ETV Bharat / state

கார் கண்ணாடியை உடைத்து ஏழரை சவரன் திருட்டு: காட்டிக்கொடுத்த சிசிடிவி! - car glass broken and took jwells caught on cctv

நாமக்கல்: நூதன முறையில் கார் கண்ணாடியை உடைத்து ஏழரை சவரன் நகைகளைத் திருடிய டிப்டாப் திருடர்கள் சிசிடிவி காட்சிகள் மூலம் பிடிபட்டுள்ளனர்.

namakkal gold theft
author img

By

Published : Aug 21, 2019, 5:59 AM IST

Updated : Aug 21, 2019, 9:19 AM IST

நாமக்கல்லில் உள்ள தனியார் ஓட்டல் ஒன்றில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக தமிழ்ச்செல்வி என்பவர் தனது மகன், மகள் ஆகியோருடன் தனது காரில் வந்துள்ளார். அந்த காரை ஓட்டலுக்கு அருகில் நிறுத்திய தமிழ்ச்செல்வி, தன்னிடம் இருந்த ஏழரை சவரன் நகையை தனது கைப்பையில் வைத்து காரிலேயே விட்டுச்சென்றுள்ளார்.

கார் கண்ணாடியை உடைத்து ஏழரை சவரன் திருட்டு.

அப்போது, அவ்வழியாக வந்த டிப்டாப் திருடர்கள் இருவர், காரில் உள்ள கைப்பையை நோட்டமிட்டுள்ளனர். பின்னர், காரை சுற்றி வந்த ஒருவர் தன்னுடைய கையில் வந்திருந்த வில் போன்ற பொருளினால் காரின் கண்ணாடியை உடைக்க, அதில் இருந்த கைப்பையை இருவரும் எடுத்துக்கொண்டு தப்பியுள்ளனர். இந்த காட்சிகள் அனைத்தும் அருகிலுள்ள கடை ஒன்றின் முகப்பில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில்(சிசிடிவி) பதிவாகியுள்ளது.

using items for theft,  நூதன முறையில் திருட்டு.
நூதன முறையில் திருட உபயோகப்படுத்தப்பட்ட பொருள்கள்

பின்னர் நிகழ்ச்சி முடிந்து தன்னுடைய காருக்கு திரும்பிய தமிழ்ச்செல்வி, கார் கண்ணாடி உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்து நாமக்கல் மாவட்ட காவல்துறையினரிடம் புகார் செய்துள்ளார். இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் திருடர்கள் ஊக்கு, ரப்பர் பேண்ட், சாக்லேட் காகிதம், இருசக்கர வாகனங்களுக்கு பயன்படுத்தப்படும் பால்ரஸ் ஆகியவை வைத்து வில் போன்ற பொருளினை தயாரித்து காரின் கண்ணாடியை நோக்கி அடைத்தவுடன் கண்ணாடிகள் நொறுங்கியுள்ளது தெரியவந்துள்ளது. இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் தொடர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

நாமக்கல்லில் உள்ள தனியார் ஓட்டல் ஒன்றில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக தமிழ்ச்செல்வி என்பவர் தனது மகன், மகள் ஆகியோருடன் தனது காரில் வந்துள்ளார். அந்த காரை ஓட்டலுக்கு அருகில் நிறுத்திய தமிழ்ச்செல்வி, தன்னிடம் இருந்த ஏழரை சவரன் நகையை தனது கைப்பையில் வைத்து காரிலேயே விட்டுச்சென்றுள்ளார்.

கார் கண்ணாடியை உடைத்து ஏழரை சவரன் திருட்டு.

