ETV Bharat / state

தேர்தல் முடிந்தவுடன் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி?

நாகை: தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் முடிந்தவுடன், ஹைட்ரோகார்பன் திட்டத்தை மத்திய அரசு தீவிரமாக செயல்படுத்திவருகிறது. இதற்கு தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு கோரிக்கை வைத்துள்ளது.

author img

By

Published : May 14, 2019, 7:39 AM IST

தேர்தல் முடிந்தவுடன் ஹைட்ரோ திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி?

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் த.ஜெயராமன் இது குறித்து கூறியதாவது,

"தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் முடிந்தவுடன் மத்திய அரசு ஓ.என்.ஜி.சி., வேதாந்தா நிறுவனங்களுக்கும் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க சுற்றுச்சூழல் ஆய்வு அனுமதியை வழங்கியுள்ளது.

இதைக் கடுமையாக எதிர்க்க வேண்டிய தமிழ்நாடு அரசு மவுனம் சாதிக்கிறது, மத்திய மாநில அரசுகளின் இந்தப் போக்கு தமிழ்நாட்டு மக்களுக்கு ஏமாற்றத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ஹைட்ரோகார்பன் திட்டத்தை தமிழ்நாடு அரசு நிராகரிப்பதாக உடனடியாக அறிவிக்க வேண்டும். காவிரி படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தமிழ்நாடு அரசு அறிவிக்க வேண்டும்.

மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் பொதுக்குழு மே 19ஆம் தேதி ஹைட்ரோகார்பன் எதிர்ப்பு நடவடிக்கை குறித்து விவாதிக்க இருக்கிறது. பொதுக்குழுவில் போராட்ட வடிவங்கள் தீர்மானிக்கப்படும்" என அவர் தெரிவித்தார்

தேர்தல் முடிந்தவுடன் ஹைட்ரோ திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி?

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் த.ஜெயராமன் இது குறித்து கூறியதாவது,

"தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் முடிந்தவுடன் மத்திய அரசு ஓ.என்.ஜி.சி., வேதாந்தா நிறுவனங்களுக்கும் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க சுற்றுச்சூழல் ஆய்வு அனுமதியை வழங்கியுள்ளது.

இதைக் கடுமையாக எதிர்க்க வேண்டிய தமிழ்நாடு அரசு மவுனம் சாதிக்கிறது, மத்திய மாநில அரசுகளின் இந்தப் போக்கு தமிழ்நாட்டு மக்களுக்கு ஏமாற்றத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ஹைட்ரோகார்பன் திட்டத்தை தமிழ்நாடு அரசு நிராகரிப்பதாக உடனடியாக அறிவிக்க வேண்டும். காவிரி படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தமிழ்நாடு அரசு அறிவிக்க வேண்டும்.

மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் பொதுக்குழு மே 19ஆம் தேதி ஹைட்ரோகார்பன் எதிர்ப்பு நடவடிக்கை குறித்து விவாதிக்க இருக்கிறது. பொதுக்குழுவில் போராட்ட வடிவங்கள் தீர்மானிக்கப்படும்" என அவர் தெரிவித்தார்

தேர்தல் முடிந்தவுடன் ஹைட்ரோ திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி?
Intro:ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு கோரிக்கை. மே 19ஆம் தேதி பொதுக்குழுவை கூட்டி எதிர்ப்பு நடவடிக்கையை தீர்மானிக்க முடிவு:-


Body:ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நிராகரிப்பதாக அறிவிக்கவேண்டும். இத் திட்டத்தை கைவிடுமாறு மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் த.ஜெயராமன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:
தேர்தல் முடியும் வரை ஹைட்ரோ கார்பன் திட்டம் பற்றி மௌனமாக இருந்த மத்திய அரசு தேர்தல் முடிந்தவுடன் ஓஎன்ஜிசிக்கும்,வேதாந்தா நிறுவனத்திற்கும் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க சுற்றுச்சூழல் ஆய்வு அனுமதியை வழங்கியுள்ளது. இதை கடுமையாக எதிர்க்க வேண்டிய தமிழக அரசு மௌனம் சாதிக்கிறது மத்திய மாநில அரசுகளின் இந்தப் போக்கு தமிழக மக்களுக்கு ஏமாற்றத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. காவிரிப்படுகை தப்பிக்குமா? அல்லது ஹைட்ரோகார்பன் திட்டங்களால் ஒட்டுமொத்தமாக அளிக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஹைட்ரோ கார்பன் கிணறுகளுக்கு 5094 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் ஆய்வு அனுமதி வழங்கப்பட உடனே புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி புதுச்சேரி ஒன்றியத்துக்குள் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ள 2 சதுர கிலோ மீட்டர் நிலப் பகுதியில் கூட ஹைட்ரோகார்பன் கிணறுகளை அமைக்க அனுமதிக்க மாட்டேன் என்று அறிவித்துள்ளார். மீதமுள்ள 5092சதுர கிலோமீட்டர் தமிழகத்தில் காவிரி படுகையில் உள்ள நிலப்பரப்பு ஆகும் ஆனால் தமிழக அரசு எந்த எதிர்ப்பும் காட்டாமல் மௌனம் காக்கிறது ஹைட்ரோ கார்பன் திட்டம் பற்றிய தமிழக அரசின் நிலைப்பாடு என்ன என்று வெளிப்படையாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும். தமிழகத்தின் பெரிய அரசியல் கட்சிகள் அத்தனையும் தங்கள் தேர்தல் அறிக்கையில் காவிரி படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிப்போம் என்று மீத்தேன் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை அனுமதிக்க மாட்டோம் என்றும் இரண்டு முழக்கங்களை முன்வைத்துள்ளன அனைத்து கட்சிகளும் ஹைட்ரோகார்பன் திட்டத்தை கண்டனம் செய்துள்ளன கண்டனம் மட்டுமே போதாது அனைத்து கட்சிகளும் தங்கள் தொண்டர்களை போராட்டத்தில் ஈடுபடுத்த வேண்டும் என்று வேண்டுகிறோம் தமிழக அரசு ஹைட்ரோகார்பன் திட்டத்தை கைவிட கோரி மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் ஹைட்ரோகார்பன் திட்டத்தை தமிழக அரசு நிராகரிப்பதாக உடனடியாக அறிவிக்க வேண்டும் காவிரி படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும் மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் பொதுக்குழு வரும் 19ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஹைட்ரோகார்பன் எதிர்ப்பு நடவடிக்கை குறித்து விவாதிக்க இருக்கிறது பொதுக்குழுவில் போராட்ட வடிவங்கள் தீர்மானிக்கப்படும் என்றார்.

பேட்டி : ஜெயராமன். பேராசிரியர் மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு தலைமை ஒருங்கிணைப்பாளர்.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.