ETV Bharat / state

மத்திய அரசுக்கு எதிராக மனிதசங்கிலிப் போராட்டம்!

நாகை: ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக போராடும் மக்களின் உணர்வுகளை மத்திய அரசு புரிந்து கொள்ள வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.

author img

By

Published : Jun 23, 2019, 10:42 PM IST

human chain protest

டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு வேதாந்தா, ஓன்ஜிசி நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கு எதிராக டெல்டா மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் பல்வேறு பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி வழங்கிய மத்திய அரசைக் கண்டித்து விவசாயிகள், திமுகவினர், மனித நேய ஜனநாயக கட்சியினர், பொதுமக்கள் என பலர் நாகை - தூத்துக்குடி கிழக்கு கடற்கரை சாலையில் மனித சங்கிலிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு நடைபெற்ற இப்போராட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

மனிதசங்கிலி போராட்டம்

அப்போது பேசிய மனிதநேய மக்கள் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி, "போராட்டத்தில் ஈடுபடும் மக்களின் உணர்வுகளை மத்திய அரசு புரிந்துகொள்ள வேண்டும்" என்று தெரிவித்தார்.

டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு வேதாந்தா, ஓன்ஜிசி நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கு எதிராக டெல்டா மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் பல்வேறு பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி வழங்கிய மத்திய அரசைக் கண்டித்து விவசாயிகள், திமுகவினர், மனித நேய ஜனநாயக கட்சியினர், பொதுமக்கள் என பலர் நாகை - தூத்துக்குடி கிழக்கு கடற்கரை சாலையில் மனித சங்கிலிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு நடைபெற்ற இப்போராட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

மனிதசங்கிலி போராட்டம்

அப்போது பேசிய மனிதநேய மக்கள் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி, "போராட்டத்தில் ஈடுபடும் மக்களின் உணர்வுகளை மத்திய அரசு புரிந்துகொள்ள வேண்டும்" என்று தெரிவித்தார்.

Intro:ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாகையில் மனித சங்கிலி போராட்டம்.


Body:ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாகையில் மனித சங்கிலி போராட்டம்.

டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு வேதாந்த மற்றும் ஓன்ஜிசி நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

இந்தநிலையில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு விவசாயிகள் மற்றும் அரசியல் கட்சியினர் மத்தியில் தமிழகத்தில் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது, இந்த சூழலில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த துடிக்கும் மத்திய அரசை கண்டித்து, சாகர்மாலா உள்ளிட்ட பல்வேறு நாசகார திட்டங்களை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தி விவசாயிகள்,அரசியல் கட்சியினர் என பேதம் இன்றி ,நாகை- தூத்துக்குடி கிழக்குக்கு கடற்கரை சாலையில் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திராவிட முன்னேற்ற கழகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மனித நேய ஜனநாயக கட்சியினர், விவசாய அமைப்புகள் மனித சங்கிலி போராட்டத்தில் கலந்து கொண்டனர். இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்தில் மனித நேய ஜனநாயக கட்சியின் பொது செயலாளர் தமிமுன் அன்சாரி கலந்து கொண்டார். போராட்டத்தின் போது ஹைட்ரோகார்பன் திட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தியும் அனுமதி வழங்கிய மத்திய அரசை கண்டித்தும் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

இதேபோல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.