ETV Bharat / state

"சென்னையை விட மயிலாடுதுறையில் விபத்துகள் அதிகம்" - அமைச்சர் எ.வ.வேலு பேச்சு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 21, 2023, 12:35 PM IST

Road Accidents:தமிழக அரசு கிராமச் சாலைகளை தரமானதாக அமைக்க முன்னுரிமை அளித்து வருவதாகவும், சென்னையை விட மயிலாடுதுறையில் விபத்துகள் அதிகமாக நடைபெறுவது கண்டறியப்பட்டு உள்ளதாகவும் சாலை பாதுகாப்பு ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.

accidents
சென்னையை விட மயிலாடுதுறையில் விபத்துகள் அதிகம்
அமைச்சர் எ.வ.வேலு பேட்டி

மயிலாடுதுறை: தருமபுரம் ஆதீன கலைக் கல்லூரியில் சாலை பாதுகாப்பு ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தலைமையில் நடைபெற்றது. நெடுஞ்சாலைகள் துறை கூடுதல் தலைமைச் செயலர் பிரதீப்யாதவ், எம்.எல்.ஏ.க்கள் ராஜகுமார், நிவேதாமுருகன், பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்த கூட்டத்தில் பொதுப்பணிகள் மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டார்.

அப்போது பேசிய அவர், ‘சாலை விபத்துகள் ஏற்படுவதை தவிர்ப்பதற்கு அனைத்துத்துறை அதிகாரிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் ஓட்டுனர் உரிமம் வழங்கும்போது முறையாக தேர்வு செய்து உரிமம் வழங்க வேண்டும்.

பஸ்களில் படிகளில் தொங்கிக்கொண்டு மாணவர்கள் செல்வதை தவிர்க்க காவல்துறையினர் ஒத்துழைக்க வேண்டும். அதேபோல் ஆசிரியர்களும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு சாலை விதிமுறைகளையும் சொல்லிக்கொடுக்க வேண்டும்.

சென்னையில் சாலை விபத்துகள் 13 சதவிகிதம் நடக்கிறது ஆனால் சிறிய மாவட்டமான மயிலாடுதுறையில் 17 சதவிகிதம் சாலை விபத்துகள் நடக்கிறது. தமிழகத்தில் சாலை விபத்துகள் குறைவாக நடக்கும் முதல் மூன்று இடங்களை பெறும் மாவட்டங்களுக்கு தமிழக முதல்வர் நிதி ஒதுக்கீடு செய்கிறார். மயிலாடுதுறை மாவட்டம் விபத்து குறைவாக நடக்கும் மாவட்டமாக இடம்பெற அனைத்துத்துறை அதிகாரிகளும் பணியாற்ற வேண்டும்’ என்றார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து கூறியதாவது, ‘தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் சாலை தரத்தை உயர்த்த அரசு பணியாற்றி வருகிறது. மயிலாடுதுறை மாவட்டத்தை பொறுத்தவரையில் மாநில நெடுஞ்சொலை 160 கி.மீ, மாவட்ட முக்கிய சாலை 178 கி.மீ, மாவட்ட இதர சாலைகள் 471 கி.மீ. தேசிய நெடுஞ்சாலை 46 கி.மீ. என்று மொத்தம் 855 கி.மீ. சாலைகள் உள்ளது.

கிராமச் சாலைகள் அனைத்தும் தரமான சாலையாக உருவாக்க தமிழக முதலமைச்சர் ஆணைபிறப்பித்து 10 ஆயிரம் கி.மீ. முடிவு செய்து, கடந்த ஆண்டு 2 ஆயிரம் கி.மீ. தூரம் சாலைகள் மாவட்ட ஆட்சியர் பரிந்துரையில் எடுக்கப்பட்டது.

41 கோடி மதிப்பீட்டில் 31 கி.மீ. சாலை எடுக்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. நெடுஞ்சாலைத்துறை சார்பில் திட்டமதிப்பீடு தயார் செய்து அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. கிராமச்சாலைகளை தரமான சாலையாக அமைக்க முன்னுரிமை அளித்து வருகிறது.

2021-22 நிதியாண்டில் தரைப்பாலத்தை மேம்பாலமாக்க வேண்டுமென்ற முட்டம்-முடிகண்டநல்லூர் அணுகுசாலை அமைக்க நீண்டநாள் கோரிக்கை நிறைவேற்றி அரசுக்கு அனுப்பட்டுள்ளது. மாப்படுகை, நீடூர் ரயில்வே கேட் மேம்பாலம் நில எடுப்பதற்காக தலா 18 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நிலம் எடுக்கும் பணி முடிவடைந்ததும் பணிகள் தொடங்கும். மயிலாடுதுறை மாவட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமென்ற அடிப்படையில் முதலமைச்சர் நிதி ஒதுக்கீடு செய்து வருகிறார். சென்னை-கன்னியாகுமரி இரண்டு மாவட்டங்களை இணைக்கும் சாலை தமிழக அரசு பொறுப்பேற்று நிதிஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் விரைவாக நடந்து வருகிறது’ என்றார்.

