நாகை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த செம்பனார்கோவில் அருகே காலகஸ்தினாபுரத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு பூம்புகார் தொகுதி எம்எல்ஏ பவுன்ராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து, அதிமுக நிர்வாகிகள் திரளானோர் மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து அவர், செம்பனார்கோயில் கடைவீதியில் வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆர் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் 100க்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: கோவையில் எம்ஜிஆர் 103ஆவது பிறந்தநாள்: அதிமுகவினர் மரியாதை