ETV Bharat / state

அரசுத் துறைகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப வேண்டும் - அரசு அலுவலர் சங்கம் கோரிக்கை!

author img

By

Published : Jul 6, 2019, 6:29 PM IST

நாமக்கல்: தமிழ்நாடு அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநிலத் தலைவர் சண்முகராஜன் கோரிக்கை விடுத்துள்ளார்.

அரசு துறைகளில் காலியான இடங்களை நிரப்ப வேண்டும் -அரசு அலுவலர் தலைவர் கோரிக்கை!

தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை அமைச்சுப் பணி அலுவலர் சங்க மாநிலப் பொதுக்குழுக் கூட்டம், நாமக்கல்லில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அனைத்து வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் அமைச்சுப் பணியாளர்கள் பணிபுரிய தனி கட்டட வசதி, காலியாக உள்ள 88 கண்காணிப்பாளர் பணியிடங்களை ஏற்படுத்தித் தர வேண்டும் என்பன உள்ளிட்ட 29 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பின்னர் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநிலத் தலைவர் இரா.சண்முகராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, உள்ளாட்சி- ஊரக வளர்ச்சி-கூட்டுறவு உள்ளிட்ட மாநில அரசுத் துறைகளில் காலிப் பணியிடங்கள் உடனுக்குடன் நிரப்புவதைப் போல பிற துறைகளிலும் அமைச்சுப் பணியாளர்களை உடனுக்குடன் நிரப்பினால்தான் மக்கள் நலத்திட்டங்களை விரைந்து செயல்படுத்த முடியும் என்றும் தமிழ்நாடு அரசுத் துறைகளில் உள்ள சுமார் இரண்டு லட்சம் காலிப் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் எனவும் தெரிவித்தார்.

தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை அமைச்சுப் பணி அலுவலர் சங்க மாநிலப் பொதுக்குழுக் கூட்டம், நாமக்கல்லில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அனைத்து வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் அமைச்சுப் பணியாளர்கள் பணிபுரிய தனி கட்டட வசதி, காலியாக உள்ள 88 கண்காணிப்பாளர் பணியிடங்களை ஏற்படுத்தித் தர வேண்டும் என்பன உள்ளிட்ட 29 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பின்னர் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநிலத் தலைவர் இரா.சண்முகராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, உள்ளாட்சி- ஊரக வளர்ச்சி-கூட்டுறவு உள்ளிட்ட மாநில அரசுத் துறைகளில் காலிப் பணியிடங்கள் உடனுக்குடன் நிரப்புவதைப் போல பிற துறைகளிலும் அமைச்சுப் பணியாளர்களை உடனுக்குடன் நிரப்பினால்தான் மக்கள் நலத்திட்டங்களை விரைந்து செயல்படுத்த முடியும் என்றும் தமிழ்நாடு அரசுத் துறைகளில் உள்ள சுமார் இரண்டு லட்சம் காலிப் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் எனவும் தெரிவித்தார்.

Intro:தமிழ்நாடு அரசு துறைகளில் காலியாக உள்ள சுமார் 2 லட்சம் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்., மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும், ஓய்வு பெற்றவர்களை மீண்டும் பணி நியமனம் செய்ய கூடாது என  தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் மாநிலத் தலைவர் சண்முகராஜன் நாமக்கல்லில் பேட்டி.


Body:தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை அமைச்சுப் பணி அலுவலர் சங்க மாநிலப் பொதுக்குழுக் கூட்டம், நாமக்கல்லில்  நடைபெற்றது. புதிய நிர்வாகிகள் பதவி ஏற்றுக்கொண்டனர். தொடந்து, பொதுக்குழுக் கூட்டத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அனைத்து வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் அமைச்சுப் பணியாளர்கள் பணிபுரிய தனி கட்டட வசதி.,  அங்கு காலியாக உள்ள 88 கண்காணிப்பாளர் பணியிடங்களை ஏற்படுத்தித் தர வேண்டும் என்பன உள்ளிட்ட 29 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

          இக்கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் மாநிலத் தலைவர் இரா.சண்முகராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார், அப்போது தமிழக அரசு துறைகளில் உள்ள சுமார் 2 லட்சம் காலிப் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும், உள்ளாட்சி- ஊரக வளர்ச்சி-கூட்டுறவு உள்ளிட்ட மாநில அரசு துறைகளில் காலிப் பணியிடங்கள் உடனுக்குடன் நிரப்புவதைப் போல பிற துறைகளிலும் அமைச்சு பணியாளர்களை உடனுக்குடன் நிரப்பினால்தான் மக்கள் நலத்திட்டங்களை விரைந்து செயல்படுத்த முடியும்.
 பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். 2016-ஆம் ஆண்டு  ஊதியக்குழு நிலுவைத் தொகையை வழங்க வேண்டும், மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை அரசு ஏற்று நடத்த வேண்டும். அரசு ஊழியர்களுக்கு ஊதிய முரண்பாடுகளை களைய அமைக்கப்பட்ட ஒரு நபர் குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த ஜனவரி மாதம் அரசு பணியாளர்கள் நடத்திய அடையாள வேலைநிறுத்தத்தில் கலந்து கொண்டவர்களுக்கு ஒருநாள் ஊதியப் பிடித்தம் மற்றும் நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும்.  தமிழக அரசு பணிகளில் ஓய்வு பெற்றவர்களை மீண்டும் அரசு பணியில் நியமிக்க கூடாது. பதவி உயர்வு பெற்ற அவர்களின் பணியிடங்களையும் காலிப்பணியிடங்களாகக் கருதி அதற்கு பணியாளர்களை நியமனம் செய்ய வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் மாநிலத் தலைவர் இரா.சண்முகராஜன் பேட்டியில் கேட்டுக்கொண்டார்



Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.