ETV Bharat / state

சீர்காழி அருகே லாரியும் காரும் நேருக்கு நேர் மோதல் - 3 பேர் மரணம், 4 பேர் படுகாயம்

author img

By

Published : Oct 11, 2019, 10:50 AM IST

நாகை: சீர்காழி புறவழிச்சாலை அருகே டேங்கர் லாரியும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்தும், நான்கு பேர் படுகாயமடைந்தும் உள்ளனர்.

naagai

திருவாரூர் மாவட்டம் பூந்தோட்டத்தைச் சேர்ந்தவர் சோமசுந்தரம் (65). நேற்றிரவு இவரது மகன் சரவணன் (40) வெளிநாடு செல்லவிருந்த காரணத்தால், அவரை வழியனுப்ப சென்னை விமான நிலையத்திற்கு சோமசுந்தரம் தனது குடும்பத்துடன் சென்றார்.

மகனை வழியனுப்பி வைத்துவிட்டு சோமசுந்தரம், திருவாரூர் நோக்கி குடும்பத்துடன் காரில் சென்றுகொண்டிருந்தார். காரை செந்தில்குமார் (40) என்பவர் ஓட்டிவந்தார். இந்தக் கார் நாகை மாவட்டம் சீர்காழி புறவழிச்சாலை அருகே சென்றுகொண்டிருந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டையிழந்தது. இதனால் எதிரே வந்த டேங்கர் லாரியின் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

விபத்தில், சோமசுந்தரம் அவரது மனைவி சாந்தி (60), மருமகள் சுமித்திரா (38) ஆகிய மூவரும் சம்பவயிடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், சோமசுந்தரத்தின் பேரன் புவனேஷ்வரன் (14), காரை ஓட்டிவந்த செந்தில்குமார் அவரது மகள் சாய்ஸ்ரீ (8), அவரின் தாய் அன்னபூர்னம்(60) ஆகிய நான்கு பேர் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்த அங்கு விரைந்த சீர்காழி காவல் துறையினர், அவர்களை மீட்டு சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இது குறித்து காவல் துறையினர் விசாரித்துவருகின்றனர்.

சீர்காழி புறவழிச்சாலை

இதையும் படிங்க:

குஜராத் பேருந்து விபத்து; பிரதமர் மோடி உருக்கம்

திருவாரூர் மாவட்டம் பூந்தோட்டத்தைச் சேர்ந்தவர் சோமசுந்தரம் (65). நேற்றிரவு இவரது மகன் சரவணன் (40) வெளிநாடு செல்லவிருந்த காரணத்தால், அவரை வழியனுப்ப சென்னை விமான நிலையத்திற்கு சோமசுந்தரம் தனது குடும்பத்துடன் சென்றார்.

மகனை வழியனுப்பி வைத்துவிட்டு சோமசுந்தரம், திருவாரூர் நோக்கி குடும்பத்துடன் காரில் சென்றுகொண்டிருந்தார். காரை செந்தில்குமார் (40) என்பவர் ஓட்டிவந்தார். இந்தக் கார் நாகை மாவட்டம் சீர்காழி புறவழிச்சாலை அருகே சென்றுகொண்டிருந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டையிழந்தது. இதனால் எதிரே வந்த டேங்கர் லாரியின் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

விபத்தில், சோமசுந்தரம் அவரது மனைவி சாந்தி (60), மருமகள் சுமித்திரா (38) ஆகிய மூவரும் சம்பவயிடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், சோமசுந்தரத்தின் பேரன் புவனேஷ்வரன் (14), காரை ஓட்டிவந்த செந்தில்குமார் அவரது மகள் சாய்ஸ்ரீ (8), அவரின் தாய் அன்னபூர்னம்(60) ஆகிய நான்கு பேர் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்த அங்கு விரைந்த சீர்காழி காவல் துறையினர், அவர்களை மீட்டு சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இது குறித்து காவல் துறையினர் விசாரித்துவருகின்றனர்.

சீர்காழி புறவழிச்சாலை

இதையும் படிங்க:

குஜராத் பேருந்து விபத்து; பிரதமர் மோடி உருக்கம்

Intro:சீர்காழி புறவழிச்சாலையில் டேங்கர் லாரியும், காரும் நேருக்கு நேர் மோதி விபத்து. ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலி . நான்கு பேர் படுகாயம்:-
Body:திருவாரூர் மாவட்டம் பூந்தோட்டத்தை சேர்ந்த
சரவணன்(42) இவர் நேற்று இரவு வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்றார். சென்னை விமான நிலையத்தில் அவரை வழியனுப்பி வைத்துவிட்டு அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சொந்த ஊரான பூந்தோட்டத்திற்கு காரில் திரும்பி வந்து கொண்டிருந்தனர். காரை கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடி அடுத்த திருச்சோபுரம் செந்தில்குமார்(40 ) என்பவர் ஓட்டி வந்துள்ளார். அந்த கார் நாகை மாவட்டம் சீர்காழி புறவழிச்சாலை கோவில்பத்து சந்திப்பு அருகே வந்தபோது. டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த டேங்கர் லாரியில் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் சரணவன் மனைவி சுமித்திரா(38). அவரது தந்தை சோமசுந்தரம்(65). தாய் சாந்தி(60) ஆகிய மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்தில் சரவணனின் மகன் புவனேஷ்வரன்(14). கார் டிரைவரும் உறவினரும் ஆன செந்தில்குமார் அவரது மகள் சாய்ஸ்ரீ(8), அவரது தாய் அன்னபூர்னம்(60) ஆகிய நான்கு பேர் படுகாயமடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த சீர்காழி டிஎஸ்பி வந்தனான் தலைமையில் போலீசார் மற்றும் தீயணைப்பு மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் உடலையும் காயமடைந்தவர்களை மீட்டு சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் சீர்காழி போலிசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டதுடன் தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர் இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.