ETV Bharat / state

மச்சானை வெட்டிக்கொன்ற மாமா - போலீசார் வலைவீச்சு - sister husband killed young brother

நாகப்பட்டினம்: மயிலாடுதுறையில் முன்விரோதம் காரணமாக மச்சானை, அவரின் மாமாவே வெட்டிப் படுகொலை செய்துவிட்டு தலைமறைவாகியுள்ளார்.

murder
murder
author img

By

Published : Jan 19, 2020, 11:25 AM IST

Updated : Jan 19, 2020, 11:45 AM IST

நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை வரதாச்சாரியார் தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன் (26). இவருக்கும், அவரது அக்கா கணவர் முனுசாமி என்பவருக்கும், தொழில் நிமித்தம் காரணமாக முன்விரோதம் இருந்துவந்துள்ளது. இதனால், வெளியூருக்குச் சென்று வேலைபார்த்துவந்த மணிகண்டன், பொங்கலை முன்னிட்டு மயிலாடுதுறைக்கு வந்துள்ளார்.

இந்நிலையில், மணிகண்டன் ஊருக்கு வந்திருப்பதை அறிந்த முனுசாமி, அவருடைய நண்பர்கள் மூன்று பேருடன் சேர்ந்து மணிகண்டனுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் தகராறு முற்றி, கைகலப்பாக மாறியுள்ளது. இந்நிலையில், தான் மறைத்துவைத்திருந்த அரிவாளால் முனுசாமியும் அவரது நண்பர்களும் மணிகண்டனை ஓடஓட விரட்டி வெட்டியுள்ளனர். இதில், ரத்தக் காயத்துடன் மணிகண்டன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

படுகொலை செய்யப்பட்ட இளைஞரின் சடலம்

கொலை செய்யப்பட்டு கிடந்த மணிகண்டனின் உடலைப் பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக காவல் துறைக்கு தகவலளித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மயிலாடுதுறை காவல் துறையினர் இறந்தவரின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துனர். இந்தக் கொலை குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், குற்றவாளிகளை வலைவீசி தேடிவருகின்றனர்.

ஈரோடு ஜல்லிக்கட்டு: 14 காளைகளை அடக்கிய மதுரை இளைஞருக்கு பைக் பரிசு!

தற்போது இறந்துள்ள மணிகண்டன், தேடப்படும் குற்றவாளி முனுசாமி ஆகிய இருவரும் கடந்த 2014ஆம் ஆண்டு வேறொருவரை கொலைசெய்த வழக்கில் தொடர்புடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை வரதாச்சாரியார் தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன் (26). இவருக்கும், அவரது அக்கா கணவர் முனுசாமி என்பவருக்கும், தொழில் நிமித்தம் காரணமாக முன்விரோதம் இருந்துவந்துள்ளது. இதனால், வெளியூருக்குச் சென்று வேலைபார்த்துவந்த மணிகண்டன், பொங்கலை முன்னிட்டு மயிலாடுதுறைக்கு வந்துள்ளார்.

இந்நிலையில், மணிகண்டன் ஊருக்கு வந்திருப்பதை அறிந்த முனுசாமி, அவருடைய நண்பர்கள் மூன்று பேருடன் சேர்ந்து மணிகண்டனுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் தகராறு முற்றி, கைகலப்பாக மாறியுள்ளது. இந்நிலையில், தான் மறைத்துவைத்திருந்த அரிவாளால் முனுசாமியும் அவரது நண்பர்களும் மணிகண்டனை ஓடஓட விரட்டி வெட்டியுள்ளனர். இதில், ரத்தக் காயத்துடன் மணிகண்டன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

படுகொலை செய்யப்பட்ட இளைஞரின் சடலம்

கொலை செய்யப்பட்டு கிடந்த மணிகண்டனின் உடலைப் பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக காவல் துறைக்கு தகவலளித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மயிலாடுதுறை காவல் துறையினர் இறந்தவரின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துனர். இந்தக் கொலை குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், குற்றவாளிகளை வலைவீசி தேடிவருகின்றனர்.

ஈரோடு ஜல்லிக்கட்டு: 14 காளைகளை அடக்கிய மதுரை இளைஞருக்கு பைக் பரிசு!

தற்போது இறந்துள்ள மணிகண்டன், தேடப்படும் குற்றவாளி முனுசாமி ஆகிய இருவரும் கடந்த 2014ஆம் ஆண்டு வேறொருவரை கொலைசெய்த வழக்கில் தொடர்புடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Intro:மயிலாடுதுறையில் முன்விரோதம் காரணமாக இளைஞர் வெட்டிப் படுகொலை. கொலை சம்பவத்தில் ஈடுபட்ட அக்காள் கணவர் உள்ளிட்ட 3 பேருக்கு மயிலாடுதுறை போலீசார் வலைவீச்சு:-
Body:நாகை மாவட்டம் மயிலாடுதுறை வரதாச்சாரியார் தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன் (26). பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த இவருக்கும், இதேபகுதியைச் சேர்ந்த மணிகண்டனின் அக்காள் கணவர் முனுசாமி என்பவருக்கும், சாவு வீடுகளில் டிரம்ஸ் அடிப்பது, பன்றி மேய்ப்பது ஆகிய வேலைகளில் தொழில்நிமித்தம் ஏற்கெனவே முன்விரோதம் இருந்துள்ளது. இதனால், வெளியூருக்குச் சென்று வேலை பார்த்து வந்த மணிகண்டன், பொங்கல் விழாவுக்காக மயிலாடுதுறைக்கு வந்துள்ளார். இந்நிலையில், மணிகண்டன் ஊருக்கு வந்திருப்பதைக் கண்ட முனுசாமி, அவருடைய நண்பர்கள் 3 பேருடன் சேர்ந்து மணிகண்டனுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். ஒருகட்டத்தில் தகராறு முற்றி, தான் மறைத்துவைத்திருந்த அரிவாளால் முனுசாமியும் அவரது நண்பர்களும் மணிகண்டனை ஓடஓட விரட்டி வெட்டியதாக கூறப்படுகிறது. மணிகண்டன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கொலை செய்யப்பட்டு கிடந்த மணிகண்டனின் உடலை பார்த்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தந்துள்ளனர். இதையடுத்து, மயிலாடுதுறை போலீஸார் விரைந்து வந்து பிரேதத்தைக் கைப்பற்றி, மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, கொலைச் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை தேடி வருகின்றனர். இறந்த மணிகண்டன், தேடப்படும் குற்றவாளிகள் முனுசாமி ஆகியோர் இருவரும் கடந்த 2014-ஆம் ஆண்டு வேறொருவரை கொலை செய்த வழக்கில் தொடர்புடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Conclusion:
Last Updated : Jan 19, 2020, 11:45 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.