ETV Bharat / state

சாலை மறியல் போராட்டம் நடத்துவோம் - மூன்று மாவட்ட மீனவர்கள் எச்சரிக்கை

தடை செய்யப்பட்ட வலை, என்ஜின் பொறுத்திய படகுகளை வரும் ஆகஸ்ட் 20ஆம் தேதிக்குள் பறிமுதல் செய்யக்கோரி மூன்று மாவட்ட மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

author img

By

Published : Aug 15, 2021, 11:30 AM IST

மூன்று மாவட்ட மீனவர்கள் எச்சரிக்கை
மூன்று மாவட்ட மீனவர்கள் எச்சரிக்கை

மயிலாடுதுறை: பூம்புகார், திருமுல்லைவாசல், சந்திரபாடி உள்ளிட்ட பகுதிகளின் கிராம மீனவர்கள், தடையை மீறி சுருக்குமடி வலையுடன் 36 விசைப் படகுகளில் இன்று (ஆக15) காலை கடலுக்கு சென்றனர். இதனை எதிர்த்து தரங்கம்பாடி மீனவ கிராமத்தை தலைமை கிராமமாக கொண்ட மற்ற கிராம மீனவர்கள் 200க்கும் மேற்பட்டோர், பைபர் படகுகளில் சென்று மறிக்க முயன்றனர்.

இதனால் கடலோர கிராமங்களில் பதற்றமான சூழல் நிலவியது. இதையடுத்து, இரண்டு தரப்பு மீனவர்களையும் மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணாசிங் தலைமையிலான காவல் துறையினர் எச்சரித்து கரைக்கு திருப்பி அனுப்பினர். அப்போது வானகிரி கிராமத்தை சேர்ந்த சங்கர் என்பவருக்கு சொந்தமான பைபர் படகின் மீது திருமுல்லைவாசல் மீனவர்களின் விசைப்படகு மோதியது.

மூன்று மாவட்ட மீனவர்கள் எச்சரிக்கை

படகுகளுக்கு தீ வைப்பு

இதில் பைபர் படகு உடைந்து கடலில் மூழ்கிய நிலையில், அதில் சென்ற வானகிரியைச் சேர்ந்த சிலம்பரசன், வினோத் ஆகிய இரு மீனவர்கள் காயமடைந்தனர். அவர்களை சக மீனவர்கள் மீட்டு, மயிலாடுதுறை அரசினர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்நிலையில் பூம்புகார் கிராமத்தை சேர்ந்த நான்கு பைபர் படகுகளுக்கு அடையாளம் தெரியாத நபர்கள் தீ வைத்தனர்.

இதனால் இரண்டு கிராமங்களிலும் பதற்றம் ஏற்பட்டது. அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணாசிங் தலைமையில் நான்கு மாவட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மாவட்ட ஆட்சியர் ஆலோசனை

இதுதொடர்பாக, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், படகுகள் மோதியதில் காயமடைந்த மீனவர்களுக்கு உயரிய சிகிச்சை அளிக்கவும், விபத்தை ஏற்படுத்திய விசைப்படகுகளை பறிமுதல் செய்யவும், சுருக்கு மடிக்கு எதிரான மயிலாடுதுறை, நாகப்பட்டினம், காரைக்கால் மாவட்ட மீனவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தினர்.

பின்னர், இதுகுறித்து தரங்கம்பாடி மீனவ பஞ்சாயத்தார் தேவன் செந்தில்குமார் கூறுகையில், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், காரைக்கால் மாவட்ட மீனவர்கள் இன்று (ஆகஸ்ட் 15) தேதி முதல் தொழில் புறக்கணிப்பு செய்கின்றோம், தடை செய்யப்பட்ட வலை, எஞ்சின் பொருத்திய படகுகளை 20-ஆம் தேதிக்குள் அரசு பறிமுதல் செய்யவில்லை எனில் உண்ணாவிரதம், சாலை மறியல் போராட்டம் நடத்தவுள்ளோம் என தெரிவித்தார்.

இதையும் படிங்க: சுதந்திர, குடியரசு தினங்களன்று கொடி ஏற்றுவதில் உள்ள வித்தியாசங்கள் என்னென்ன?

மயிலாடுதுறை: பூம்புகார், திருமுல்லைவாசல், சந்திரபாடி உள்ளிட்ட பகுதிகளின் கிராம மீனவர்கள், தடையை மீறி சுருக்குமடி வலையுடன் 36 விசைப் படகுகளில் இன்று (ஆக15) காலை கடலுக்கு சென்றனர். இதனை எதிர்த்து தரங்கம்பாடி மீனவ கிராமத்தை தலைமை கிராமமாக கொண்ட மற்ற கிராம மீனவர்கள் 200க்கும் மேற்பட்டோர், பைபர் படகுகளில் சென்று மறிக்க முயன்றனர்.

இதனால் கடலோர கிராமங்களில் பதற்றமான சூழல் நிலவியது. இதையடுத்து, இரண்டு தரப்பு மீனவர்களையும் மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணாசிங் தலைமையிலான காவல் துறையினர் எச்சரித்து கரைக்கு திருப்பி அனுப்பினர். அப்போது வானகிரி கிராமத்தை சேர்ந்த சங்கர் என்பவருக்கு சொந்தமான பைபர் படகின் மீது திருமுல்லைவாசல் மீனவர்களின் விசைப்படகு மோதியது.

மூன்று மாவட்ட மீனவர்கள் எச்சரிக்கை

படகுகளுக்கு தீ வைப்பு

இதில் பைபர் படகு உடைந்து கடலில் மூழ்கிய நிலையில், அதில் சென்ற வானகிரியைச் சேர்ந்த சிலம்பரசன், வினோத் ஆகிய இரு மீனவர்கள் காயமடைந்தனர். அவர்களை சக மீனவர்கள் மீட்டு, மயிலாடுதுறை அரசினர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்நிலையில் பூம்புகார் கிராமத்தை சேர்ந்த நான்கு பைபர் படகுகளுக்கு அடையாளம் தெரியாத நபர்கள் தீ வைத்தனர்.

இதனால் இரண்டு கிராமங்களிலும் பதற்றம் ஏற்பட்டது. அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணாசிங் தலைமையில் நான்கு மாவட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மாவட்ட ஆட்சியர் ஆலோசனை

இதுதொடர்பாக, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், படகுகள் மோதியதில் காயமடைந்த மீனவர்களுக்கு உயரிய சிகிச்சை அளிக்கவும், விபத்தை ஏற்படுத்திய விசைப்படகுகளை பறிமுதல் செய்யவும், சுருக்கு மடிக்கு எதிரான மயிலாடுதுறை, நாகப்பட்டினம், காரைக்கால் மாவட்ட மீனவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தினர்.

பின்னர், இதுகுறித்து தரங்கம்பாடி மீனவ பஞ்சாயத்தார் தேவன் செந்தில்குமார் கூறுகையில், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், காரைக்கால் மாவட்ட மீனவர்கள் இன்று (ஆகஸ்ட் 15) தேதி முதல் தொழில் புறக்கணிப்பு செய்கின்றோம், தடை செய்யப்பட்ட வலை, எஞ்சின் பொருத்திய படகுகளை 20-ஆம் தேதிக்குள் அரசு பறிமுதல் செய்யவில்லை எனில் உண்ணாவிரதம், சாலை மறியல் போராட்டம் நடத்தவுள்ளோம் என தெரிவித்தார்.

இதையும் படிங்க: சுதந்திர, குடியரசு தினங்களன்று கொடி ஏற்றுவதில் உள்ள வித்தியாசங்கள் என்னென்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.