தமிழ்நாட்டில் கல்வியை ஊக்குவிக்கும் நோக்கில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, 11ஆம் வகுப்புப் பயிலும் அனைத்துப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டங்களை நடைமுறைப்படுத்திவருகிறார்.
இந்நிகழ்ச்சியில் பூம்புகார் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் எஸ். பவுன்ராஜ் கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்குத் தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். முன்னதாக மாணவர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார். இதில் பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர்கள், அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு - சிபிஐ அலுவலர்கள் திடீர் விசிட்!