ETV Bharat / state

மயிலாடுதுறையில் கூலித் தொழிலாளி வெட்டிப் படுகொலை!

author img

By

Published : Sep 8, 2020, 12:44 PM IST

மயிலாடுதுறையில் கூலித் தொழிலாளியை வெட்டிப் படுகொலை செய்த நபரை காவல் துறையினர் தேடிவருகின்றனர்.

மதிவாணன்
மதிவாணன்

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா கப்பூர் வடக்குத் தெருவைச் சேர்ந்த தம்பதியினர் மதிவாணன் (55) பூங்கோதை (47). இவர்களது மகன் கார்த்திக், அதே பகுதியில் உள்ள முன்னாள் ராணுவ வீரர் ரவியின் மகள் இலக்கியாவை காதலித்துள்ளார்.

இதனை அறிந்த ரவி தனது மகளை கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த இலக்கியா கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

இலக்கியாவின் திடீர் மரணத்தை தாங்க முடியாத ரவி, ஆத்திரமடைந்து தனது மகளின் மரணத்திற்கு கார்த்திக்தான் காரணம் என அவரைக் பழிதீர்க்க காத்திருந்தார்.

இந்நிலையில், நேற்று (செப்.07) நள்ளிரவு ரவி அவரது மகன் ஸ்ரீராம் உறவினரான பாலையூரை சேர்ந்த சதீஷ் ஆகிய மூவரும் சேர்ந்து கார்த்தியை கொலை செய்ய அவரது வீட்டிற்குச் சென்றுள்ளனர். ஆனால் வீட்டில் கார்த்திக் இல்லாததால் கார்த்திக்கின் பெற்றோரை அவர்கள் கொண்டுவந்த ஆயுதங்களால் சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இதில் சம்பவ இடத்திலே மதிவாணன் பரிதாபமாக உயிரிழந்தார்.

பூங்கோதை
பூங்கோதை

இது குறித்து தகவலறிந்த பெரம்பலூர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று மதிவாணன் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின் கைத்துண்டிக்கப்பட்ட நிலையில் இருந்த பூங்கோதையை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் ஆபத்தான நிலையில் அவர் இருப்பதினால் தற்போது அவரை திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுசென்றுள்ளனர்.

இதனை அடுத்து இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய ரவி, ஸ்ரீராம், சதீஷ் ஆகிய மூவரையும் தேடிவருகின்றனர். மேலும் இச்சம்பவத்தால் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: திண்டிவனத்தில் பெண் கழுத்தறுத்து படுகொலை!

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா கப்பூர் வடக்குத் தெருவைச் சேர்ந்த தம்பதியினர் மதிவாணன் (55) பூங்கோதை (47). இவர்களது மகன் கார்த்திக், அதே பகுதியில் உள்ள முன்னாள் ராணுவ வீரர் ரவியின் மகள் இலக்கியாவை காதலித்துள்ளார்.

இதனை அறிந்த ரவி தனது மகளை கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த இலக்கியா கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

இலக்கியாவின் திடீர் மரணத்தை தாங்க முடியாத ரவி, ஆத்திரமடைந்து தனது மகளின் மரணத்திற்கு கார்த்திக்தான் காரணம் என அவரைக் பழிதீர்க்க காத்திருந்தார்.

இந்நிலையில், நேற்று (செப்.07) நள்ளிரவு ரவி அவரது மகன் ஸ்ரீராம் உறவினரான பாலையூரை சேர்ந்த சதீஷ் ஆகிய மூவரும் சேர்ந்து கார்த்தியை கொலை செய்ய அவரது வீட்டிற்குச் சென்றுள்ளனர். ஆனால் வீட்டில் கார்த்திக் இல்லாததால் கார்த்திக்கின் பெற்றோரை அவர்கள் கொண்டுவந்த ஆயுதங்களால் சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இதில் சம்பவ இடத்திலே மதிவாணன் பரிதாபமாக உயிரிழந்தார்.

பூங்கோதை
பூங்கோதை

இது குறித்து தகவலறிந்த பெரம்பலூர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று மதிவாணன் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின் கைத்துண்டிக்கப்பட்ட நிலையில் இருந்த பூங்கோதையை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் ஆபத்தான நிலையில் அவர் இருப்பதினால் தற்போது அவரை திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுசென்றுள்ளனர்.

இதனை அடுத்து இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய ரவி, ஸ்ரீராம், சதீஷ் ஆகிய மூவரையும் தேடிவருகின்றனர். மேலும் இச்சம்பவத்தால் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: திண்டிவனத்தில் பெண் கழுத்தறுத்து படுகொலை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.