ETV Bharat / state

இளைஞர் கொலை வழக்கு - 4 பேரை விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு..! - Nagapattinam youth murder case

நாகப்பட்டினம்: முன்விரோதம் காரணமாக இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் நான்கு குற்றவாளிகளை காவல் துறையினர் காவலில் எடுத்து விசாரணை மேற்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மயிலாடுதுறை இளைஞர் கொலை வழக்கு நாகப்பட்டினம் இளைஞர் கொலை வழக்கு மயிலாடுதுறை இளைஞர் கொலை வழக்கு காவல் துறை காவல் விசாரணை Mayiladuthurai youth murder case Nagapattinam youth murder case Mayiladuthurai youth murder case Police Custody
Mayiladuthurai youth murder case
author img

By

Published : Jan 24, 2020, 6:00 PM IST

நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை வரதாச்சாரியார் தெருவை சேர்ந்தவர் மூக்கையன் மகன் மணிகண்டன்(26). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த முனுசாமி என்பவருக்குமிடையே டிரம்செட் வாசிப்பது, பன்றி வளர்த்து விற்பனை செய்வதில் முன்விரோதம் இருந்துவந்துள்ளது.

இந்நிலையில், கடந்த 18ஆம் தேதி இரவு மணிகண்டன், ரத்தினம் நகர் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது அவரை வழிமறித்து முனுசாமி, வீரைய்யன், ரங்கசாமி, பெரியண்ணன் ஆகியோர் அரிவாளால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டனர்.

இது குறித்து தகவலறிந்த மயிலாடுதுறை காவல் துறை ஆய்வாளர் சிங்காரவேலு தலைமையிலான காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மணிகண்டன் சடலத்தை கைப்பற்றி உடற்கூறாய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில், கடந்த 20ஆம் தேதி திருச்சி நீதிமன்றத்தில் முனுசாமி, வீரைய்யன், ரங்கசாமி, பெரியண்ணன் ஆகியோர் சரணடைந்தனர்.

குற்றவாளிகளை காவல் துறை விசாரணைக்கு கொண்டு வந்தனர்

அதனையடுத்து மயிலாடுதுறை காவல் துறையினர் முனுசாமி உள்ளிட்ட நான்கு பேரையும் மயிலாடுதுறை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ரிஷ்வானா பர்வீன் முன்னிலையில் ஆஜர்படுத்தி ஒருநாள் காவல் துறை காவலில் எடுத்து விசாரணை மேற்கொள்ள அனுமதிபெற்றனர். தொடர்ந்து மயிலாடுதுறை காவல் துறையினர் நான்கு பேரிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:

இருசக்கர வாகனத்தில் மோதிய அரசுப் பேருந்து- தாய், மகன் உயிரிழப்பு!

நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை வரதாச்சாரியார் தெருவை சேர்ந்தவர் மூக்கையன் மகன் மணிகண்டன்(26). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த முனுசாமி என்பவருக்குமிடையே டிரம்செட் வாசிப்பது, பன்றி வளர்த்து விற்பனை செய்வதில் முன்விரோதம் இருந்துவந்துள்ளது.

இந்நிலையில், கடந்த 18ஆம் தேதி இரவு மணிகண்டன், ரத்தினம் நகர் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது அவரை வழிமறித்து முனுசாமி, வீரைய்யன், ரங்கசாமி, பெரியண்ணன் ஆகியோர் அரிவாளால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டனர்.

இது குறித்து தகவலறிந்த மயிலாடுதுறை காவல் துறை ஆய்வாளர் சிங்காரவேலு தலைமையிலான காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மணிகண்டன் சடலத்தை கைப்பற்றி உடற்கூறாய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில், கடந்த 20ஆம் தேதி திருச்சி நீதிமன்றத்தில் முனுசாமி, வீரைய்யன், ரங்கசாமி, பெரியண்ணன் ஆகியோர் சரணடைந்தனர்.

குற்றவாளிகளை காவல் துறை விசாரணைக்கு கொண்டு வந்தனர்

அதனையடுத்து மயிலாடுதுறை காவல் துறையினர் முனுசாமி உள்ளிட்ட நான்கு பேரையும் மயிலாடுதுறை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ரிஷ்வானா பர்வீன் முன்னிலையில் ஆஜர்படுத்தி ஒருநாள் காவல் துறை காவலில் எடுத்து விசாரணை மேற்கொள்ள அனுமதிபெற்றனர். தொடர்ந்து மயிலாடுதுறை காவல் துறையினர் நான்கு பேரிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:

இருசக்கர வாகனத்தில் மோதிய அரசுப் பேருந்து- தாய், மகன் உயிரிழப்பு!

Intro:மயிலாடுதுறையில் முன்விரோத தகராறில் வாலிபர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் திருச்சி கோர்ட்டில் சரணடைந்த 4குற்றவாளிகளை மயிலாடுதுறை போலீசார் காவலில் எடுத்து விசாரணைBody:நாகை மாவட்டம் மயிலாடுதுறை வரதாச்சாரியார் தெருவை சேர்ந்தவர் மூக்கையன் மகன் மணிகண்டன்(26) இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த உறவினர் முனுசாமி என்பவருக்கும் இடையே டிரம்செட் வாசிப்பது, பன்றி வளர்த்து விற்பனை செய்வதில் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த 18ம் தேதி இரவு மணிகண்டன், ரத்தினம்நகர் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது அவரை வழிமறித்து முனுசாமி, வீரைய்யன், ரங்கசாமி, பெரியண்ணன் ஆகியோர் அரிவாளால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிசென்றுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை காவல்துறை ஆய்வாளர் சிங்காரவேலு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்த மணிகண்டன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில் கடந்த 20ம் தேதி திருச்சி கோர்ட்டில் முனுசாமி, வீரைய்யன், ரங்கசாமி, பெரியண்ணன் ஆகியோர் சரணடைந்தனர். அதனையடுத்து மயிலாடுதுறை போலீசார் முனுசாமி உள்ளிட்ட 4 பேரையும் மயிலாடுதுறை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ரிஷ்வானாபர்வீன் முன்னிலையில் ஆஜர்படுத்தி ஒருநாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை மேற்கொள்ள அனுமதிபெற்றனர். தொடர்ந்து மயிலாடுதுறை ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் சிங்காரவேலு மற்றும் போலீசார் குற்றவாளிகள் 4பேரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.