ETV Bharat / state

படகுகளில் தூக்கு மாட்டி போராட்டம் நடத்திய மீனவர்கள்! - Nagai fishermen news in Tamil

நாகை: தூண்டில் வளைவு வேண்டி படகுகளில் தூக்கு மாட்டிக்கொண்டு மீனவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

படகுகளில் தூக்கு மாட்டிக் கொண்டு போராட்டம் நடத்திய மீனவர்கள்!
படகுகளில் தூக்கு மாட்டிக் கொண்டு போராட்டம் நடத்திய மீனவர்கள்!
author img

By

Published : Dec 25, 2020, 12:26 PM IST

நாகையை அடுத்துள்ள சாமந்தான்பேட்டை மீனவ கிராமத்தில் தூண்டில் வளைவுடன் கூடிய மீன் இறங்கு தளம் அமைக்கப்படும் என கடந்த 2015ஆம் ஆண்டு, சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்டது. ஆனால் அதற்கான பணிகள் இதுவரை தொடங்கப்படாமலேயே உள்ளது.

இதனைக் கண்டித்து அப்பகுதி மீனவர்கள் கடந்த நான்கு நாட்களாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் தொழில் மறியல், காத்திருப்பு போராட்டம் ஆகியவற்றில் ஈடுபட்டு வந்தனர். இதனையடுத்து மீனவர்களுடன் மாவட்ட நிர்வாகம் சார்பில் மீன்வளத்துறை அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

நாகையில் 5 வந்து நாளாக தொடரும் மீனவர்களின் போராட்டம்

இருப்பினும் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், போராட்டத்தின் ஐந்தாம் நாளான இன்று, அரசு தங்கள் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும், மாவட்ட ஆட்சியர், அமைச்சர்கள் தங்களின் இதுவரை நேரில் வந்து சந்திக்கவில்லை எனவும் கூறி, மீனவர்கள் குடும்பத்துடன் படகுகளில் தூக்கு மாட்டிக்கொண்டும், பெண்கள் ஒப்பாரி வைத்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க...ஆறு ஐஏஎஸ் அலுவலர்கள் இடமாற்றம்!

நாகையை அடுத்துள்ள சாமந்தான்பேட்டை மீனவ கிராமத்தில் தூண்டில் வளைவுடன் கூடிய மீன் இறங்கு தளம் அமைக்கப்படும் என கடந்த 2015ஆம் ஆண்டு, சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்டது. ஆனால் அதற்கான பணிகள் இதுவரை தொடங்கப்படாமலேயே உள்ளது.

இதனைக் கண்டித்து அப்பகுதி மீனவர்கள் கடந்த நான்கு நாட்களாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் தொழில் மறியல், காத்திருப்பு போராட்டம் ஆகியவற்றில் ஈடுபட்டு வந்தனர். இதனையடுத்து மீனவர்களுடன் மாவட்ட நிர்வாகம் சார்பில் மீன்வளத்துறை அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

நாகையில் 5 வந்து நாளாக தொடரும் மீனவர்களின் போராட்டம்

இருப்பினும் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், போராட்டத்தின் ஐந்தாம் நாளான இன்று, அரசு தங்கள் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும், மாவட்ட ஆட்சியர், அமைச்சர்கள் தங்களின் இதுவரை நேரில் வந்து சந்திக்கவில்லை எனவும் கூறி, மீனவர்கள் குடும்பத்துடன் படகுகளில் தூக்கு மாட்டிக்கொண்டும், பெண்கள் ஒப்பாரி வைத்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க...ஆறு ஐஏஎஸ் அலுவலர்கள் இடமாற்றம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.