ETV Bharat / state

கரை ஒதுங்கிய மாணவியின் சடலம் - போலீசார் விசாரணை

காரைக்கால் கடற்கரையில் கரை ஒதுங்கிய மாணவியின் சடலத்தை மீட்ட காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

author img

By

Published : Nov 8, 2020, 2:05 PM IST

கரை ஒதுங்கிய மாணவியின் சடலம் - போலீசார் விசாரணை
கரை ஒதுங்கிய மாணவியின் சடலம் - போலீசார் விசாரணை

புதுச்சேரி மாநிலம், காரைக்கால் மேடு மீனவர் கிராமம் கடற்கரையில், இளம்பெண் ஒருவரின் உடல் கரை ஒதுங்கி இருப்பதாக, காரைக்கால் நகர காவல் நிலையத்திற்கு அப்பகுதியினர் தகவல் அளித்தனர். இதனையடுத்து அங்கு விரைந்த காவல் துறையினர் இளம்பெண்ணின் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தியதில், அவர் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி என்பது தெரிய வந்தது.

இது தொடர்பாக, பெற்றோர்களிடம் விசாரிக்கையில், அம்மாணவி நேற்று ( நவம்பர் 7) இரவு வீட்டில் இருந்தாகவும், இன்று காலை கடற்கரையில் அவர் அணிந்திருந்த தங்க நகைகளுடன் மர்மமான முறையில் உயிரிழந்திருப்பதும் தெரிந்தது.

பின்னர் மாணவியின் உடலை உடற்கூராய்வுக்குக்காக காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காவல் துறையினர் தொடர்ந்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

புதுச்சேரி மாநிலம், காரைக்கால் மேடு மீனவர் கிராமம் கடற்கரையில், இளம்பெண் ஒருவரின் உடல் கரை ஒதுங்கி இருப்பதாக, காரைக்கால் நகர காவல் நிலையத்திற்கு அப்பகுதியினர் தகவல் அளித்தனர். இதனையடுத்து அங்கு விரைந்த காவல் துறையினர் இளம்பெண்ணின் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தியதில், அவர் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி என்பது தெரிய வந்தது.

இது தொடர்பாக, பெற்றோர்களிடம் விசாரிக்கையில், அம்மாணவி நேற்று ( நவம்பர் 7) இரவு வீட்டில் இருந்தாகவும், இன்று காலை கடற்கரையில் அவர் அணிந்திருந்த தங்க நகைகளுடன் மர்மமான முறையில் உயிரிழந்திருப்பதும் தெரிந்தது.

பின்னர் மாணவியின் உடலை உடற்கூராய்வுக்குக்காக காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காவல் துறையினர் தொடர்ந்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:

மாணவியின் அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்டவர் 4 மாதங்களுக்கு முன்பே மரணம்!

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.