ETV Bharat / state

பயிரிடப்பட்ட மலர்கள், காய்கறிகள் பாதிப்பு: விவசாயிகள் வேதனை - farmers issue at mayiladuthurai

சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றுப்படுகை கிராமங்களில் உபரி நீர் சென்றதாலும், வெள்ள நீர் தேங்கியதாலும் 300 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த மலர்கள், காய்கறிகள் பாதிப்படைந்துள்ளது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

farmers issue at mayiladuthurai
பயிரிடப்பட்ட மலர்கள், காய்கறிகள் பாதிப்பு: விவசாயிகள் வேதனை
author img

By

Published : Dec 4, 2021, 6:30 PM IST

மயிலாடுதுறை: சீர்காழியை அடுத்த கொள்ளிடம் ஆற்றுப்படுகையில் அமைந்துள்ள கிராமங்களான சந்தைப்படுகை, நாதல்படுகை, முதலைமேடு திட்டு, திட்டுபடுகை, நாணல்படுகை உள்ளிட்ட கிராமங்களில் 300 ஏக்கர் பரப்பளவில் மல்லிகை, முல்லை, காக்கட்டான் உள்ளிட்ட மலர் வகைகளும் மிளகாய், வெண்டை, கத்தரி ,புடலங்காய்,கீரை உள்ளிட்ட காய்கறி வகைகள் பயிரிடப்பட்டு வருகிறது.

மலர், காய்கறி சாகுபடி

இப்பகுதியிலுள்ள ஒவ்வொரு வீட்டின் கொல்லைப் புறங்களிலும், தங்களது நிலங்களிலும் காய்கறி மற்றும் மலர் சாகுபடியை சிறு விவசாயிகள் குடும்பத்தினரோடு செய்து வருகின்றனர். சம்பா சாகுபடி பாதிக்கப்படுவதால் இப்பகுதி முழுவதும் பெரும்பாலும் மலர் மற்றும் காய்கறி சாகுபடியை நம்பியுள்ளனர்.

பயிர்கள் பாதிப்பு

நாள்தோறும் மலர் மற்றும் காய்கறிகளை பறித்து நகர் பகுதிக்கு கொண்டு சென்று வியாபாரிகளிடமும் மற்றும் பொதுமக்களிடம் நேரடி விற்பனை செய்து சிறு விவசாயிகள் வருமானம் ஈட்டிவந்தனர். இந்நிலையில், கடந்த ஒரு மாதமாக கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்பட்ட உபரி நீராலும் இப்பகுதியில் பெய்த மழை நீர் கொள்ளிடம் ஆற்றில் வடியாததாலும் பயிர்கள் பாதிக்கபட்டது.

பயிரிடப்பட்ட மலர்கள், காய்கறிகள் பாதிப்பு: விவசாயிகள் வேதனை

பாதிப்படைந்த செடிகள்

அதே நேரம் அதிகப்படியான உபரிநீர் திறப்பால் படுகை கிராமங்களிலும் வெள்ளநீர் புகுந்ததால் 300 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த மலர்கள் மற்றும் காய்கறிகள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கியது. ஒரு வார காலத்திற்கு மேலாக வெள்ளநீரில் பயிர்கள் மூழ்கியிருந்தது. தற்போது தண்ணீர் வடிந்ததும் மழை ஓய்ந்த நிலையில் செடிகள் அனைத்துமே அழுகி கருகியுள்ளது.

விவசாயிகள் தவிப்பு

மல்லிகை,முல்லை,காக்கட்டான் உள்ளிட்ட செடிகள் அழுகிய நிலையில், எஞ்சிய செடிகளில் பூக்களும் சிறுத்து போனதால் இப்பகுதி விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். மலர்ச்செடிகள் வைத்து இரண்டு ஆண்டுகள் பராமரித்த பின்னரே அதில் இருந்த பலன்களை பெறமுடியும் என்ற நிலையில், தற்போது இரண்டு ஆண்டுகள் பராமரித்து அனைத்து செடிகளும் வெள்ள நீரில் மூழ்கி அழிந்து போனதால் மீண்டும் சாகுபடியை எப்படி செய்வது என தெரியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.

அரசுக்கு கோரிக்கை

கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா தொற்றால் மலர் சாகுபடி போதிய பலன் தராத நிலையில் தற்போது பூக்களின் விலை 1000 முதல் 1500 வரை உயர்ந்த நிலையிலும் தங்களால் எந்த பலனும் பெற முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டு உள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர்.

