ETV Bharat / state

கடற்கரையில் கரை ஒதுங்கும் கஞ்சா பொட்டலங்கள் - போலீசார் தீவிர விசாரணை!

author img

By

Published : Aug 13, 2023, 2:18 PM IST

மயிலாடுதுறை மாவட்டம் கடற்கரையோர கிராமங்களில் அடுத்தடுத்து மர்மமான முறையில் கரை ஒதுங்கிய 4 கிலோ கஞ்சா பொட்டலங்களை போலீசார் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடற்கரையில் கரை ஒதுங்கும் கஞ்சா பொட்டலங்கள்
கடற்கரையில் கரை ஒதுங்கும் கஞ்சா பொட்டலங்கள்
கடற்கரையில் கரை ஒதுங்கும் கஞ்சா பொட்டலங்கள்

மயிலாடுதுறை: தமிழ்நாட்டில் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களை முற்றிலும் ஒழிப்பதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், போதைப் பொருட்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் போதைப் பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு பிரச்சாரங்களை அதிகப்படுத்தி, அதன் பயன்பாட்டை அடியோடு ஒழிக்க காவல் துறைக்கு தமிழக அரசு சார்பில் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.

அந்த உத்தரவின் அடிப்படையில், கஞ்சா மற்றும் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுபவர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, அவர்களது வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகாவிற்கு உட்பட்ட சின்னூர்பேட்டை மீனவ கிராமம் கடற்கரையோரத்தில், நேற்றைய முன்தினம் (ஆகஸ்ட் 11) இரவு இரண்டு மர்ம பொட்டலங்கள் கரை ஒதுங்கி இருப்பதாக மீனவர்கள், கடலோர காவல்படை போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, தரங்கம்பாடி கடற்கரையோர காவல் நிலைய போலீசார், அந்த இரண்டு பொட்டலங்களைக் கைப்பற்றி சோதனை செய்தனர். சோதனையில் அந்த மர்ம பொட்டலங்களில் 2 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்துள்ளது. அதனைத் தொடர்ந்து அப்பகுதியில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

இதையும் படிங்க: தொழிலதிபருக்கு ரூ.500 கோடி கடன் வாங்கித் தருவதாக மோசடி - வங்கி மேலாளர் உள்பட மூவர் கைது!

இந்த நிலையில், நேற்று (ஆகஸ்ட் 12) சந்திரபாடி மீனவ கிராமத்தில் மீண்டும் கடற்கரையோரம் ஒரு பொட்டலம் கரை ஓதுங்கியதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் கடலோர காவல்படை போலீசார், காவல் ஆய்வாளர் ரமேஷ்குமார் தலைமையில் சம்பவ இடத்திற்கு சென்று அந்த பொட்டலத்தை சோதனை செய்தனர். சோதனையில் கரை ஒதுங்கிய பொட்டலத்தில் 2 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்து, அதனை போலீசார் கைப்பற்றிச் சென்றனர்.

இதனிடையே கஞ்சா பொட்டலங்கள் எங்கிருந்து வந்தது? யாரேனும் கடத்தி வந்தார்களா? அல்லது படகில் எடுத்துச் சென்றது கீழே விழுந்து கரை ஒதுங்கியதா? யாராவது படகில் கடத்தி வந்தபோது வீசிச் சென்றார்களா உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், தமிழகம் முழுவதிலும் போதைப்பொருட்கள் ஒழிப்பு பணியில் போலீசார் தீவிரமாக செயல்பட்டு வரும் நிலையில், தரங்கம்பாடி கடற்கரையை ஒட்டிய கிராமங்களில் அடுத்தடுத்து 4 கிலோ அளவிற்கு கஞ்சா பொட்டலங்கள் மர்மமான முறையில் கரை ஒதுங்கிய சம்பவத்தால் அப்பகுதி மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதையும் படிங்க: சப்ஸ்கிரைப் செய்தால் பணம் சம்பாதிக்கலாம்.. ரூ.18 லட்சம் மோசடி - 5 பேர் சிக்கியது எப்படி?

கடற்கரையில் கரை ஒதுங்கும் கஞ்சா பொட்டலங்கள்

மயிலாடுதுறை: தமிழ்நாட்டில் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களை முற்றிலும் ஒழிப்பதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், போதைப் பொருட்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் போதைப் பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு பிரச்சாரங்களை அதிகப்படுத்தி, அதன் பயன்பாட்டை அடியோடு ஒழிக்க காவல் துறைக்கு தமிழக அரசு சார்பில் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.

அந்த உத்தரவின் அடிப்படையில், கஞ்சா மற்றும் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுபவர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, அவர்களது வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகாவிற்கு உட்பட்ட சின்னூர்பேட்டை மீனவ கிராமம் கடற்கரையோரத்தில், நேற்றைய முன்தினம் (ஆகஸ்ட் 11) இரவு இரண்டு மர்ம பொட்டலங்கள் கரை ஒதுங்கி இருப்பதாக மீனவர்கள், கடலோர காவல்படை போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, தரங்கம்பாடி கடற்கரையோர காவல் நிலைய போலீசார், அந்த இரண்டு பொட்டலங்களைக் கைப்பற்றி சோதனை செய்தனர். சோதனையில் அந்த மர்ம பொட்டலங்களில் 2 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்துள்ளது. அதனைத் தொடர்ந்து அப்பகுதியில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

இதையும் படிங்க: தொழிலதிபருக்கு ரூ.500 கோடி கடன் வாங்கித் தருவதாக மோசடி - வங்கி மேலாளர் உள்பட மூவர் கைது!

இந்த நிலையில், நேற்று (ஆகஸ்ட் 12) சந்திரபாடி மீனவ கிராமத்தில் மீண்டும் கடற்கரையோரம் ஒரு பொட்டலம் கரை ஓதுங்கியதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் கடலோர காவல்படை போலீசார், காவல் ஆய்வாளர் ரமேஷ்குமார் தலைமையில் சம்பவ இடத்திற்கு சென்று அந்த பொட்டலத்தை சோதனை செய்தனர். சோதனையில் கரை ஒதுங்கிய பொட்டலத்தில் 2 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்து, அதனை போலீசார் கைப்பற்றிச் சென்றனர்.

இதனிடையே கஞ்சா பொட்டலங்கள் எங்கிருந்து வந்தது? யாரேனும் கடத்தி வந்தார்களா? அல்லது படகில் எடுத்துச் சென்றது கீழே விழுந்து கரை ஒதுங்கியதா? யாராவது படகில் கடத்தி வந்தபோது வீசிச் சென்றார்களா உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், தமிழகம் முழுவதிலும் போதைப்பொருட்கள் ஒழிப்பு பணியில் போலீசார் தீவிரமாக செயல்பட்டு வரும் நிலையில், தரங்கம்பாடி கடற்கரையை ஒட்டிய கிராமங்களில் அடுத்தடுத்து 4 கிலோ அளவிற்கு கஞ்சா பொட்டலங்கள் மர்மமான முறையில் கரை ஒதுங்கிய சம்பவத்தால் அப்பகுதி மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதையும் படிங்க: சப்ஸ்கிரைப் செய்தால் பணம் சம்பாதிக்கலாம்.. ரூ.18 லட்சம் மோசடி - 5 பேர் சிக்கியது எப்படி?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.