ETV Bharat / state

தரங்கம்பாடியில் ஜெர்மன் ஓவியக் கண்காட்சி - சீகன் பால்கு அருங்காட்சியகம்

நாகை: சீகன் பால்கு அருங்காட்சியகத்தில் ஜெர்மன் நாட்டவரின் சர்வதேச 'சுற்றுலா ஓவியக் கண்காட்சி' நடைபெற்றது.

nagapatinam
nagapatinam
author img

By

Published : Feb 9, 2020, 11:39 PM IST

நாகை மாவட்டம் தரங்கம்பாடியில் பார்த்தலோமியஸ் சீகன் பால்கு பன்முக பண்பாட்டு அருங்காட்சியகம் அமைந்துள்ளது. அதில், பல்வேறு நாடுகளுக்கு பயணம் செய்த மோரிஸ் குட்சோ என்பவரின் சுற்றுலா குறித்த ஓவியக் கண்காட்சி நடைபெற்றது. இதனை அருங்காட்சியக காப்பாட்சியர் ஜாஸ்மின் எப்டர் குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தார்.

இது குறித்து மோரிஸ் குட்சோவின் நண்பர் ரூட்ரிகோ ஜெப்பிரின் கூறுகையில், 'பல்வேறு நாடுகளின் பழங்கால கலாச்சாரங்களையும் தற்போதுள்ள கலாச்சாரங்களையும் அறிந்து அதனை ஓவியங்களாக வரைந்து காட்சிப்படுத்தி வருகிறோம்.

ஓவியக் கண்காட்சி

அதேப்போல் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த சீகன் பால்கு வாழ்ந்த தரங்கம்பாடியில் ஒருவாரம் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, சீகன்பால்கு காலத்தில் அவர் வரைந்த பழங்கால ஓவியங்களும் அவை தற்போது எவ்வாறு உருமாற்றமடைந்துள்ளது என்பதை புரிந்து கொள்ளும் வகையிலும் ஓவியங்களை வரைந்து அதனை இங்கு காட்சிபடுத்தியிருக்கிறோம்' என்றார்.

இக்கண்காட்சியில் பொதுமக்கள், ஓவியக்கல்லூரி மாணவர்கள், வெளிநாட்டவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: குடமுழுக்கு விழாவை அலங்கரிக்கும் பொன்னியின் செல்வன் ஓவியம்!

நாகை மாவட்டம் தரங்கம்பாடியில் பார்த்தலோமியஸ் சீகன் பால்கு பன்முக பண்பாட்டு அருங்காட்சியகம் அமைந்துள்ளது. அதில், பல்வேறு நாடுகளுக்கு பயணம் செய்த மோரிஸ் குட்சோ என்பவரின் சுற்றுலா குறித்த ஓவியக் கண்காட்சி நடைபெற்றது. இதனை அருங்காட்சியக காப்பாட்சியர் ஜாஸ்மின் எப்டர் குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தார்.

இது குறித்து மோரிஸ் குட்சோவின் நண்பர் ரூட்ரிகோ ஜெப்பிரின் கூறுகையில், 'பல்வேறு நாடுகளின் பழங்கால கலாச்சாரங்களையும் தற்போதுள்ள கலாச்சாரங்களையும் அறிந்து அதனை ஓவியங்களாக வரைந்து காட்சிப்படுத்தி வருகிறோம்.

ஓவியக் கண்காட்சி

அதேப்போல் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த சீகன் பால்கு வாழ்ந்த தரங்கம்பாடியில் ஒருவாரம் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, சீகன்பால்கு காலத்தில் அவர் வரைந்த பழங்கால ஓவியங்களும் அவை தற்போது எவ்வாறு உருமாற்றமடைந்துள்ளது என்பதை புரிந்து கொள்ளும் வகையிலும் ஓவியங்களை வரைந்து அதனை இங்கு காட்சிபடுத்தியிருக்கிறோம்' என்றார்.

