ETV Bharat / state

நாகூர் தர்கா சொத்துகளை அபகரிக்க முயற்சி; தடுப்பவருக்கு போன் கால் மிரட்டல்!

author img

By

Published : Jul 18, 2020, 7:03 PM IST

நாகப்பட்டினம்: நாகூர் தர்கா சொத்துகளைப் பாதுகாக்க தடை ஆணை பெற்ற தர்காவின் முன்னாள் ஆலோசனைக் குழுத் தலைவர் மீது சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புவதாக எஸ்பி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

நாகூர் தர்கா
நாகூர் தர்கா

நாகை மாவட்டத்தைச் சுற்றி உலகப் புகழ்பெற்ற நாகூர் தர்காவிற்குச் சொந்தமான பல கோடி ரூபாய் சொத்துகள் உள்ளன. இந்தச் சொத்துகளைப் பல்வேறு நபர்கள் கையகப்படுத்தி விற்பதாகப் புகார்கள் எழுந்தன. இந்நிலையில், 2012ஆம் ஆண்டு நாகூர் பங்கு தேர்தலில் முஹம்மது கலீபா சாஹிப் என்பவர் தர்கா ஆலோசனைக் குழுத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். இவர் தர்கா சொத்துகளைப் பாதுகாக்க வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, தர்கா சொத்துகளை விற்க தடை ஆணையும் பெற்றார்.

மேலும் தர்காவிற்குச் சொந்தமான பல்வேறு சொத்துகள் விற்பனை செய்யப்பட்டதும் இதன் மூலம் தெரியவந்தது. இந்நிலையில், வழக்கை தொடுத்த செய்யது முஹம்மது கலீபா சாஹிப்க்கு அடையாளம் தெரியாத நபர்களிடமிருந்து மிரட்டல் வந்ததுடன், அவர் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு, சிறை சென்றதாகச் சமூக வலைதளங்களில் சிலர் தவறான தகவல்களைப் பரப்பியுள்ளனர்.

பல கோடி ரூபாய் மதிப்புள்ள நாகூர் தர்கா சொத்துகளை அபகரிக்க முயற்சி: பின்னணி என்ன?

இதையடுத்து செய்யது முஹம்மது கலீபா சாஹிப், நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலும், நாகூர் காவல் நிலையத்திலும் இதுகுறித்து இன்று (ஜூலை 18) புகாரளித்தார். தர்கா சொத்துகளை அபகரிக்கும் நபர்கள்தான் இதுபோன்ற அவதூறு பரப்பியதாகத் தெரிவித்துள்ள அவர், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.


இதையும் படிங்க: உலகப் புகழ்பெற்ற நாகூர் தர்காவின் 463ஆம் ஆண்டு கந்தூரி விழா

நாகை மாவட்டத்தைச் சுற்றி உலகப் புகழ்பெற்ற நாகூர் தர்காவிற்குச் சொந்தமான பல கோடி ரூபாய் சொத்துகள் உள்ளன. இந்தச் சொத்துகளைப் பல்வேறு நபர்கள் கையகப்படுத்தி விற்பதாகப் புகார்கள் எழுந்தன. இந்நிலையில், 2012ஆம் ஆண்டு நாகூர் பங்கு தேர்தலில் முஹம்மது கலீபா சாஹிப் என்பவர் தர்கா ஆலோசனைக் குழுத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். இவர் தர்கா சொத்துகளைப் பாதுகாக்க வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, தர்கா சொத்துகளை விற்க தடை ஆணையும் பெற்றார்.

மேலும் தர்காவிற்குச் சொந்தமான பல்வேறு சொத்துகள் விற்பனை செய்யப்பட்டதும் இதன் மூலம் தெரியவந்தது. இந்நிலையில், வழக்கை தொடுத்த செய்யது முஹம்மது கலீபா சாஹிப்க்கு அடையாளம் தெரியாத நபர்களிடமிருந்து மிரட்டல் வந்ததுடன், அவர் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு, சிறை சென்றதாகச் சமூக வலைதளங்களில் சிலர் தவறான தகவல்களைப் பரப்பியுள்ளனர்.

பல கோடி ரூபாய் மதிப்புள்ள நாகூர் தர்கா சொத்துகளை அபகரிக்க முயற்சி: பின்னணி என்ன?

இதையடுத்து செய்யது முஹம்மது கலீபா சாஹிப், நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலும், நாகூர் காவல் நிலையத்திலும் இதுகுறித்து இன்று (ஜூலை 18) புகாரளித்தார். தர்கா சொத்துகளை அபகரிக்கும் நபர்கள்தான் இதுபோன்ற அவதூறு பரப்பியதாகத் தெரிவித்துள்ள அவர், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.


இதையும் படிங்க: உலகப் புகழ்பெற்ற நாகூர் தர்காவின் 463ஆம் ஆண்டு கந்தூரி விழா

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.