில்லை.இதனால், ஆத்திரமடைந்த 50க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்களுக்கும் லேப்டாப் வழங்கக்கோரி வகுப்பை புறகணித்து திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.தகவலறிந்து வந்த இராசிபுரம் போலீசார் பள்ளி மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.அப்போது, பள்ளி தலைமை ஆசிரியர் பாபு வந்து பதில் கூறினால்தான் போராட்டத்தை கைவிடுவோம் என மாணவிகள் கூறினர். ஆனால், பள்ளி தலைமை ஆசிரியர் வர மறுத்து விட்டதாக போலீசார் கூறினர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு மாவட்ட கல்வி அலுவலர் வந்து, மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். தொடர்ந்து, விடுபட்ட மாணவிகளுக்கு விரைவில் லேப்டாப் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு மாணவிகள் கலைந்து சென்றனர்.
Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.