ETV Bharat / state

ஆற்றில் உடைப்பு: பள்ளிக்குள் புகுந்த வெள்ளம்... தத்தளித்த அரசுப்பள்ளி

author img

By

Published : Dec 5, 2022, 7:14 PM IST

Updated : Dec 5, 2022, 7:39 PM IST

மயிலாடுதுறை அருகே வீரசோழன் ஆற்றில் உடைப்பு ஏற்பட்டு அரசினர் மேல்நிலைப்பள்ளியில் தண்ணீர் புகுந்ததால் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

வீரசோழன் ஆற்றில் உடைப்பு: தண்ணீரில் தத்தளித்த அரசு பள்ளி
வீரசோழன் ஆற்றில் உடைப்பு: தண்ணீரில் தத்தளித்த அரசு பள்ளி

மயிலாடுதுறை: தரங்கம்பாடி தாலுகா சங்கரன்பந்தலில் உள்ள முக்கிய ஆறான வீரசோழன் ஆற்றில் தற்பொழுது அதிக அளவில் தண்ணீர் செல்கிறது. இந்நிலையில் வீரசோழன் ஆற்றின் கரையில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக அருகில் இருந்த சங்கரன்பந்தல் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகம் முழுவதும் தண்ணீர் புகுந்து பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இப்பள்ளியில் மாணவ - மாணவிகள் சுமார் 700க்கும் மேற்பட்டோர் பயின்று வருகின்றனர். தற்போது பள்ளி வளாகங்களை சூழ்ந்த ஆற்று நீரால் பள்ளிக்கு இன்று விடுமுறை விடப்பட்டது. மேலும் பொதுப்பணித்துறை மூலம் ஆற்றில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

வீரசோழன் ஆற்றில் உடைப்பு: தண்ணீரில் தத்தளித்த அரசு பள்ளி

வளாகத்தில் தேங்கியுள்ள தண்ணீரை பள்ளி நிர்வாகத்தினர் மின்‌மோட்டார் மூலம் வெளியேற்றி வருகின்றனர். மொத்த தண்ணீரும் வடிந்த பிறகு பள்ளி வழக்கம் போல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் முதல் பெண் "சோப்தார்" நியமனம்!

மயிலாடுதுறை: தரங்கம்பாடி தாலுகா சங்கரன்பந்தலில் உள்ள முக்கிய ஆறான வீரசோழன் ஆற்றில் தற்பொழுது அதிக அளவில் தண்ணீர் செல்கிறது. இந்நிலையில் வீரசோழன் ஆற்றின் கரையில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக அருகில் இருந்த சங்கரன்பந்தல் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகம் முழுவதும் தண்ணீர் புகுந்து பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இப்பள்ளியில் மாணவ - மாணவிகள் சுமார் 700க்கும் மேற்பட்டோர் பயின்று வருகின்றனர். தற்போது பள்ளி வளாகங்களை சூழ்ந்த ஆற்று நீரால் பள்ளிக்கு இன்று விடுமுறை விடப்பட்டது. மேலும் பொதுப்பணித்துறை மூலம் ஆற்றில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

வீரசோழன் ஆற்றில் உடைப்பு: தண்ணீரில் தத்தளித்த அரசு பள்ளி

வளாகத்தில் தேங்கியுள்ள தண்ணீரை பள்ளி நிர்வாகத்தினர் மின்‌மோட்டார் மூலம் வெளியேற்றி வருகின்றனர். மொத்த தண்ணீரும் வடிந்த பிறகு பள்ளி வழக்கம் போல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் முதல் பெண் "சோப்தார்" நியமனம்!

Last Updated : Dec 5, 2022, 7:39 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.