நாகப்பட்டினம் சட்டப்பேரவை தொகுதியில் இன்று(ஏப்ரல்.06) காலை முதல் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் நாகூரில் உள்ள நகராட்சி இஸ்லாமிய நடுநிலைப் பள்ளியில் அதிகாலை முதலே வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
அதனைத் தொடர்ந்து முகவர்கள் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரம் சீல் வைக்கப்பட்டது. பின்னர் வரிசையில் காத்திருந்த ஹஜ் கமிட்டி உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமான இஸ்லாமியர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். இதைப்போல் நகராட்சி பள்ளிக்கு வந்த ஏராளமான இஸ்லாமிய பெண்கள் ஆர்வத்துடன் தங்களது வாக்குகளை வாக்குப் பெட்டியில் பதிவு செய்தனர்.
இதையும் படிங்க: நாகைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்ற வாக்குப்பதிவு இயந்திரங்கள்!