ETV Bharat / state

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம்

author img

By

Published : Feb 20, 2020, 9:46 AM IST

விருதுநகர்: மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இஸ்லாமிய அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

islamic-organizations-struggle-against-citizenship-amendment-act
islamic-organizations-struggle-against-citizenship-amendment-act

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டம், சென்னை வண்ணாரப்பேட்டையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் காவல் துறையினர் தடியடி நடத்தியது உள்ளிட்டவற்றைக் கண்டித்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இஸ்லாமிய அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

திருவண்ணாமலை:

குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக் கோரி, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் முன்பு, அனைத்து முஸ்லிம்கள் இயக்கத்தின் சார்பில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டம்

விருதுநகர்:

விருதுநகரில் இஸ்லாமிய அமைப்புகளின் சார்பில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், குடியுரிமை சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என தமிழ்நாடு அரசு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனக் கோரியும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முன்றனர். அப்போது காவல் துறையினர் போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்தினர்.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டம்

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டத்தில் அனைத்து பகுதிகளில் உள்ள இஸ்லாமிய பெண்கள், குழந்தைகள், முதியோர்கள் என 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் தேசியக் கொடியுடன் ஒன்று திரண்டு மத்திய அரசுக்கு எதிராகவும், குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர்.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான இஸ்லாமியர்கள் போராட்டம்

நாமக்கல்:

குடியுரிமை திருத்தச் சட்டத்தை தமிழ்நாட்டில் அமல்படுத்த மாட்டோம் என தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனவும் வண்ணாரப்பேட்டை சம்பவத்தை கண்டித்தும் நாமக்கல்லில் இஸ்லாமிய அமைப்புகள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டன.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டம்

கன்னியாகுமரி:

குமரி மாவட்ட ஜமாஅத்துல் உலமா பேரவை சார்பில் பெண்கள் உள்பட சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் நாகர்கோவிலிலுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகர்கோவிலில் போராட்டத்தில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள்

இதையும் படிங்க: கோயம்புத்தூரில் சி.ஏ.ஏவுக்கு எதிராக இஸ்லாமியர்கள் பேரணி

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டம், சென்னை வண்ணாரப்பேட்டையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் காவல் துறையினர் தடியடி நடத்தியது உள்ளிட்டவற்றைக் கண்டித்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இஸ்லாமிய அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

திருவண்ணாமலை:

குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக் கோரி, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் முன்பு, அனைத்து முஸ்லிம்கள் இயக்கத்தின் சார்பில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டம்

விருதுநகர்:

விருதுநகரில் இஸ்லாமிய அமைப்புகளின் சார்பில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், குடியுரிமை சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என தமிழ்நாடு அரசு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனக் கோரியும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முன்றனர். அப்போது காவல் துறையினர் போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்தினர்.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டம்

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டத்தில் அனைத்து பகுதிகளில் உள்ள இஸ்லாமிய பெண்கள், குழந்தைகள், முதியோர்கள் என 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் தேசியக் கொடியுடன் ஒன்று திரண்டு மத்திய அரசுக்கு எதிராகவும், குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர்.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான இஸ்லாமியர்கள் போராட்டம்

நாமக்கல்:

குடியுரிமை திருத்தச் சட்டத்தை தமிழ்நாட்டில் அமல்படுத்த மாட்டோம் என தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனவும் வண்ணாரப்பேட்டை சம்பவத்தை கண்டித்தும் நாமக்கல்லில் இஸ்லாமிய அமைப்புகள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டன.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டம்

கன்னியாகுமரி:

குமரி மாவட்ட ஜமாஅத்துல் உலமா பேரவை சார்பில் பெண்கள் உள்பட சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் நாகர்கோவிலிலுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகர்கோவிலில் போராட்டத்தில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள்

இதையும் படிங்க: கோயம்புத்தூரில் சி.ஏ.ஏவுக்கு எதிராக இஸ்லாமியர்கள் பேரணி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.