இதையும் படிங்க:'அனைத்து அறிக்கைகளையும் தமிழில் வெளியிட கோரி வழக்கு’ - மாநில கடலோர மண்டலம் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

அமைச்சர் எ.வ.வேலு பேட்டி

மயிலாடுதுறை: தருமபுரம் ஆதீன கலைக் கல்லூரியில் சாலை பாதுகாப்பு ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தலைமையில் நடைபெற்றது. நெடுஞ்சாலைகள் துறை கூடுதல் தலைமைச் செயலர் பிரதீப்யாதவ், எம்.எல்.ஏ.க்கள் ராஜகுமார், நிவேதாமுருகன், பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்த கூட்டத்தில் பொதுப்பணிகள் மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டார்.

அப்போது பேசிய அவர், ‘சாலை விபத்துகள் ஏற்படுவதை தவிர்ப்பதற்கு அனைத்துத்துறை அதிகாரிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் ஓட்டுனர் உரிமம் வழங்கும்போது முறையாக தேர்வு செய்து உரிமம் வழங்க வேண்டும்.

பஸ்களில் படிகளில் தொங்கிக்கொண்டு மாணவர்கள் செல்வதை தவிர்க்க காவல்துறையினர் ஒத்துழைக்க வேண்டும். அதேபோல் ஆசிரியர்களும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு சாலை விதிமுறைகளையும் சொல்லிக்கொடுக்க வேண்டும்.

சென்னையில் சாலை விபத்துகள் 13 சதவிகிதம் நடக்கிறது ஆனால் சிறிய மாவட்டமான மயிலாடுதுறையில் 17 சதவிகிதம் சாலை விபத்துகள் நடக்கிறது. தமிழகத்தில் சாலை விபத்துகள் குறைவாக நடக்கும் முதல் மூன்று இடங்களை பெறும் மாவட்டங்களுக்கு தமிழக முதல்வர் நிதி ஒதுக்கீடு செய்கிறார். மயிலாடுதுறை மாவட்டம் விபத்து குறைவாக நடக்கும் மாவட்டமாக இடம்பெற அனைத்துத்துறை அதிகாரிகளும் பணியாற்ற வேண்டும்’ என்றார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து கூறியதாவது, ‘தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் சாலை தரத்தை உயர்த்த அரசு பணியாற்றி வருகிறது. மயிலாடுதுறை மாவட்டத்தை பொறுத்தவரையில் மாநில நெடுஞ்சொலை 160 கி.மீ, மாவட்ட முக்கிய சாலை 178 கி.மீ, மாவட்ட இதர சாலைகள் 471 கி.மீ. தேசிய நெடுஞ்சாலை 46 கி.மீ. என்று மொத்தம் 855 கி.மீ. சாலைகள் உள்ளது.

கிராமச் சாலைகள் அனைத்தும் தரமான சாலையாக உருவாக்க தமிழக முதலமைச்சர் ஆணைபிறப்பித்து 10 ஆயிரம் கி.மீ. முடிவு செய்து, கடந்த ஆண்டு 2 ஆயிரம் கி.மீ. தூரம் சாலைகள் மாவட்ட ஆட்சியர் பரிந்துரையில் எடுக்கப்பட்டது.

41 கோடி மதிப்பீட்டில் 31 கி.மீ. சாலை எடுக்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. நெடுஞ்சாலைத்துறை சார்பில் திட்டமதிப்பீடு தயார் செய்து அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. கிராமச்சாலைகளை தரமான சாலையாக அமைக்க முன்னுரிமை அளித்து வருகிறது.

2021-22 நிதியாண்டில் தரைப்பாலத்தை மேம்பாலமாக்க வேண்டுமென்ற முட்டம்-முடிகண்டநல்லூர் அணுகுசாலை அமைக்க நீண்டநாள் கோரிக்கை நிறைவேற்றி அரசுக்கு அனுப்பட்டுள்ளது. மாப்படுகை, நீடூர் ரயில்வே கேட் மேம்பாலம் நில எடுப்பதற்காக தலா 18 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நிலம் எடுக்கும் பணி முடிவடைந்ததும் பணிகள் தொடங்கும். மயிலாடுதுறை மாவட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமென்ற அடிப்படையில் முதலமைச்சர் நிதி ஒதுக்கீடு செய்து வருகிறார். சென்னை-கன்னியாகுமரி இரண்டு மாவட்டங்களை இணைக்கும் சாலை தமிழக அரசு பொறுப்பேற்று நிதிஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் விரைவாக நடந்து வருகிறது’ என்றார்.

இதையும் படிங்க:'அனைத்து அறிக்கைகளையும் தமிழில் வெளியிட கோரி வழக்கு’ - மாநில கடலோர மண்டலம் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.