ETV Bharat / state

நடைபாதை வியாபாரிகள் தாக்கி காவலர் மண்டை உடைப்பு!

author img

By

Published : Jun 19, 2019, 9:58 AM IST

நாகப்பட்டினம்: மயிலாடுதுறை வண்டிக்காரத் தெருவில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியின் போது, நடைபாதை வியாபாரிகள் தாக்கியதில் சிறப்பு காவலர் ஒருவர் மண்டை உடைந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

police

மயிலாடுதுறை நகராட்சி பகுதிகளில் ஜூன் 12ஆம் தேதி முதல் நகராட்சி, நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் இணைந்து ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த 13ஆம் தேதி வண்டிக்காரத் தெருவில் ஆக்கிரமிப்பிலிருந்த சாலையோர கடைகள் அகற்றப்பட்டன. இதையடுத்து சாலையோர வியாபாரிகளுக்கு கடைகள் அமைத்துக் கொடுக்க நகராட்சி நிர்வாகம் அனுமதி அளிக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர்.

ஆனால், வண்டிக்காரத் தெருவில் தொடர்ந்து ஆக்கிரமிப்புகளும், நடைபாதைக்கடைகள் அதிகரித்ததால் இன்று நகராட்சி ஆணையர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில், காவல் ஆய்வாளர் டில்லி பாபு, காவல்துறையினர் பாதுகாப்புடன் புதிய பேருந்து நிலையத்திலிருந்து, வண்டிக்காரத் தெருவரை இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.

நடைபாதை வியாபாரிகள் தாக்கி காவலர் மண்டை உடைப்பு

அப்போது, நடைபாதை வியாபாரிகளுள் ஒருவர், பாதுகாப்புப் பணியிலிருந்த காவல் துறையினர் மீது எடைக்கல்லை வீசினார். அதில் சிறப்பு பாதுகாப்புப் படை காவலர் மணிகண்டன் என்பவர் தலையில் அடிபட்டு ரத்தம் கொட்டியது.

பின்னர், அடிபட்ட காவலரை சக காவலர்கள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர்.காவலர் தாக்கப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால், அங்கு 50க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டு, தொடர்ந்து வண்டிக்காரத் தெருவில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்றது.

காவலர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, நான்கு வியாபாரிகளை காவல்துறையினர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளைத் சேமித்து காவலரை தாக்கிய நபர் யார் எனக் காவல் துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

மயிலாடுதுறை நகராட்சி பகுதிகளில் ஜூன் 12ஆம் தேதி முதல் நகராட்சி, நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் இணைந்து ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த 13ஆம் தேதி வண்டிக்காரத் தெருவில் ஆக்கிரமிப்பிலிருந்த சாலையோர கடைகள் அகற்றப்பட்டன. இதையடுத்து சாலையோர வியாபாரிகளுக்கு கடைகள் அமைத்துக் கொடுக்க நகராட்சி நிர்வாகம் அனுமதி அளிக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர்.

ஆனால், வண்டிக்காரத் தெருவில் தொடர்ந்து ஆக்கிரமிப்புகளும், நடைபாதைக்கடைகள் அதிகரித்ததால் இன்று நகராட்சி ஆணையர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில், காவல் ஆய்வாளர் டில்லி பாபு, காவல்துறையினர் பாதுகாப்புடன் புதிய பேருந்து நிலையத்திலிருந்து, வண்டிக்காரத் தெருவரை இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.

நடைபாதை வியாபாரிகள் தாக்கி காவலர் மண்டை உடைப்பு

அப்போது, நடைபாதை வியாபாரிகளுள் ஒருவர், பாதுகாப்புப் பணியிலிருந்த காவல் துறையினர் மீது எடைக்கல்லை வீசினார். அதில் சிறப்பு பாதுகாப்புப் படை காவலர் மணிகண்டன் என்பவர் தலையில் அடிபட்டு ரத்தம் கொட்டியது.

பின்னர், அடிபட்ட காவலரை சக காவலர்கள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர்.காவலர் தாக்கப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால், அங்கு 50க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டு, தொடர்ந்து வண்டிக்காரத் தெருவில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்றது.

காவலர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, நான்கு வியாபாரிகளை காவல்துறையினர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளைத் சேமித்து காவலரை தாக்கிய நபர் யார் எனக் காவல் துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

Intro:மயிலாடுதுறை வண்டிக்காரத் தெருவில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியிலன் போது தரைக்கடை வியாபாரிகள் தாக்கியதில் சிறப்பு காவலர் மண்டை உடைந்ததால் பரபரப்பு:-


Body:நாகை மாவட்டம் மயிலாடுதுறை நகராட்சி பகுதிகளில் கடந்த 12ஆம் தேதி முதல் நகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இணைந்து ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 13ம் தேதி வண்டிக்காரத் தெருவில் ஆக்கிரமிப்பில் இருந்த சாலையோர கடைகள் அகற்றப்பட்டன. சாலையோர வியாபாரிகளுக்கு கடைகள் அமைத்து கொடுக்க நகராட்சி நிர்வாகம் அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். ஆனால் வண்டிக்காரத் தெருவில் தொடர்ந்து ஆக்கிரமிப்புகளும், தரைக்கடைகள் அதிகரித்ததால் இன்று நகராட்சி ஆணையர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் காவல் ஆய்வாளர் டில்லி பாபு தலைமையில் போலீசார் பாதுகாப்புடன் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து மீண்டும் ஆக்கிரமிப்பு செய்த வண்டிக்காரத் தெருவில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். அப்போது தரைக்கடை வியாபாரிகள் ஒருவர் தராசில் எடை கல்லால் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மீது வீசி எறிந்தார். அதில் சிறப்பு பாதுகாப்பு படை போலீசார் மணிகண்டன் என்பவர் நெற்றியில் அடிபட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். போலீசார் தாக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதால் அங்கு 50க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு வண்டி தெரு பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நகராட்சி ஊழியர்கள் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை தொடர்ந்து மேற்கொண்டனர். போலீசாரை தாக்கிய தொடர்பாக 4 பேரை போலீசார் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து போலீசாரை தாக்கியவர் மீது நடவடிக்கை எடுக்கும் பணியில் போலீசார் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.