ETV Bharat / state

6 அடி நீள சாரைப் பாம்புகளை அசால்ட்டாக பிடித்த 'பாம்பு பாண்டியன்'

author img

By

Published : Aug 16, 2020, 2:47 AM IST

Updated : Aug 16, 2020, 10:32 PM IST

மயிலாடுதுறை அருகே கொல்லைப் புறத்தில் புகுந்த இரண்டு சாரைப் பாம்புகளை உபகரணங்களின்றி பாம்பு பாண்டியன் பாதுகாப்பாக பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தார்.

சீர்காழி செய்திகள்  பாம்பு பாண்டியன்  மயிலாடுதுறை செய்திகள்  பாம்பு பிடிக்கும் பாம்பு பாண்டியன்  paambu pandiyan  mayiladurai news
ஆறு அடி நீள சாரைப்பாம்புகளை அசால்டாக பிடித்த பாம்பு பாண்டியன்

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி பகுதியைச் சேர்ந்த பாண்டியன், சிறுவயது முதலே பாம்பை பயமின்றி பிடித்து வருவதால், அவரைப் 'பாம்பு பாண்டியன்’ என்றே அப்பகுதி மக்கள் அழைத்து வருகின்றனர். ஆரம்பத்தில் விளையாட்டாக பாம்புகளைப் பிடித்து வந்த இவர், நாளடைவில் வீடுகளுக்குள் நுழையும் பாம்புகளைப் பிடித்து வனத்துறையில் ஒப்படைப்பதையே தனது தொழிலாக மாற்றிக்கொண்டார்.

இந்நிலையில், மயிலாடுதுறை சித்தர்காடு பாரதி நகர் பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவரின் வீட்டின் கொல்லைப் புறத்தில் இரண்டு சாரைப் பாம்புகள் புகுந்துவிட்டன. இதுகுறித்து ராஜா வனத்துறையினருக்குத் தகவல் தெரிவிக்க, அவர்கள் பாம்பு பாண்டியனுக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.

ஆறு அடி நீளமான சாரைப் பாம்புகளை பிடித்த பாம்பு பாண்டியன்

இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த பாம்பு பாண்டியன், உபகரணங்கள் ஏதுமின்றி ஆறு அடி நீளமுள்ள இரண்டு சாரைப் பாம்புகளை பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தார்.

இதையும் படிங்க: தேசியக் கொடியை ஏற்றிய தூய்மைப் பணியாளர்!

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி பகுதியைச் சேர்ந்த பாண்டியன், சிறுவயது முதலே பாம்பை பயமின்றி பிடித்து வருவதால், அவரைப் 'பாம்பு பாண்டியன்’ என்றே அப்பகுதி மக்கள் அழைத்து வருகின்றனர். ஆரம்பத்தில் விளையாட்டாக பாம்புகளைப் பிடித்து வந்த இவர், நாளடைவில் வீடுகளுக்குள் நுழையும் பாம்புகளைப் பிடித்து வனத்துறையில் ஒப்படைப்பதையே தனது தொழிலாக மாற்றிக்கொண்டார்.

இந்நிலையில், மயிலாடுதுறை சித்தர்காடு பாரதி நகர் பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவரின் வீட்டின் கொல்லைப் புறத்தில் இரண்டு சாரைப் பாம்புகள் புகுந்துவிட்டன. இதுகுறித்து ராஜா வனத்துறையினருக்குத் தகவல் தெரிவிக்க, அவர்கள் பாம்பு பாண்டியனுக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.

ஆறு அடி நீளமான சாரைப் பாம்புகளை பிடித்த பாம்பு பாண்டியன்

இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த பாம்பு பாண்டியன், உபகரணங்கள் ஏதுமின்றி ஆறு அடி நீளமுள்ள இரண்டு சாரைப் பாம்புகளை பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தார்.

இதையும் படிங்க: தேசியக் கொடியை ஏற்றிய தூய்மைப் பணியாளர்!

Last Updated : Aug 16, 2020, 10:32 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.