மயிலாடுதுறை ஒன்றியம் அகரகீரங்குடி முதல் முட்டம் வரை 3 கி.மீ. தொலைவுக்கு ரூ.3.60 கோடி மதிப்பீட்டில் சாலை விரிவுப்படுத்துதல், தார்ச்சாலை அமைக்கும் பணி நடைபெற்றுவருகிறது.
தற்போது சாலை விரிவாக்கம் செய்து கிரேட் 2, கிரேட் 3 பணிகள் முடிந்துள்ளன. இந்தப் பணிகளின் தரம் குறித்து மாநிலத் தரக் கண்காணிப்பாளர் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அலுவலர் செல்வம் தலைமையிலான குழுவினர் ஆய்வுசெய்தனர்.
இதற்காக அகரகீரங்குடியிலிருந்து முட்டம் வரை செல்லும் பாதையில் பல்வேறு இடங்களில் சாலையில் சிறு பள்ளங்கள் தோண்டி தர ஆய்வுமேற்கொண்டனர்.