ETV Bharat / state

வேதாரண்யம் அருகே சுதந்திர தினத்தை புறக்கணித்த ஆதிதிராவிட மக்கள் - village people

நாகப்பட்டினம்: வேதாரண்யம் அருகே கோயிலில் மண்டகபடி செய்யும் உரிமை மறுக்கப்பட்டதால் விரக்தியடைந்த ஆதிதிராவிடர்கள், தங்களது வீடுகள்தோறும் கருப்புக் கொடி ஏற்றி சுதந்திர தினத்தை புறக்கணித்தனர்.

avoid in Independence day
author img

By

Published : Aug 15, 2019, 12:29 PM IST

நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த கள்ளிமேட்டில் பழமைவாய்ந்த காளியம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் பல ஆண்டுகளுக்கு முன்பு அனைத்து சமுதாய மக்களும் உபயதாரர்கள் ஆகவும், மண்டகப்படி செய்பவர்களாகவும் இருந்து வந்துள்ளனர். இந்நிலையில் நாளடைவில் இந்த முறை மாற்றப்பட்டு ஆதிதிராவிடர் சமுதாய மக்களுக்கு மட்டும் மண்டகப்படி செய்யும் உரிமையும், அவர்களின் தெருக்களுக்கு சாமி ஊர்வலம் செல்வதும் தடை செய்யப்பட்டுள்ளது.

இதை எதிர்த்து பலகட்டங்களாக ஆதிதிராவிட மக்கள் போராட்டங்கள், அலுவலர்கள் தலைமையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தியும் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனால் விரக்தியடைந்த அவர்கள், சுதந்திர தினத்தை புறக்கணிக்கும் வகையில், வீடுகள்தோறும் கருப்புக் கொடி ஏற்றி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த கள்ளிமேட்டில் பழமைவாய்ந்த காளியம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் பல ஆண்டுகளுக்கு முன்பு அனைத்து சமுதாய மக்களும் உபயதாரர்கள் ஆகவும், மண்டகப்படி செய்பவர்களாகவும் இருந்து வந்துள்ளனர். இந்நிலையில் நாளடைவில் இந்த முறை மாற்றப்பட்டு ஆதிதிராவிடர் சமுதாய மக்களுக்கு மட்டும் மண்டகப்படி செய்யும் உரிமையும், அவர்களின் தெருக்களுக்கு சாமி ஊர்வலம் செல்வதும் தடை செய்யப்பட்டுள்ளது.

இதை எதிர்த்து பலகட்டங்களாக ஆதிதிராவிட மக்கள் போராட்டங்கள், அலுவலர்கள் தலைமையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தியும் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனால் விரக்தியடைந்த அவர்கள், சுதந்திர தினத்தை புறக்கணிக்கும் வகையில், வீடுகள்தோறும் கருப்புக் கொடி ஏற்றி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

Intro:வேதாரண்யம் அருகே
பழம் கள்ளிமேடு
பகுதியில்
கருப்புக் கொடி ஏற்றி சுதந்திர தினத்தை புறக்கணித்தனர் ஆதிதிராவிடர் மக்கள்.Body:வேதாரண்யம் அருகே
பழம் கள்ளிமேடு பகுதியில்
கருப்புக் கொடி ஏற்றி சுதந்திர தினத்தை புறக்கணித்தனர் ஆதிதிராவிடர் மக்கள்.

நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த கள்ளி மேட்டில் பழமைவாய்ந்த காளியம்மன் கோவில் உள்ளது.
இந்தக் கோயிலில் பல ஆண்டுகளுக்கு முன்பு அனைத்து சமுதாய மக்களும் உபயதாரர்கள் ஆகவும் மண்டகப்படி செய்பவர்களாகவும் சாமி தரிசனம் செய்து வந்ததாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் பழம் கள்ளிமேடு பகுதியை சேர்ந்த ஆதிதிராவிடர் குடும்பங்களுக்கு மண்டகப்படி செய்யும் உரிமையும், அவர்களின் தெருக்களுக்கு சாமி ஊர்வலம் செல்வது தடை செய்யப்பட்டது என்றும், இதனை எதிர்த்து பல கட்ட போராட்டங்களையும் அமைதி பேச்சு வார்த்தையும் மாவட்ட நிர்வாகம் உள்பட வருவாய் துறை அலுவலர்களிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று உள்ளது.

இதில் எந்த முன்னேற்றமும் ஏற்படாத நிலையில் இந்த சுதந்திர தினத்தை புறக்கணிக்கும் வகையில் தங்கள் வீடுகளில் கருப்புக் கொடியை ஏற்றி தங்கள் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.