ETV Bharat / state

மதுபோதையில் விபத்து - மருந்து கடை உரிமையாளர் கைது

author img

By

Published : Aug 11, 2021, 9:11 AM IST

கற்கோயில் அருகே அதிவேகமாக கார் ஓட்டிச்சென்று விபத்து ஏற்படுத்திய விவகாரம் தொடர்பாக மருந்து கடை உரிமையாளரை காவல் துறையினர் கைது செய்தனர்.

மருந்துக்கடை உரிமையாளர் கைது
மருந்துக்கடை உரிமையாளர் கைது

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி கன்னியாகுடி கிராமத்தைச் சேர்ந்தவர் புருஷோத்தமன். இவர் கர்ப்பிணியான தனது மனைவி தமிழ்வாணி என்பவரை இருக்கர வாகனத்தில் பரிசோதனைக்காக வைதீஸ்வரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுவிட்டு மீண்டும் வீடு திரும்பியுள்ளார்.

அப்போது கற்கோயில் கிராமம் எதிரே அதிவேகமாக வந்த கார் மோதியதில் இருவரும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தொடர்ந்து கட்டுப்பாட்டை இழந்து வேகமாகச் சென்ற கார் சாலையோரம் நடந்து சென்ற உடையாம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த தையல் நாயகி (52), ராணி (60) ஆகியோர் மீது மோதிவிட்டு சென்றது.

இதில், மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே தையல்நாயகி பரிதாபமாக உயிரிழக்க, சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ராணி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையே விபத்தை ஏற்படுத்திய கார் மருந்து கடை உரிமையாளர் அருணுடையது என்பதும், காரை ஓட்டி சென்றதும் அவர்தான் என்பதும் தெரியவந்தது.

மேலும், அருணை கைது செய்யும்வரை, இறந்தவர்களின் உடலை எடுக்க விடாமல் அங்கு திரண்டிருந்த பொது மக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அருண் குமாரைக் கைது செய்து உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

ஓட்டுநரின் அஜாக்கிரதையால் நேர்ந்த இந்த விபத்தில் கர்ப்பிணி பெண், அவரது கணவர் மற்றும் மூதாட்டி ஆகியோர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: சீர்காழி அருகே கார் விபத்து: கர்ப்பிணி உள்பட மூவர் உயிரிழப்பு

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி கன்னியாகுடி கிராமத்தைச் சேர்ந்தவர் புருஷோத்தமன். இவர் கர்ப்பிணியான தனது மனைவி தமிழ்வாணி என்பவரை இருக்கர வாகனத்தில் பரிசோதனைக்காக வைதீஸ்வரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுவிட்டு மீண்டும் வீடு திரும்பியுள்ளார்.

அப்போது கற்கோயில் கிராமம் எதிரே அதிவேகமாக வந்த கார் மோதியதில் இருவரும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தொடர்ந்து கட்டுப்பாட்டை இழந்து வேகமாகச் சென்ற கார் சாலையோரம் நடந்து சென்ற உடையாம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த தையல் நாயகி (52), ராணி (60) ஆகியோர் மீது மோதிவிட்டு சென்றது.

இதில், மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே தையல்நாயகி பரிதாபமாக உயிரிழக்க, சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ராணி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையே விபத்தை ஏற்படுத்திய கார் மருந்து கடை உரிமையாளர் அருணுடையது என்பதும், காரை ஓட்டி சென்றதும் அவர்தான் என்பதும் தெரியவந்தது.

மேலும், அருணை கைது செய்யும்வரை, இறந்தவர்களின் உடலை எடுக்க விடாமல் அங்கு திரண்டிருந்த பொது மக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அருண் குமாரைக் கைது செய்து உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

ஓட்டுநரின் அஜாக்கிரதையால் நேர்ந்த இந்த விபத்தில் கர்ப்பிணி பெண், அவரது கணவர் மற்றும் மூதாட்டி ஆகியோர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: சீர்காழி அருகே கார் விபத்து: கர்ப்பிணி உள்பட மூவர் உயிரிழப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.