ETV Bharat / state

அடிப்படை வசதி செய்து தராததால் அரசுப் பேருந்தை சிறைபிடித்த பொதுமக்கள்!

நாகை: மயிலாடுதுறை அருகே அடிப்படை வசதி செய்து தராத ஊராட்சி ஒன்றியத்தை கண்டித்து அப்பகுதி மக்கள் அரசுப் பேருந்தை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

author img

By

Published : Nov 22, 2019, 11:03 PM IST

naagai

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகேயுள்ள பொன்வாசநல்லூர் கிராமத்தில் அடிப்படை வசதிகள் செய்து தராத ஊராட்சி ஒன்றியத்தை கண்டிக்கும் விதமாக அப்பகுதி மக்கள் அரசுப் பேருந்தை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் ஆனந்ததாண்டவபுரத்திலிருந்து சேத்தூர் வரையுள்ள 5 கி.மீ சாலை சரியில்லாதது கண்டித்தும், பொன்வாசநல்லூர் கிராமத்தில் அடிப்படை வசதி செய்து தராத ஊராட்சி ஒன்றியத்தை கண்டித்தும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தனர். அத்துடன் 2018-19ஆம் ஆண்டிற்கான நிலுவை பயிர் காப்பீட்டு தொகையை உடனடியாக வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.

அரசுப் பேருந்தை சிறைபிடித்த பொதுமக்கள்

தகவலறிந்து அங்கு விரைந்த வட்டாட்சியர் முருகானந்தம், அவர்களிடம் அமைதியான பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

இதையும் படிங்க: ஒரு பைசா செலவில்லாமல் பெண்களுக்கான இலவச பேருந்து சேவை!

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகேயுள்ள பொன்வாசநல்லூர் கிராமத்தில் அடிப்படை வசதிகள் செய்து தராத ஊராட்சி ஒன்றியத்தை கண்டிக்கும் விதமாக அப்பகுதி மக்கள் அரசுப் பேருந்தை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் ஆனந்ததாண்டவபுரத்திலிருந்து சேத்தூர் வரையுள்ள 5 கி.மீ சாலை சரியில்லாதது கண்டித்தும், பொன்வாசநல்லூர் கிராமத்தில் அடிப்படை வசதி செய்து தராத ஊராட்சி ஒன்றியத்தை கண்டித்தும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தனர். அத்துடன் 2018-19ஆம் ஆண்டிற்கான நிலுவை பயிர் காப்பீட்டு தொகையை உடனடியாக வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.

அரசுப் பேருந்தை சிறைபிடித்த பொதுமக்கள்

தகவலறிந்து அங்கு விரைந்த வட்டாட்சியர் முருகானந்தம், அவர்களிடம் அமைதியான பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

இதையும் படிங்க: ஒரு பைசா செலவில்லாமல் பெண்களுக்கான இலவச பேருந்து சேவை!

Intro:மயிலாடுதுறை அருகே பொன்வாசநல்லூரில் கிராம மக்கள் அரசு பேருந்தை சிறைபிடித்து சாலை மறியல்:-Body:நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே பொன்வாசநல்லூரில் கிராம மக்கள் பேருந்து சிறை பிடித்து சாலை மறியிலில் ஈடுபட்டனர். 2018 -19 ஆம் ஆண்டிற்கான நிலுவையில் உள்ள பயிர் காப்பீட்டு தொகையை உடனடியாக வழங்க கோரியும், ஆனந்ததாண்டவபுரத்திலிருந்து சேத்தூர் வரை 5 கீ.மி சாலை சரியில்லாதது கண்டித்தும், பொன்வாசநல்லூர் கிராமத்தில் அடிப்படை வசதி செய்து தராத ஊராட்சி ஒன்றியத்தை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் கிடைத்து வந்த தாசில்தார் முருகானந்தம் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.