தங்கள் பகுதியின் வழியே உபரி நீர் செல்லும்போது கிராமத்திற்குள் பாதிப்பு ஏற்படாதவாறு தடுக்கவும் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் மலர் செடிகளும் காய்கறி விதைகளும் தோட்டக்கலைத்துறை மூலம் மானியமாக அரசு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் பாதிக்கப்பட்ட அனைத்து மலர்ச்செடிகள் மற்றும் காய்கறிகள் குறித்து ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:Nannilam Flood: வாஞ்சியாற்று உடைப்பால் பயிர்கள் சேதம் - விவசாயிகள் வேதனை

மயிலாடுதுறை: சீர்காழியை அடுத்த கொள்ளிடம் ஆற்றுப்படுகையில் அமைந்துள்ள கிராமங்களான சந்தைப்படுகை, நாதல்படுகை, முதலைமேடு திட்டு, திட்டுபடுகை, நாணல்படுகை உள்ளிட்ட கிராமங்களில் 300 ஏக்கர் பரப்பளவில் மல்லிகை, முல்லை, காக்கட்டான் உள்ளிட்ட மலர் வகைகளும் மிளகாய், வெண்டை, கத்தரி ,புடலங்காய்,கீரை உள்ளிட்ட காய்கறி வகைகள் பயிரிடப்பட்டு வருகிறது.

மலர், காய்கறி சாகுபடி

இப்பகுதியிலுள்ள ஒவ்வொரு வீட்டின் கொல்லைப் புறங்களிலும், தங்களது நிலங்களிலும் காய்கறி மற்றும் மலர் சாகுபடியை சிறு விவசாயிகள் குடும்பத்தினரோடு செய்து வருகின்றனர். சம்பா சாகுபடி பாதிக்கப்படுவதால் இப்பகுதி முழுவதும் பெரும்பாலும் மலர் மற்றும் காய்கறி சாகுபடியை நம்பியுள்ளனர்.

பயிர்கள் பாதிப்பு

நாள்தோறும் மலர் மற்றும் காய்கறிகளை பறித்து நகர் பகுதிக்கு கொண்டு சென்று வியாபாரிகளிடமும் மற்றும் பொதுமக்களிடம் நேரடி விற்பனை செய்து சிறு விவசாயிகள் வருமானம் ஈட்டிவந்தனர். இந்நிலையில், கடந்த ஒரு மாதமாக கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்பட்ட உபரி நீராலும் இப்பகுதியில் பெய்த மழை நீர் கொள்ளிடம் ஆற்றில் வடியாததாலும் பயிர்கள் பாதிக்கபட்டது.

பயிரிடப்பட்ட மலர்கள், காய்கறிகள் பாதிப்பு: விவசாயிகள் வேதனை

பாதிப்படைந்த செடிகள்

அதே நேரம் அதிகப்படியான உபரிநீர் திறப்பால் படுகை கிராமங்களிலும் வெள்ளநீர் புகுந்ததால் 300 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த மலர்கள் மற்றும் காய்கறிகள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கியது. ஒரு வார காலத்திற்கு மேலாக வெள்ளநீரில் பயிர்கள் மூழ்கியிருந்தது. தற்போது தண்ணீர் வடிந்ததும் மழை ஓய்ந்த நிலையில் செடிகள் அனைத்துமே அழுகி கருகியுள்ளது.

விவசாயிகள் தவிப்பு

மல்லிகை,முல்லை,காக்கட்டான் உள்ளிட்ட செடிகள் அழுகிய நிலையில், எஞ்சிய செடிகளில் பூக்களும் சிறுத்து போனதால் இப்பகுதி விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். மலர்ச்செடிகள் வைத்து இரண்டு ஆண்டுகள் பராமரித்த பின்னரே அதில் இருந்த பலன்களை பெறமுடியும் என்ற நிலையில், தற்போது இரண்டு ஆண்டுகள் பராமரித்து அனைத்து செடிகளும் வெள்ள நீரில் மூழ்கி அழிந்து போனதால் மீண்டும் சாகுபடியை எப்படி செய்வது என தெரியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.

அரசுக்கு கோரிக்கை

கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா தொற்றால் மலர் சாகுபடி போதிய பலன் தராத நிலையில் தற்போது பூக்களின் விலை 1000 முதல் 1500 வரை உயர்ந்த நிலையிலும் தங்களால் எந்த பலனும் பெற முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டு உள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர்.

தங்கள் பகுதியின் வழியே உபரி நீர் செல்லும்போது கிராமத்திற்குள் பாதிப்பு ஏற்படாதவாறு தடுக்கவும் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் மலர் செடிகளும் காய்கறி விதைகளும் தோட்டக்கலைத்துறை மூலம் மானியமாக அரசு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் பாதிக்கப்பட்ட அனைத்து மலர்ச்செடிகள் மற்றும் காய்கறிகள் குறித்து ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:Nannilam Flood: வாஞ்சியாற்று உடைப்பால் பயிர்கள் சேதம் - விவசாயிகள் வேதனை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.