ETV Bharat / state

இறப்பிலும் இணைபிரியாத தம்பதி: கணவன் இறந்த சோகத்தில் மனைவி உயிரிழப்பு!

கணவர் இறந்த துக்கம் தாங்காமல் மனைவியும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

author img

By

Published : Jul 26, 2022, 9:00 PM IST

இறப்பிலும் இணைபிரியாத தம்பதி: கணவன் இறந்த சோகத்தில் மனைவி உயிரிழப்பு
இறப்பிலும் இணைபிரியாத தம்பதி: கணவன் இறந்த சோகத்தில் மனைவி உயிரிழப்பு

மயிலாடுதுறையினை அடுத்து குத்தாலம் கீழ காலனியைச்சேர்ந்தவர் குணசீலன் (74). இவருடைய மனைவி தமிழரசி (68). இவர்களுக்குத் திருமணம் ஆகி 48 ஆண்டுகள் ஆகிறது. இந்தத் தம்பதிக்கு ஒரு மகனும், இரண்டு மகள்களும் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணம் செய்து வைத்த தம்பதிகள் மகிழ்ச்சியாக தங்களது பூர்வீக வீட்டில் வாழ்ந்து வந்தனர்.

இந்த நிலையில் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக குணசீலன் இன்று(ஜூலை26) அதிகாலை 3 மணி அளவில் உயிரிழந்தார். 48 ஆண்டுகள் தன்னுடன் குடும்பம் நடத்தி வந்த தனது அன்புக்கணவர் பிரிந்த துக்கம் தாங்காமல் தமிழரசி அடுத்த சில மணி நேரங்களிலேயே மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

இதனை அடுத்து மகன் இளையராஜா மற்றும் உறவினர்கள் வீட்டில் இறந்த தம்பதியினருக்கு முறைப்படி இறுதிச்சடங்கு செய்து இருவரின் உடல்களையும் இடுகாட்டுக்குக்கொண்டு சென்று அடக்கம் செய்தனர். கணவர் இறந்த துக்கம் தாங்காமல் மனைவியும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:'மின்வாரிய கடன் தொகையை உயர்த்தியது அதிமுக அரசு தான்' - அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி!

மயிலாடுதுறையினை அடுத்து குத்தாலம் கீழ காலனியைச்சேர்ந்தவர் குணசீலன் (74). இவருடைய மனைவி தமிழரசி (68). இவர்களுக்குத் திருமணம் ஆகி 48 ஆண்டுகள் ஆகிறது. இந்தத் தம்பதிக்கு ஒரு மகனும், இரண்டு மகள்களும் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணம் செய்து வைத்த தம்பதிகள் மகிழ்ச்சியாக தங்களது பூர்வீக வீட்டில் வாழ்ந்து வந்தனர்.

இந்த நிலையில் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக குணசீலன் இன்று(ஜூலை26) அதிகாலை 3 மணி அளவில் உயிரிழந்தார். 48 ஆண்டுகள் தன்னுடன் குடும்பம் நடத்தி வந்த தனது அன்புக்கணவர் பிரிந்த துக்கம் தாங்காமல் தமிழரசி அடுத்த சில மணி நேரங்களிலேயே மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

இதனை அடுத்து மகன் இளையராஜா மற்றும் உறவினர்கள் வீட்டில் இறந்த தம்பதியினருக்கு முறைப்படி இறுதிச்சடங்கு செய்து இருவரின் உடல்களையும் இடுகாட்டுக்குக்கொண்டு சென்று அடக்கம் செய்தனர். கணவர் இறந்த துக்கம் தாங்காமல் மனைவியும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:'மின்வாரிய கடன் தொகையை உயர்த்தியது அதிமுக அரசு தான்' - அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி!

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.