ETV Bharat / state

கரோனா மையமாக மாறிய தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரி!

author img

By

Published : May 16, 2021, 1:26 PM IST

தருமபுர ஆதீன மடத்தின் சார்பில், தினசரி 2,000 பேருக்கு கபசுர குடிநீர் வழங்கும் திட்டத்தை மடாதிபதி தொடங்கி வைத்தார்.

Dharmapuram Adhinam
தருமபுரம் ஆதீனம்

மயிலாடுதுறை: கரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்ட தருமபுர ஆதீனம் கலைக் கல்லூரியை தருமபுர மடாதிபதி திறந்து வைத்தார்.

கரோனா சிகிச்சை பெறுவதற்கு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் 780 படுக்கை வசதிகள், கரோனா சிறப்பு சிகிச்சை மையத்தில் 70 படுக்கை வசதிகள் உள்ளன. தொற்று பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருவதால் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான தருமபுர ஆதீனம் கலைக் கல்லூரியை கரோனா சிகிச்சைக்கு பயன்படுத்திக்கொள்ள ஆதீனம் சம்மதம் தெரிவித்திருந்தார்.

தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரி

அதன்படி கல்லூரியில் 100 படுக்கை வசதிகள் கொண்ட கரோனா சிகிச்சை மையம் இன்று (மே.16) தொடங்கப்பட்டுள்ளது. இதனை திறந்து வைத்து, பார்வையிட்ட தருமை ஆதின 27வது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், அந்த சிகிச்சை மையத்தை மயிலாடுதுறை அரசு தலைமை மருத்துவர் ராஜசேகரிடம் ஒப்படைத்தார்.

முன்னதாக தருமபுர ஆதீன மடத்தின் சார்பில், தினசரி 2,000 பேருக்கு கபசுர குடிநீர் வழங்கும் திட்டத்தை மடாதிபதி தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தருமபுர ஆதீனம் சார்பில் 11 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் கரோனா நிவாரண நிதிக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆதீனத்திற்குச் சொந்தமான திருக்கடையூர், சீர்காழி, வைத்தீஸ்வரன்கோயில், திருப்பனந்தாள், திருவையாறு, திருபுவனம் உள்ளிட்ட ஆலயங்கள் சார்பில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது என்றார்

இதையும் படிங்க: கரோனா தொற்று: உதவிக்கு முந்தும் சோனு சூட்!

மயிலாடுதுறை: கரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்ட தருமபுர ஆதீனம் கலைக் கல்லூரியை தருமபுர மடாதிபதி திறந்து வைத்தார்.

கரோனா சிகிச்சை பெறுவதற்கு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் 780 படுக்கை வசதிகள், கரோனா சிறப்பு சிகிச்சை மையத்தில் 70 படுக்கை வசதிகள் உள்ளன. தொற்று பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருவதால் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான தருமபுர ஆதீனம் கலைக் கல்லூரியை கரோனா சிகிச்சைக்கு பயன்படுத்திக்கொள்ள ஆதீனம் சம்மதம் தெரிவித்திருந்தார்.

தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரி

அதன்படி கல்லூரியில் 100 படுக்கை வசதிகள் கொண்ட கரோனா சிகிச்சை மையம் இன்று (மே.16) தொடங்கப்பட்டுள்ளது. இதனை திறந்து வைத்து, பார்வையிட்ட தருமை ஆதின 27வது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், அந்த சிகிச்சை மையத்தை மயிலாடுதுறை அரசு தலைமை மருத்துவர் ராஜசேகரிடம் ஒப்படைத்தார்.

முன்னதாக தருமபுர ஆதீன மடத்தின் சார்பில், தினசரி 2,000 பேருக்கு கபசுர குடிநீர் வழங்கும் திட்டத்தை மடாதிபதி தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தருமபுர ஆதீனம் சார்பில் 11 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் கரோனா நிவாரண நிதிக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆதீனத்திற்குச் சொந்தமான திருக்கடையூர், சீர்காழி, வைத்தீஸ்வரன்கோயில், திருப்பனந்தாள், திருவையாறு, திருபுவனம் உள்ளிட்ட ஆலயங்கள் சார்பில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது என்றார்

இதையும் படிங்க: கரோனா தொற்று: உதவிக்கு முந்தும் சோனு சூட்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.