ETV Bharat / state

கரோனா சித்த மருத்துவச் சிகிச்சை மையம் திறப்பு!

author img

By

Published : May 26, 2021, 8:31 AM IST

மயிலாடுதுறை: கரோனா சித்த மருத்துவச் சிகிச்சை மையத்தை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் திறந்து வைத்தார்.

corona paranoid medical treatment center
கரோனா சித்த மருத்துவ சிகிச்சை மையம் திறப்பு

மயிலாடுதுறை மாவட்டம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள ஆதிதிராவிடர் நல விடுதியில், புதிதாக ஏற்படுத்தப்பட்ட கரோனா சித்த மருத்துவச் சிகிச்சை மையத்தை சுற்றுச்சூழல்துறை அமைச்சர் மெய்யநாதன் திறந்து வைத்து பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, "மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 2 நாள்களாக கரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளது. தொற்றிலிருந்து முழுவதுமாக விடுபட தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மயிலாடுதுறை அரசினர் மருத்துவமனையில் 6 டன் ஆக்ஸிஜன் டேங்க் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மருத்துவமனைக்கு தேவையான திரவ ஆக்ஸிஜன் தட்டுப்பாடின்றி கிடைக்கும்.

கரோனா சித்த மருத்துவச் சிகிச்சை மையம் திறப்பு

கரோனா தொற்று பாதிப்பின் தொடர்ச்சியாக, கருப்பு பூஞ்சை, வெள்ளை பூஞ்சை, மஞ்சள் பூஞ்சை போன்ற தொற்று வருகிறது. இவற்றில் இருந்து நாம் முற்றிலும் விடுபட ஒரே பேராயுதம் தடுப்பூசி மட்டுமே. எனவே அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க: ’கன்னியாகுமரி மாவட்டத்தில் கன மழை பெய்யும்’ - சென்னை வானிலை ஆய்வு மையம்

மயிலாடுதுறை மாவட்டம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள ஆதிதிராவிடர் நல விடுதியில், புதிதாக ஏற்படுத்தப்பட்ட கரோனா சித்த மருத்துவச் சிகிச்சை மையத்தை சுற்றுச்சூழல்துறை அமைச்சர் மெய்யநாதன் திறந்து வைத்து பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, "மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 2 நாள்களாக கரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளது. தொற்றிலிருந்து முழுவதுமாக விடுபட தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மயிலாடுதுறை அரசினர் மருத்துவமனையில் 6 டன் ஆக்ஸிஜன் டேங்க் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மருத்துவமனைக்கு தேவையான திரவ ஆக்ஸிஜன் தட்டுப்பாடின்றி கிடைக்கும்.

கரோனா சித்த மருத்துவச் சிகிச்சை மையம் திறப்பு

கரோனா தொற்று பாதிப்பின் தொடர்ச்சியாக, கருப்பு பூஞ்சை, வெள்ளை பூஞ்சை, மஞ்சள் பூஞ்சை போன்ற தொற்று வருகிறது. இவற்றில் இருந்து நாம் முற்றிலும் விடுபட ஒரே பேராயுதம் தடுப்பூசி மட்டுமே. எனவே அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க: ’கன்னியாகுமரி மாவட்டத்தில் கன மழை பெய்யும்’ - சென்னை வானிலை ஆய்வு மையம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.