அப்போது, அவ்வழியாக வந்த டிப்டாப் திருடர்கள் இருவர், காரில் உள்ள கைப்பையை நோட்டமிட்டுள்ளனர். பின்னர், காரை சுற்றி வந்த ஒருவர் தன்னுடைய கையில் வந்திருந்த வில் போன்ற பொருளினால் காரின் கண்ணாடியை உடைக்க, அதில் இருந்த கைப்பையை இருவரும் எடுத்துக்கொண்டு தப்பியுள்ளனர். இந்த காட்சிகள் அனைத்தும் அருகிலுள்ள கடை ஒன்றின் முகப்பில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில்(சிசிடிவி) பதிவாகியுள்ளது.

using items for theft,  நூதன முறையில் திருட்டு.
நூதன முறையில் திருட உபயோகப்படுத்தப்பட்ட பொருள்கள்

பின்னர் நிகழ்ச்சி முடிந்து தன்னுடைய காருக்கு திரும்பிய தமிழ்ச்செல்வி, கார் கண்ணாடி உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்து நாமக்கல் மாவட்ட காவல்துறையினரிடம் புகார் செய்துள்ளார். இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் திருடர்கள் ஊக்கு, ரப்பர் பேண்ட், சாக்லேட் காகிதம், இருசக்கர வாகனங்களுக்கு பயன்படுத்தப்படும் பால்ரஸ் ஆகியவை வைத்து வில் போன்ற பொருளினை தயாரித்து காரின் கண்ணாடியை நோக்கி அடைத்தவுடன் கண்ணாடிகள் நொறுங்கியுள்ளது தெரியவந்துள்ளது. இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் தொடர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

Intro:நூதன முறையில் கார் கண்ணாடியை உடைத்து 7 அரை சவரன் திருடிய டிப்டாப் திருடர்கள் சிசிடிவி காட்சிகள் வெளியீடுBody:நாமக்கல்லில் கடந்த ஞாயிறு அன்று கோயம்புத்தூரை சேர்ந்த தமிழ்ச்செல்வி அவரது மகன் சிவா மற்றும் மகள் ஷிவானி ஆகியோர் கோவையிலிருந்து நாமக்கல்லில் தனியார் ஓட்டலில் நடைபெற்ற விழா ஒன்றிற்கு தங்களுடைய காரில் வந்துள்ளனர். காரை ஓட்டலுக்கு அருகில் நிறுத்தி விட்டு காரில் தமிழ்ச்செல்வி தன்னுடைய கைப்பையில் 7 அரை சவரன் தங்க நகைகளை வைத்து காரிலியே கைப்பையை விட்டுச் சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த டிப்டாப் திருடர்கள் இருவர் காரில் உள்ள கைப்பையை நோட்டமிட்டுள்ளனர். காரை சுற்றி வந்த ஒருவன் தன்னுடைய கையில் வந்திருந்த வில் போன்ற ஒன்றினால் காரின் கண்ணாடியை உடைத்துள்ளான். பின்பு வந்த மற்றொருவன் காரின் கண்ணாடியை முழுவதுமாக உடைத்து காரில் இருந்த கைப்பையை எடுத்துச்சென்றுள்ளான். இந்த காட்சிகள் அருகிலுள்ள கடை ஒன்றின் முகப்பில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.

பின்னர் விழா முடிந்து தன்னுடைய காருக்கு வந்த தமிழ்ச்செல்வி கார் கண்ணாடி உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்து நாமக்கல் மாவட்ட காவல்துறையினரிடம் புகார் செய்துள்ளார்.இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் திருடர்கள் பின் ஊக்கு, ரப்பர் பேண்ட், சாக்லேட் காகிதம் மற்றும் இருச்சக்கர வாகனங்களுக்கு பயன்படுத்தப்படும் பால்ரஸ் ஆகியவை வைத்து வில் போன்று ஒன்றினை செய்து காரின் கண்ணாடியை நோக்கி அடைத்தவுடன் கண்ணாடிகள் நொருங்கிவிடுகிறது. தற்போது இந்த சிசிடிவி காட்சிகள் இணையதளத்தில் வெளியாகியுள்ளது. இதுபோன்ற சம்பவம் இப்படியெல்லாம் கூட திருடுவார்களா என வியக்கவைத்துள்ளது.Conclusion:
Last Updated : Aug 21, 2019, 9:19 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.