இக்கண்காட்சியில் பொதுமக்கள், ஓவியக்கல்லூரி மாணவர்கள், வெளிநாட்டவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: குடமுழுக்கு விழாவை அலங்கரிக்கும் பொன்னியின் செல்வன் ஓவியம்!

Intro:50 நாடுகளில் சுற்றுபயணம் செய்த ஜெர்மன் நாட்டவரின் சர்வதேச சுற்றுலா ஒவிய கண்காட்சி. வெளிநாட்டவர்கள், பொதுமக்கள்,மாணவர்கள் பார்வையிட்டனர்:-
Body:50 நாடுகளில் சுற்றுபயணம் செய்த ஜெர்மன் நாட்டவரின் சர்வதேச சுற்றுலா ஒவிய கண்காட்சி. வெளிநாட்டவர்கள், பொதுமக்கள்,மாணவர்கள் பார்வையிட்டனர்:-

நாகை மாவட்டம் தரங்கம்பாடியில் முதல் தமிழ் அச்சுக்கூடத்தை உருவாக்கிய ஜெர்மன் நாட்டை சேர்ந்த பார்த்தலோமியஸ் சீகன் பால்கு வாழ்ந்த பன்முக பண்பாட்டு அருங்காட்சியகம் உள்ளது.

இங்கு பல்வேறு நாடுகளில் ஒவிய கண்காட்சியை நடத்திய ஜெர்மன் நாட்டவரின் சர்வதேச சுற்றுலா ஒவிய கண்காட்சி நடைபெற்றது.

கண்காட்சியை அருங்காட்சியக காப்பாட்சியர் ஜாஸ்மின் எப்டர் குத்துவிளக்கு ஏற்றி துவங்கி வைத்தார். ஜெர்மன் நாட்டை சேர்ந்த மோரிஸ் குட்சோ அவரது நண்பர் ரூட்ரிகோ ஜெப்பிரின் ஆகியோர் சர்வதேச ஒவிய கண்காட்சியை நாடு முழுவதும் நடத்தி வருகின்றனர்.

ஒவ்வொரு நாட்டிலும் உள்ள பழங்கால கலாச்சாரங்களையும் தற்போது உள்ள கலாச்சாரங்களையும் அறிந்து அதை ஓவியங்களாக வரைந்து காட்சி படுத்தி வருகின்றனர். இதுவரை 50 நாடுகளில் சுற்றுபயணம் மேற்கொண்டு அந்தந்த நாடுகளின் பழைய மற்றும் புதிய கலாச்சாரங்களை தங்களின் ஒவியங்கள் மூலம் வெளிபடுத்துவதாகவும் கூறினர். ஜெர்மனி நாட்டை சேர்ந்த சீகன் பால்கு வாழ்ந்த தரங்கம்பாடியில் தற்போது ஒருவாரம் சுற்றுப்பயணம் மேற்கொண்டு சீகன்பால்கு காலத்திலுள்ள அவர் வரைந்த ஓவியங்கள், மற்றும் பழங்காலம் எவ்வாறு இருந்தது தற்போதைய மக்களின் வாழ்க்கை எவ்வாறு மாறி உள்ளது என்பதை அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் ஒவியங்கள் வரைந்து காட்சிபடுத்தி வருவதாகவும் தெரிவித்தனர்.
அதனைத்தொடர்ந்து அவர்கள் வரைந்த ஓவியங்களை தரங்கம்பாடி சீகன்பால்கு வாழ்ந்த இல்லத்தில் கண்காட்சியாக வைத்துள்ளனர். அந்த ஒவியங்களை ஏராளமான பொதுமக்கள், ஓவியக்கல்லூரி மாணவர்கள், வெளிநாட்டவர்கள் என பலரும் ஆர்வமுடன் பார்வையிட்டனர்.


பேட்டி: மோரிஸ் குட்சோ ஜெர்மன் ஒவியர்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.