ETV Bharat / state

சாலையில் கிடந்த பணப்பை; உரிய நபரிடம் ஒப்படைத்தவருக்கு எஸ்.பி பாராட்டு!

author img

By

Published : Jul 29, 2019, 4:52 PM IST

நாகை: சாலையில் கேட்பாரற்று கிடந்த ரூ.61,000 பணத்தை உரிய நபரிடம் ஒப்படைத்த நபர், அவருக்கு உதவிய எஸ்.ஐ ஆகியோருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜசேகர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

police

நாகை மாவட்டம் திட்டச்சேரியை சேர்ந்த முஹம்மது பக்ருதீன்(63) என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் திட்டச்சேரியிலிருந்து காரைக்கால் நோக்கிச் சென்றுள்ளார். அப்போது, தனது இருசக்கர வாகனத்தின் முன்பகுதியில் வைத்திருந்த ரூ.61,000 பணத்தை தவறவிட்டுள்ளார்.

அந்த சமயத்தில் அவ்வழியே சென்றுகொண்டிருந்த அதே ஊரைச் சேர்ந்த அப்பாஸ் மந்திரி என்பவர் பக்ருதீன் தவறவிட்ட பணப்பையை எடுத்து, அருகில் இருந்த வாழ்மங்கலம் சோதனைச்சாவடியில் ஒப்படைத்தார்.

பின்னர் திட்டச்சேரி காவல் நிலைய உதவி ஆய்வாளர் பார்த்திபன் அந்த பையை சோதனையிட்டபோது அதில் இருந்த தொலைபேசி எண்ணை தொடர்புகொண்டு அந்த பணம் முகம்மது பக்ருதீன் தவறவிட்டதுதான் என்பதை உறுதி செய்தனர்.

இதையடுத்து, உரிய நபரிடம் அந்த பணம் ஒப்படைக்கப்பட்டது. இந்த சம்பவத்தை கேள்விபட்ட நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜசேகர், வழியில் கிடைத்த பணத்தின் மீது ஆசை கொள்ளாமால் காவல் துறையில் ஒப்படைத்த அப்பாஸ் மந்திரி, அதனை கையாடல் செய்யாமல் உரிய நபரிடம் ஒப்படைக்க உதவிய எஸ்.ஐ பார்த்திபன் ஆகிய இருவரையும் நேரில் அழைத்து பாராட்டினார்.

நாகை மாவட்டம் திட்டச்சேரியை சேர்ந்த முஹம்மது பக்ருதீன்(63) என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் திட்டச்சேரியிலிருந்து காரைக்கால் நோக்கிச் சென்றுள்ளார். அப்போது, தனது இருசக்கர வாகனத்தின் முன்பகுதியில் வைத்திருந்த ரூ.61,000 பணத்தை தவறவிட்டுள்ளார்.

அந்த சமயத்தில் அவ்வழியே சென்றுகொண்டிருந்த அதே ஊரைச் சேர்ந்த அப்பாஸ் மந்திரி என்பவர் பக்ருதீன் தவறவிட்ட பணப்பையை எடுத்து, அருகில் இருந்த வாழ்மங்கலம் சோதனைச்சாவடியில் ஒப்படைத்தார்.

பின்னர் திட்டச்சேரி காவல் நிலைய உதவி ஆய்வாளர் பார்த்திபன் அந்த பையை சோதனையிட்டபோது அதில் இருந்த தொலைபேசி எண்ணை தொடர்புகொண்டு அந்த பணம் முகம்மது பக்ருதீன் தவறவிட்டதுதான் என்பதை உறுதி செய்தனர்.

இதையடுத்து, உரிய நபரிடம் அந்த பணம் ஒப்படைக்கப்பட்டது. இந்த சம்பவத்தை கேள்விபட்ட நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜசேகர், வழியில் கிடைத்த பணத்தின் மீது ஆசை கொள்ளாமால் காவல் துறையில் ஒப்படைத்த அப்பாஸ் மந்திரி, அதனை கையாடல் செய்யாமல் உரிய நபரிடம் ஒப்படைக்க உதவிய எஸ்.ஐ பார்த்திபன் ஆகிய இருவரையும் நேரில் அழைத்து பாராட்டினார்.

Intro:தவறவிட்ட பணம் உரியவரிடம் ஒப்படைக்க உதவிய நபர்-நேரில் அழைத்து பாராட்டிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.Body:தவறவிட்ட பணம் உரியவரிடம் ஒப்படைக்க உதவிய நபர்-நேரில் அழைத்து பாராட்டிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.

நாகப்பட்டினம் மாவட்டம், திட்டச்சேரியை சேர்ந்த 63 வயதான
முஹம்மது பாருதீன் என்பார் இருசக்கர வாகனத்தில் திட்டச்சேரிலிருந்து காரைக்கால் நோக்கி
சென்றுள்ளார்.

அப்போது தனது இருசக்கர வாகனதின் முன்பகுதியில்
வைத்திருந்த ரூபாய்,61,000 ஆயிரம் பணத்தை தவறவிட்டுள்ளார்.

இந்நிலையில்,
அந்த வழியில் இரு சக்கர வாகனத்தில் வந்த அதே ஊரை சேர்ந்த அப்பாஸ் மந்திரி என்பவர் கீழே கிடந்த பையை எடுத்துள்ளார், அப்போது அதில் பணம் இருப்பதை கண்டு அதனை அருகில் இருந்த வாழ்மங்கலம்
சோதனைனச்சாவடியில் ஒப்படைத்துள்ளார்.

பின் திட்டச்சேரி காவல் நிலைய உதவி
ஆய்வாளர் பார்த்திபன் அந்த பையை சோதனை செய்தபோது அதில் 61,000 ரூபாய்
பணம் மற்றும் தொலைபேசி எண் இருந்துள்ளது. இதனை அடுத்து அந்த நம்பரில் தொடர்பு
கொண்டு உரிய விசாரணை செய்ததில் அந்த பணம் முகம்மது பக்ருதீன்
என்பவருடையது என்று தெரியவந்ததையடுத்து அவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த
சம்பவத்தை அறிந்த நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜசேகர், வழியில் கிடைத்த பணத்தின் மீது ஆசைக்கொள்ளாமால்
காவல்துறையில் ஒப்படைத்த அப்பாஸ் மந்திரி
மற்றும் திட்டச்சேரி காவல் உதவி ஆய்வாளர் பார்த்திபன் ஆகிய இருவரையும் நேரில்
அழைத்து பாராட்டி சால்வை அணிவித்து கௌரவித்தார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.