ETV Bharat / state

"கீழே இறங்கவா? இல்லை கீழே விழவா?" - செல்போன் கோபுரத்தில் ஏறி இளைஞர் போராட்டம்

author img

By

Published : Nov 1, 2019, 9:48 PM IST

நாகப்பட்டினம்: அடிப்படை வசதிகள் செய்து தந்தால் மட்டுமே கீழே இறங்குவேன் இல்லையென்றால் கீழே விழுந்து தற்கொலை செய்து கொள்வேன் என்று செல்போன் கோபுரத்தில் ஏறி போராட்டம் செய்த இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது.

செல்போன் கோபுரத்தின் மேல் ஏறிப் போராட்டம்


நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணி அருகே உள்ள வண்டலூர் கிராமத்தில் 600-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இக்கிராமத்திற்கு தேவையான சாலை, குடிநீர், கழிவறை, போன்ற அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி கிராம மக்கள் நீண்டநாட்களாக மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில் மக்களின் கோரிக்கையை ஏற்காமல் மாவட்ட நிர்வாகம் மெத்தனம் காட்டுவதாக கூறப்படுகிறது.

வண்டலூரில் செல்போன் டவரில் ஏறிப் போராட்டம் செய்த இளைஞர்

இதனால் விரக்தியடைந்த அக்கிராமத்தை சேர்ந்த திலகர் என்பவர் அங்கு உள்ள 120 அடி உயர செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை செய்துகொள்ளப் போவதாக மிரட்டல் விடுத்தார். மேலும் கிராமத்திற்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுத்தால் மட்டுமே கீழே இறங்குவேன் என்றும், சம்பவ இடத்திற்கு மாவட்ட ஆட்சியர் வரவேண்டும் என்றும், இல்லையென்றால் கீழே குதித்து தற்கொலை செய்து கொள்வதாக தெரிவித்தார்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வட்டாட்சியர், தீயணைப்புப் படை வீரர்கள், வேளாங்கண்ணி காவல் துறையினர் ஆகியோர் திலகரிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவரின் கோரிக்கையை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்ததை தொடர்ந்து அவர் தற்கொலை முடிவை கைவிட்டு கீழே இறங்கி வந்தார். பின்னர் காவல் துறையினர் திலகரை கைது செய்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதேபோல் கடந்த ஆண்டு தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக நடந்த துப்பாக்கி சூட்டை கண்டித்து இதே போல் இவர் செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:

இரும்பு மனிதனின் சிந்தனையை இதயத்தில் சுமப்போம் - உறுதிமொழி


நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணி அருகே உள்ள வண்டலூர் கிராமத்தில் 600-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இக்கிராமத்திற்கு தேவையான சாலை, குடிநீர், கழிவறை, போன்ற அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி கிராம மக்கள் நீண்டநாட்களாக மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில் மக்களின் கோரிக்கையை ஏற்காமல் மாவட்ட நிர்வாகம் மெத்தனம் காட்டுவதாக கூறப்படுகிறது.

வண்டலூரில் செல்போன் டவரில் ஏறிப் போராட்டம் செய்த இளைஞர்

இதனால் விரக்தியடைந்த அக்கிராமத்தை சேர்ந்த திலகர் என்பவர் அங்கு உள்ள 120 அடி உயர செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை செய்துகொள்ளப் போவதாக மிரட்டல் விடுத்தார். மேலும் கிராமத்திற்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுத்தால் மட்டுமே கீழே இறங்குவேன் என்றும், சம்பவ இடத்திற்கு மாவட்ட ஆட்சியர் வரவேண்டும் என்றும், இல்லையென்றால் கீழே குதித்து தற்கொலை செய்து கொள்வதாக தெரிவித்தார்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வட்டாட்சியர், தீயணைப்புப் படை வீரர்கள், வேளாங்கண்ணி காவல் துறையினர் ஆகியோர் திலகரிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவரின் கோரிக்கையை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்ததை தொடர்ந்து அவர் தற்கொலை முடிவை கைவிட்டு கீழே இறங்கி வந்தார். பின்னர் காவல் துறையினர் திலகரை கைது செய்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதேபோல் கடந்த ஆண்டு தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக நடந்த துப்பாக்கி சூட்டை கண்டித்து இதே போல் இவர் செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:

இரும்பு மனிதனின் சிந்தனையை இதயத்தில் சுமப்போம் - உறுதிமொழி

Intro:அடிப்படை தேவைகளை செய்து கோரி நாகை அருகே வண்டலூர் கிராமத்தில் திலகர் என்ற இளைஞன் 120 டவர் மீது ஏறி போராட்டம்.Body:அடிப்படை தேவைகளை செய்து கோரி நாகை அருகே வண்டலூர் கிராமத்தில் திலகர் என்ற இளைஞன் 120 டவர் மீது ஏறி போராட்டம்.

நாகப்பட்டிணம் மாவட்டம், வேளாங்கண்ணி அருகே உள்ள வண்டலூர் கிராமத்தில் 600-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நீண்டநாளாக சாலை,குடிநீர், கழிவறை மற்றும் மயானத்திற்கு செல்லும் சாலை என கிராமத்திற்கு தேவையான அடிப்படைத் தேவைகளை மாவட்ட நிர்வாகம் செய்து தருவதில் மெத்தனம் காட்டுவதாக குற்றம்சாட்டி வண்டலூர் கிராமத்தை சேர்ந்த திலகர் என்ற இளைஞன் அதே ஊரில் உள்ள 120 அடி உயர செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை செய்துகொள்ள போவதாக மிரட்டல் விடுத்து வந்தார். முன்னதாக மாவட்ட ஆட்சியருக்கு எழுதியுள்ள கடிதத்தில் 35 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட குடிநீர் தேக்க தொட்டி மாசுபட்டு உள்ளது எனவும், இங்கு கட்டிமுடிக்கப்பட்ட குடிநீர் மேல்நிலை தேக்க தொட்டி மற்றும் கழிவறையை பயன்பாட்டிற்கு இதுவரை கொண்டு வரவில்லை எனவும் மயானத்திற்கு செல்லும் சாலையை புதிய சாலையாக அமைக்க வேண்டும் மேலும் அரசு மருத்துவமனைக்கு 5 கிலோ மீட்டர் செல்ல வேண்டி உள்ளதால் வண்டலூரில் ஆரம்ப சுகாதார நிலையம் கட்ட வேண்டும் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை முன்வைத்து மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் எழுதிவைத்து போராட்டத்தில் ஈடுபட்ட திலகர் மாவட்ட ஆட்சியர் வந்தால் மட்டுமேகீழே இறங்குவேன் எனவும் கூறி வந்த நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த வட்டாட்சியர்,தீயணைப்பு மீட்பு படை வீரர்கள் மற்றும் வேளாங்கண்ணி காவல்துறையினர் திலகரிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவரின் கோரிக்கையை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்ததன் பேரில் தற்கொலை முயற்சியை கை விட்டு கீழே இறங்கி வந்தவரை வேளாங்கண்ணி போலீசார் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் கடந்த ஆண்டு இதே செல்போன் டவரில் திலகர் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை சம்பவத்தில் நடந்த துப்பாக்கி சூட்டை கண்டித்து போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.